அரசியல் செல்வாக்கினால் ஒரு பெண் ஒரு அலுவலகத்தில் வேலையில் சேர்ந்தாள். வேலையில் சேர்ந்துவிட்டாளே தவிர வேலை செய்ய வேண்டும் என்ற ஆர்வம் அவளுக்குத் துளியும் கிடையாது. ஒருநாளில் அரைமணி நேரம் வேலை பார்த்தால் அதுவே அதிகம். அந்த வேலையில் உள்ள தப்புகளைக் கண்டுபிடித்து சரி செய்ய ஆபீஸ் சூப்பிரெண்டுக்கு அரைநாள் தேவைப்பட்டது. அவர் படும் அவஸ்தையை மொத்த ஆபீஸும் வேடிக்கை பார்ப்பது வாடிக்கையாக இருந்தது.
ஒருநாள் அந்தப் பெண்ணுக்கு ரோஷம் வந்துவிட்டது.
"இன்னிக்கு ஒரு தப்புகூட இல்லாமே டைப் பண்ணி உங்க முன்னே பைலை வைக்கிறேன் ஸார். சேலஞ்ச்!" என்று சொல்ல, "ஒன்றிரெண்டு தப்புன்னா பரவாயில்லேம்மா. ஒட்டுமொத்தமும் தப்பா இல்லாமே இருந்தால் சரிதான் " என்றார்சூப்பிரெண்ட் பரிதாபமாக.
சற்று நேரத்தில் லெட்டர் டைப் பண்ணி எடுத்துக் கொண்டு வந்த அந்தப்பெண் அவர் மேஜை மீது அந்த லெட்டரை வைத்து விட்டு , "படிச்சுப் பார்த்துட்டு சொல்லுங்க ஸார் " என்றாள் ஆணவத்தோடு.
கையில் வாங்கி முழுவதும் படித்த அவர், "ஒரே ஒரு தப்பு இருக்கு!" என்று சொல்ல, ஒட்டு மொத்த அலுவலகமும் அது எப்படி சாத்தியம் என்று அதிர்ந்து போய் நிற்க, "அதான் ஒரு தப்பு அலவ்ட்னு நீங்க சொன்னீங்களே !" என்றாள் அவள் அசால்ட்டாக.
"முதல் லைனைப் படிச்சிட்டேன். ஒரே ஒரு தப்புதான் . இனி ரெண்டாவது லைனுக்குப் போறேன்!" என்று சூப்பிரெண்ட் சொல்ல, அதிர்ந்து போய் இருந்த அலுவலகம் மீண்டும் பழைய நிலைக்கு வந்தது.
No comments:
Post a Comment