Labels

About myself Name : Kumari S. Arunachalam alias Aruna S. Shanmugam Occupation : Form

Sunday, July 24, 2016

ராமு தாத்தாவும் குழந்தைகளும் ( 05 )

புதிர் எண் - 04 ன் விடை 
அரிசி விலை = பதினஞ்சு ஆட்டுக்கால்      =  15 ஆடு x 4 கால் = 60
உளுந்து விலை = இருபது மாட்டுக்கொம்பு   =20 மாடு  x 2 கொம்பு = 40
கல்கண்டு விலை  = குதிரைக் கொம்பு = குதிரைக்கு கொம்பு இல்லை
கடை திறப்பு நாள் என்பதால் கல்கண்டு ப்ரீ யாகக் கிடைத்தது.
இனி அடுத்த புதிருக்குப் போகலாமா ?










புதிர் எண் - 05 
ஏழாம் வகுப்புக்குள் வேகமாக வந்த வாசல் காவலாளி "மேடம் உங்கள் வகுப்பில் படிக்கும் வரதனின் தாத்தா உடல்நிலை மோசமாக இருப்பதால் கருணாநிதிங்கிறவங்க அவங்க  பைனை  வெளியூர் போக அழைத்துச்சிட்டுபோகவந்திருக்காங்க"என்றுசொல்லிவிட்டுப் போனார். 
கிளாஸ் மிஸ், "வரதன்உங்க அப்பா வந்திருக்காங்க. நீ இப்போ வீட்டுக்குப்  போகலாம் " என்றார்
"எங்க அப்பா இப்போ வெளிநாட்டில் இருக்கிறார்அவர் பேர் கனகராஜ். அவர் இப்போ இந்தியா வர சான்ஸே இல்லை " என்றான் 
காவலாளியை இன்டர்காமில் அழைத்த மிஸ் " வரதனுக்கு கருணாநிதி
என் உறவுமுறைனு கேட்டு சொல்லுங்க என்றார்.
"அவங்க மகன்னு சொல்றாங்க " என்று பதில் வந்தது.
கருணாநிதிவரதனை தனது மகன் என்று சொன்னதும் உண்மைதான் ; 
வரதன்கருணாநிதி தனது அப்பா இல்லை ன்று சொல்வதும் உண்மை தான்இந்தப் புதிரை விடுவிக்க உங்களால் முடியுமா ? 

(விடை தெரிந்து கொள்ள அடுத்த வாரம் வரை காத்திருக்கவும்.

No comments:

Post a Comment