Labels

About myself Name : Kumari S. Arunachalam alias Aruna S. Shanmugam Occupation : Form

Sunday, July 10, 2016

ராமு தாத்தாவும் குழந்தைகளும் (03)

புதிர் எண் - 03 

"தாத்தா நீங்க எதுவரை படிச்சிருக்கீங்க ? " என்று ஒரு குறும்புக்கார  சிறுவன் கேட்டதும்நான் மழைக்கு ஒதுங்கக் கூட ஸ்கூல் பக்கம் போய் நின்னது கிடையாது " என்று ராமு தாத்தா சொல்ல " அப்படின்னா ஷேம் ஷேம் " என்றார்கள் எல்லா சிறுவர்களும் சேர்ந்து.
படவா ராஸ்கல்கிண்டலா பண்றீங்கஎனக்கு அனுபவப் படிப்பு அதிகம் கண்ணுகளாஇப்போ நான் கேட்கிற கேள்விக்கு பதில் சொல்லுங்க பார்ப்போம்என்று தாத்தா சொல்ல, " நாங்க ரெடி " என்றார்கள் சிறுவர்கள்.
"பள்ளிக்கூடப் படிப்பு படிக்காத என்னோட கேள்விக்குபடிச்சிட்டு இருக்கிற நீங்க பதில் சொல்லுங்க பார்க்கலாம்தமிழில்,  அடுக்குத்  தொடர், இரட்டைக் கிளவி பற்றி உங்களுக்குத் தெரியும்தானே ?  
கூட்டம் கூட்டமாக  - இது அடுக்குத் தொடர்
வளவள     - இது இரட்டைக் கிளவி 
இப்போ புதிர் என்னவென்றால் : இதே போல் ஒரே ஒரு வார்த்தை அடுத்தடுத்து  இரண்டு முறை  வரும்படி கொடுத்தால்அதாவது 
நலம் நலம்மாலை மாலைபொழுது பொழுது என்பதை அர்த்தமுள்ள  வாக்கியமாக அமைத்துக் காட்ட உங்களால் முடியுமா  ? " என்று தூய  தமிழில்  கேட்டார்  தாத்தா.


சிறுவர்கள் யோசித்துக் கொண்டிருக்கிறார்கள்உங்களுக்குத் தெரிந்தால் உடனே சொல்லலாமே.

No comments:

Post a Comment