Labels

About myself Name : Kumari S. Arunachalam alias Aruna S. Shanmugam Occupation : Form

Sunday, October 23, 2016

ஹாய் குட்டீஸ், ( PUZZLE - 08)

புதிர் எண் - 7க்கான விடை : ஒரு வேனிலிருந்த  பொருட்களை   மற்றொரு    வேனில் ஏற்றும்படி சூறாவளியிடம்  சொன்னான்.    சூறாவளி எதையாவது எடுத்துக் கொண்டு ஓடினால் அதைத்   தடுக்க வேண்டாம் . அவன் மறைக்க நினைக்கும் பொருளை வாங்கி 
திரும்பவும் வண்டிக்குள் ஏற்ற வேண்டாம் என்று  அடாவடியிடம்  
சொன்னான் ரமேஷ் . இனி புதிர் எண் - 8 க்கு விடை தேடுங்கள். 
Image result for images of train journey புதிர் எண் - 08 அப்பாவுடன் கன்னியாகுமரிக்கு ரயிலில் பயணித்துக் கொண்டிருந்த சிவகுமார், தூங்கப் பிடிக்காமல் ஜன்னலோரம் உட்கார்ந்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க, அப்பா அப்பர் பெர்த்தில் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தார். சில  ஸ்டேசனில் போதிய விளக்கு வெளிச்சம் இல்லாததாலும், சில ஊர்களை ரயில் வேகமாகக் கடந்து சென்றதாலும் , அது எந்த ஊர் என்பதைத் தெரிந்த கொள்ள முடியாததால், அப்பாவிடம் சந்தேகம் கேட்டுக் கொண்டிருந்தான் சிவகுமார் . சில ஊர்களின் பெயரை சொல்லி, அடுத்து எந்த ஊர் வரும் என்பதையும் அப்பா  சொன்னார். சில ஊர்களின் பெயரை நியூ காலனி என்றார். 
மேலே படுத்திருக்கும் அப்பா , கீழே குனிந்து பார்க்காமலே ஊர்களின் பெயரை சொல்வது சிவகுமாருக்கு ஆச்சரியமாக இருந்தது. அப்பாவிடம் அதுபற்றி கேட்க, அப்பா பதில் சொல்ல , அந்த பதிலைக் கேட்ட சிவகுமார் " ப்பூ. இதுதானா விஷயம் ? " என்றான். இப்போது கேள்வி என்னவென்றால் " அப்பா என்ன சொன்னார் ? ".

No comments:

Post a Comment