Labels

About myself Name : Kumari S. Arunachalam alias Aruna S. Shanmugam Occupation : Form

Monday, September 12, 2016

சாமி எனக்கொரு உண்மை தெரிஞ்சாகணும் சாமீ !

Image result for images of robbery in his own house
எப்போதோ ஒரு சமயத்தில் படித்த ஒரு சிறுகதை. ஒருத்தனுடைய கைச்செலவுக்கு அவன் குடும்பத்தில் காசு கொடுப்பது கிடையாது. வேலை வெட்டி இல்லாத உனக்கு சாப்பாடு போடறதே பெரிய விஷயம். இதிலே கையில் வேறு காசு தரணுமா என்று கேட்பார் அப்பா.
இவனுக்கு வீட்டில் எது எது எங்கே இருக்குங்கிறது தெரியும். யாருமில்லாத நேரம் பார்த்து தனக்கு வேண்டியதை எடுத்து ஒரு இடத்தில் பத்திரம் பண்ணினான்.   பெட்டியை, வீட்டுப் பூட்டை இவனே உடைத்துவிட்டு திருடு போன மாதிரி ஒரு செட் அப் பண்ணினான்.
வெளியில் போனவர்கள் வீடு திரும்பும் போது   இவனும் வீட்டுக்கு வந்தான். எல்லோருடனும் சேர்ந்து இவனும் திருடனை தேடினான்.
இன்று காலையில் டீவி நியூஸ் பார்க்கும்போது அதில் ரயிலில் 6 கோடி களவு போன விஷயத்தை இன்னும் துப்பு துலக்க முடியவில்லை என்ற செய்தி காதில் விழுந்ததிலிருந்து சிறு வயதில் படித்த ( மேலே சொன்ன ) கதை நினைவில் ராட்டினம் சுற்றிக் கொண்டிருக்கிறது. அது ஏன் ?

No comments:

Post a Comment