புதிர் எண் - 01க்கான விடை :
என்ன எல்லாரும் சரியான விடையைக் கண்டு பிடிக்க மூளையைக்
கசக்கிப் பிழிந்து கொண்டு இருக்கிறீர்களா ? தாத்தா போட்டது ஒரு
கடிக்கணக்கு. சொன்னதை சொல்லுமாம் கிளிப்பிள்ளை என்பது
எல்லோருக்கும் தெரியும். தாய்க்கிளி சொன்னதையே சொல்லின
கிளிக்குஞ்சுகள் .
இனி இந்த வார புதிருக்கு விடை தேடுங்கள்:
புதிர் எண் -02
என்ன எல்லாரும் சரியான விடையைக் கண்டு பிடிக்க மூளையைக்
கசக்கிப் பிழிந்து கொண்டு இருக்கிறீர்களா ? தாத்தா போட்டது ஒரு
கடிக்கணக்கு. சொன்னதை சொல்லுமாம் கிளிப்பிள்ளை என்பது
எல்லோருக்கும் தெரியும். தாய்க்கிளி சொன்னதையே சொல்லின
கிளிக்குஞ்சுகள் .
இனி இந்த வார புதிருக்கு விடை தேடுங்கள்:
புதிர் எண் -02
தெருவாசல் திண்ணையில் உட்கார்ந்து கொண்டு ராமு தாத்தா தன்னுடைய பேரனுக்கு பாடம் சொல்லிக் கொடுத்துக் கொண்டிருந்தார். அந்த வழியாக வந்த அவரது பால்ய நண்பர் பெருமாளைப் பார்த்ததும் " என்னப்பா பெருமாள், கையும் பையுமா போறே. பையில் என்ன வச்சிருக்கிறே? " என்று கேட்டார்.
" பையிலா ? அது என்னிடம் இருக்கு. உன்னிடம் இல்லை .வீட்டில் இல்லை. வீட்டினுள் கடைசியாக இருக்கு" என்றார் பெருமாள் தாத்தா.
" நீ என்னோட பால்ய நண்பனாச்சே. எதிர் புதிர் போடாமே இருப்பியா. சரி பையில் இருக்கிறதில் எனக்கு இனிப்பு உருண்டை பிடிச்சு எடுத்துட்டு வா " என்று ராமு தாத்தா சொல்ல, " இது உருண்டை பிடிக்க இல்லே. இட்லி மிளகாய்ப் பொடிக்கு " என்றார் பெருமாள் தாத்தா.
" அப்படின்னா , அதிலே கொஞ்சம் கொண்டு வா " என்று ராமு தாத்தா சொல்ல சரி என்று தலையாட்டிவிட்டு நகர்ந்தார் பெருமாள் தாத்தா.
இவர்கள் பேசுவதைக் கேட்டுக் கொண்டிருந்த ரங்கனுக்கு எதுவுமே புரியவில்லை. " தாத்தா நீங்க என்ன கேட்டீங்க. அவர் எதைத் தரேன்னு சொல்லிட்டு போகிறார்?" என்று கேட்டான். அதற்கு " இன்னும் கொஞ்ச நேரத்தில் வரும் பார் " என்றார் தாத்தா.
இப்போ கேள்வி என்னவென்றால், பெருமாள் தாத்தா கையிலிருந்த பொருளின் பெயர் என்ன ? "
நண்பர்களின் பேச்சிலேயே ஏராளமான க்ளு இருக்கிறது.
(விடை கண்டு பிடிக்க முடியாதவர்கள் அடுத்த வாரம் வரை பொறுத்திருங்கள்)
(விடை கண்டு பிடிக்க முடியாதவர்கள் அடுத்த வாரம் வரை பொறுத்திருங்கள்)
No comments:
Post a Comment