Labels

About myself Name : Kumari S. Arunachalam alias Aruna S. Shanmugam Occupation : Form

Saturday, September 17, 2016

எப்படி இருந்த நாம் இப்படி ஆயிட்டோம் ?! அது ஏன் ?

Image result for images of starved people
பஞ்சம் வறட்சி போன்ற செய்திகள் நியூஸ் பேப்பரில் படிக்கும் போதெல்லாம் எங்கள்  அம்மா எங்களிடம் சொல்லும் ஒரு விஷயம் : "அப்போ நீங்கள்லாம் சின்னப் புள்ளைங்க. நாம அப்போ தூத்துக்குடியில் இருந்தோம். அப்போ ஒரு பஞ்சம் வந்துச்சு . காசு குடுத்தா கூட எதுவும் கிடைக்காத நிலைமை. எங்கே பார்த்தாலும் பிள்ளைகளும் பெரியவர் களும் பட்டினி கிடந்தாங்க. அப்போ கேரளாவிலிருந்து கொஞ்ச பேர் கைவண்டியில் ஆள்வள்ளிக்கிழங்கு கொண்டு வந்து ஒவ்வொரு வீட்டிலும் குடுத்து இதை வேக வச்சு சாப்பிடுங்கனு சொல்லிட்டுப் போனாங்க. அதை சாப்பிட்டு ரெண்டு நாள் பொழுதை கழிச்சோம்"
இதை சொல்லும்போதெல்லாம் அம்மா கண்ணில் தண்ணீர் வந்து விடும்.
இப்போ தண்ணீருக்கு இத்தனை போராட்டம். பக்கத்துக்கு வீட்டுக்காரன் பட்டினி கிடக்கிறானே என்பதை நினைக்கக்கூட முடியாத அளவுக்கு மனித இதயங்கள் மரத்து விட்டதா என்ன ? 

No comments:

Post a Comment