Labels

About myself Name : Kumari S. Arunachalam alias Aruna S. Shanmugam Occupation : Form

Sunday, July 17, 2016

ராமு தாத்தாவும் குழந்தைகளும் ( 04 )

ஹாய் குட்டீஸ்,
சென்ற வார புதிரின்  (புதிர் எண் - 03  ) விடை -   நலம்.நலம் அறிய ஆவல். 
                                                           இன்று மாலைமாலை ஒன்று வாங்கி வா.
                                  அவன் வரும் பொழுது , பொழுது நன்கு புலர்ந்திருந்தது. 

இனி இந்த வாரப் புதிருக்கு விடை தேடுங்கள் :



புதிர் எண் - 04. 
தெருவில் விளையாடிக் கொண்டிருந்த வேலனை அழைத்து அவனிடம் நூறு ரூபாய் நோட்டைக் கொடுத்து, "ஓடிப் போய் இரண்டு கிலோ அரிசியும் அரை கிலோ உளுந்தும் வாங்கிட்டு வா, அவசரம் " என்று ராமு தாத்தா சொல்ல, "பக்கத்து டவுனில் இன்னிக்குப் புதுக்கடை திறக்கிறாங்க. அங்குபோய் வாங்கிட்டு வரேன்"என்று சொல்லி ஓடிய வேளாண் அடுத்த அரைமணி நேரத்தில் வாங்கி வந்த பொருளை தாத்தாவிடம் கொடுத்து விட்டு ஓடத் தயாரானான்.
நில்லுப்பாஎது எது என்ன விலைன்னு சொல்லிட்டுப் போ " என்ற  தாத்தாவிடம் , அரிசியைக் காட்டி ' இது  பதினஞ்சு ஆட்டுக்கால்பருப்பு இருபது மாட்டுக் கொம்புகடை புதுசா திறக்கிறதாலே கல்கண்டு விலை தான்  குதிரைக் கொம்பு  " என்ற பதில் வந்தது வேலனிடமிருந்து.
"எல்லாருமே புதிரிலே பேச ஆரம்பிச்சிட்டீங்களாநல்லதுதான் . இந்தா இந்த குதிரைக் கொம்பை நீயே வச்சுக்கோ " என்று கல்கண்டு பாக்கெட்டை வேலனிடம் கொடுத்தார்  தாத்தா.
இப்போ கேள்வி என்னவென்றால்பொருட்களின் விலையாக வேலன் சொன்னது என்ன ? 

No comments:

Post a Comment