இந்தப்பதிவை உங்கள் எல்லோருக்கும் சொல்வதாக நினைத்துக் கொள்ளுங்கள். தங்களுக்குத் தெரிந்த சில சமூக விரோதிகளை அவர் களின் வக்ர புத்தியை எனது பார்வைக்கு கொண்டு வந்து அதை பதிவு பண்ணுங்கள் என்று என்னிடம் இரண்டு பேர் சொன்னார்கள். கேடுகெட்ட வக்ரபுத்தி மனிதர்களைப் பற்றி தொடர்ந்து ஏன் பேசவேண்டும். பேசக்கூட தகுதியில்லாதவர்கள் லிஸ்டில் அவர்களை நாம் சேர்த்து விடலாம். அதனால் உங்களுக்குத் தெரிந்த மிருகங்களைப் பற்றி பதிவு செய்யும் முயற்சியில் உங்கள் நேரத்தையும் எனது நேரத்தையும் வீணடிக்க வேண்டாம் என்பது எனது கருத்து.
இதற்கு முன்பாக சில விஷயங்களை நான் பதிவு செய்யக் காரணம் - அனுபவமில்லாத சின்னஞ் சிறுசுகள் சிலரது வலையில் விழுந்து ஏமாந்து விடுகிறார்கள். அவர்களை எச்சரிக்கவே அந்தப் பதிவு. ஆண்பெண் பழக்கம் தவிர்க்க முடியாத ஒன்று.
ஒரு ஆணிடம் ஒரு பெண்ணை ஏன் ஒப்படைக்கிறார்கள் ? எல்லா சூழ்நிலை யிலும் அந்தப் பெண்ணுக்கு அவன் காவலாக இருக்க வேண்டும் என்பதற்காக த்தான். மெரிட்டி இல்லாத பெண்கள் ஒரு சிலர் வலையில் வெகு சுலபமாக விழுந்து விடுகிறார்கள். ஒரு பெண்ணின் நட்பைப் பெற கூலிக்கார நாய்களை அனுப்பி வம்பு செய்ய வைத்துவிட்டு உதவிக்கு ஓடுவது போல நாடகமாடும் மனிதர்களிடம் வெகு எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பதற்காக சில விஷயங்களை பதிவு செய்தேன்.
இந்த மாதிரி ஆண்கள் ஒரு பெண்ணை தங்கள் தேவைக்காக விலை பேச மாட்டார்கள் என்பது என்ன நிச்சயம்? ஒரு பெண்ணுக்கு ஒரு அவமானம் என்றால் அதற்காக உயிரைக் கொடுக்கிறவன் உண்மையான ஆண்மகன். கூலிவேலை செய்து கவுரவமாக பிழைக்கிறவர்களின் தொழிலையே மாற்றுபவன் என்ன மாதிரியான ஆண்மகன்? தாய்க்கும் தாரத்துக்கும் வித்தியாசம் தெரியாத சில ஈனப்பிறவிகள் எங்கும் உண்டு.
தாங்கள் செய்கிற அயோக்கியத்தனத்துக்குக் கூட அடுத்தவர்கள் மீது பழி போட்டு தப்பிக்க நினைக்கும் கேவலமான மனிதர்கள் எங்கும் இருக்கி றார்கள். ஒரு நல்லதாய்க்கு மகனாகப் பிறந்தவனுக்கு இந்த மாதிரி செய்கைகள் கனவில் கூட வராது.
ஒரு பேடிக்கு தோழியாக இருப்பதைவிட ஒரு நல்ல ஆண்மகனுக்கு விதவை யாக இருப்பது கவுரவமான செயல் என்பார்கள்.
குறுக்குவழியில் லாபம் தேடுகிற, மாட்டிக்கொள்ளும்போது அடுத்தவன் தலையில் பழி போடுகிற மனிதர்களை அடையாளம் கண்டு கொள்ள ஒரு எச்சரிக்கை மணியாக சில பதிவுகள் வெளியாகின.
எனக்குத் தெரிந்த டிடெக்ட்டிவ் ஒருவர் கேடுகெட்ட மனிதர்களைப் பற்றி கதைகதையாக சொல்வார்.
நல்லகுடும்பத்துப் பெண்கள் இதுபோல மாட்டிக் கொள்ளக்கூடாது என்பதற்கான பதிவே தவிர, தொடர்ந்து சில சாக்கடைகளைப் பற்றி பேசி இந்தப்பகுதியை தாழ்த்திக் கொள்ள வேண்டாம் என்று நினைக்கிறேன்.
மீடியாக்கள் நிறைய விஷயங்களை படம் பிடித்து காட்டுகிறதே. அதைவிட பெரிதாக எதையும் நான் சொல்லிவிட முடியாது. கொள்ளையனோடு கூட்டு சேரும் போலீஸ்காரன் இருக்கிறவரை இந்த மாதிரி கிரிமினல் வேலைகள் நடக்கத்தான் செய்யும். நாம்தான் விழிப்போடு இருக்க வேண்டும்.
வேறொரு டாப்பிக்கோடு பிறகு சந்திப்போம்.. சிந்திப்போம்.
ஒரு பேடிக்கு தோழியாக இருப்பதைவிட ஒரு நல்ல ஆண்மகனுக்கு விதவை யாக இருப்பது கவுரவமான செயல் என்பார்கள்.
குறுக்குவழியில் லாபம் தேடுகிற, மாட்டிக்கொள்ளும்போது அடுத்தவன் தலையில் பழி போடுகிற மனிதர்களை அடையாளம் கண்டு கொள்ள ஒரு எச்சரிக்கை மணியாக சில பதிவுகள் வெளியாகின.
எனக்குத் தெரிந்த டிடெக்ட்டிவ் ஒருவர் கேடுகெட்ட மனிதர்களைப் பற்றி கதைகதையாக சொல்வார்.
நல்லகுடும்பத்துப் பெண்கள் இதுபோல மாட்டிக் கொள்ளக்கூடாது என்பதற்கான பதிவே தவிர, தொடர்ந்து சில சாக்கடைகளைப் பற்றி பேசி இந்தப்பகுதியை தாழ்த்திக் கொள்ள வேண்டாம் என்று நினைக்கிறேன்.
மீடியாக்கள் நிறைய விஷயங்களை படம் பிடித்து காட்டுகிறதே. அதைவிட பெரிதாக எதையும் நான் சொல்லிவிட முடியாது. கொள்ளையனோடு கூட்டு சேரும் போலீஸ்காரன் இருக்கிறவரை இந்த மாதிரி கிரிமினல் வேலைகள் நடக்கத்தான் செய்யும். நாம்தான் விழிப்போடு இருக்க வேண்டும்.
வேறொரு டாப்பிக்கோடு பிறகு சந்திப்போம்.. சிந்திப்போம்.
No comments:
Post a Comment