நடு ரோட்டில் ஒரு குடும்பத்தினர் மூன்று காவலர்களால் தாக்கப் பட்டதை மீடியாக்கள் ஒளி பரப்பிக் கொண்டிருக்க, அதே டாபிக் இன்று காலை எலெக்ட்ரிக் ட்ரைன் உள்ளேயும் ஓடிக் கொண்டிருந்தது.
"மனுஷங்களா அவனுக? காட்டு மிராண்டிக... காட்டுப் பன்னிக்குப் பிறந்தவனுக!"
"இல்லாதவன் மேலே வைக்கிற கையை எவனாவது பணக்காரன் மேலே வச்சுக் காட்டட்டுமே "
"அவனுக மூணே மூணு பேர். பப்ளிக் எத்தனை பேர் நின்னாங்க. அத்தனை பேரும் சேர்ந்து இவனுகளை அடிச்சு நொறுக்கி இருக்கணும் "
"இவனுகளை இடம் மாத்தம் பண்ணினா தீந்துச்சா ? வேலையை விட்டே எடுக்கணும் "
- இப்படியாக பேச்சு ஓடிக் கொண்டிருக்க, அங்கே நின்றிருந்த ஒரு பெண் (பார்க்க ரொம்பவும் அப்பாவியாக, படிப்பறிவில்லாதவள் மாதிரி தோன்றிய ஒரு பெண் ) சொன்ன செய்தி : "இந்த மாதிரி சூரப்புலிகளை அரசாங்கம் பாராட்டணும். காட்டுக்குள்ளே அங்கங்கே தீவிரவாதி பதுங்கி இருக்கிறதா சொல்றாங்களே. அவங்களை பிடிக்க இந்த மூணு பேரையும் அனுப்பணும். காட்டுக்குள்ளே இருந்து இங்கே வர்ற யானைகளை விரட்ட இந்த மூணு பேரையும் அனுப்பணும் . இத்தனை நாளைக்குள்ளே இத்தனை மணிக்குள்ளே அதை செஞ்சு முட்டிக்காட்டா உனக்கு சம்பளம் கிடையாதுன்னு சொல்லணும் " என்றாள்.
கொஞ்ச நேரம் அங்கே அமைதி நிலவியது. வேறொரு பெண், "நீங்க சொல்றது மாதிரி செஞ்சா அது இன்னும் டேஞ்சர் .அங்கே போய் (காட்டுக்குள்ளே ) அவங்க கூட்டணி வச்சிட்டா அது எல்லாருக்கும் ஆபத்தா முடிஞ்சிடுமே " என்றார்.
அப்பப்பா .... ஜனங்க என்னமா யோசிக்கிறாங்க !!!!!!!!!!!!!!!!!!!!!11
No comments:
Post a Comment