புதிர் எண் - 03
" படவா ராஸ்கல். கிண்டலா பண்றீங்க. எனக்கு அனுபவப் படிப்பு அதிகம் கண்ணுகளா. இப்போ நான் கேட்கிற கேள்விக்கு பதில் சொல்லுங்க பார்ப்போம்" என்று தாத்தா சொல்ல, " நாங்க ரெடி " என்றார்கள் சிறுவர்கள்.
"பள்ளிக்கூடப் படிப்பு படிக்காத என்னோட கேள்விக்கு, படிச்சிட்டு இருக்கிற நீங்க பதில் சொல்லுங்க பார்க்கலாம். தமிழில், அடுக்குத் தொடர், இரட்டைக் கிளவி பற்றி உங்களுக்குத் தெரியும்தானே ?
கூட்டம் கூட்டமாக - இது அடுக்குத் தொடர்
வளவள - இது இரட்டைக் கிளவி
இப்போ புதிர் என்னவென்றால் : இதே போல் ஒரே ஒரு வார்த்தை அடுத்தடுத்து இரண்டு முறை வரும்படி கொடுத்தால், அதாவது
நலம் நலம், மாலை மாலை, பொழுது பொழுது என்பதை அர்த்தமுள்ள வாக்கியமாக அமைத்துக் காட்ட உங்களால் முடியுமா ? " என்று தூய தமிழில் கேட்டார் தாத்தா.
சிறுவர்கள் யோசித்துக் கொண்டிருக்கிறார்கள். உங்களுக்குத் தெரிந்தால் உடனே சொல்லலாமே.
No comments:
Post a Comment