ஹாய் குட்டீஸ்,
சென்ற வார புதிரின் (புதிர் எண் - 03 ) விடை - நலம்.நலம் அறிய ஆவல்.
இனி இந்த வாரப் புதிருக்கு விடை தேடுங்கள் :
புதிர் எண் - 04.
சென்ற வார புதிரின் (புதிர் எண் - 03 ) விடை - நலம்.நலம் அறிய ஆவல்.
இன்று மாலை, மாலை ஒன்று வாங்கி வா.
அவன் வரும் பொழுது , பொழுது நன்கு புலர்ந்திருந்தது.
இனி இந்த வாரப் புதிருக்கு விடை தேடுங்கள் :
புதிர் எண் - 04.
தெருவில் விளையாடிக் கொண்டிருந்த வேலனை அழைத்து அவனிடம் நூறு ரூபாய் நோட்டைக் கொடுத்து, "ஓடிப் போய் இரண்டு கிலோ அரிசியும் அரை கிலோ உளுந்தும் வாங்கிட்டு வா, அவசரம் " என்று ராமு தாத்தா சொல்ல, "பக்கத்து டவுனில் இன்னிக்குப் புதுக்கடை திறக்கிறாங்க. அங்குபோய் வாங்கிட்டு வரேன்"என்று சொல்லி ஓடிய வேளாண் அடுத்த அரைமணி நேரத்தில் வாங்கி வந்த பொருளை தாத்தாவிடம் கொடுத்து விட்டு ஓட த் தயாரானான்.
" நில்லுப்பா. எது எது என்ன விலைன்னு சொல்லிட்டுப் போ " என்ற தாத்தாவிடம் , அரிசியைக் காட்டி ' இது பதினஞ்சு ஆட்டுக்கால், பருப்பு இருபது மாட்டுக் கொம்பு, கடை புதுசா திறக்கிறதாலே கல்கண்டு விலை தான் குதிரைக் கொம்பு " என்ற பதில் வந்தது வேலனிடமிருந்து.
"எல்லாருமே புதிரிலே பேச ஆரம்பிச்சிட்டீங்களா. நல்லதுதான் . இந்தா இந்த குதிரைக் கொம்பை நீயே வச்சுக்கோ " என்று கல்கண்டு பாக்கெட்டை வேலனிடம் கொடுத்தார் தாத்தா.
இப்போ கேள்வி என்னவென்றால், பொருட்களின் விலையாக வேலன் சொன்னது என்ன ?
No comments:
Post a Comment