Labels

About myself Name : Kumari S. Arunachalam alias Aruna S. Shanmugam Occupation : Form

Sunday, July 31, 2016

ராமு தாத்தாவும் குழந்தைகளும் ( 06 )

சென்ற வார புதிர் எண் - 05க்கான விடை :  வந்திருந்தது வரதனின் அம்மா. கருணாநிதி என்ற பெயரைக் கேட்டு வந்திருப்பது வரதனின் அப்பா என்று கிளாஸ் மிஸ் தப்பாக நினைத்துக் கொண்டார். இனி இந்த வாரப் புதிருக்கு விடை கண்டு பிடியுங்கள்.  
Image result for pictures of village scenery

புதிர் எண் - 06
"தாத்தாகரெண்ட் போயிடுச்சுராத்திரியிலே விளையாடபோகமுடியாது. இன்னிக்கு புரட்டாசிமாச முதல் சனிக்கிழமைனு  அம்மா, அக்கா,  பாட்டி, எல்லாரும் கோயிலுக்குப் போயிட்டாங்க. ரொம்ப போரடிக்குது. ஏதாவது புதிர் சொல்லுங்க தாத்தாஎன்று குழந்தைகள் கேட்கவும் தாத்தா ரொம்பவும் குஷியானார் .
"சரிஇருட்டுக்குள் எங்கேயும் போக வேண்டாம்நாம இருக்கிற இடத்தில்இருந்தபடி வார்த்தை விளையாட்டு விளையாடலாம் " என்றார் தாத்தா.
குழந்தைகள் ஆர்வமாக தாத்தாவின் முகத்தைப் பார்த்தார்கள்.  
"பிள்ளைங்களா இப்போ காக்காமாமா,  தாத்தாபாபாபாப்பா, மே மாத மாமேமா பலா லாபமாதேரு வருதே, குடகுதத்தை   தைத்த,  கருதித் திருக ,  குலவி விலகுஇந்த வார்த்தை எல்லாமே நீங்கள் சொல்லி பார்க்கிறப்ப இடமிருந்து வலமாகவலமிருந்து இடமாகஒரேமாதிரியான எழுத்துக்களும் உச்சரிப்பும்தான் வரும்னு உங்களுக்குத் தெரியும்தானே. இதேபோல ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு வார்த்தை சொல்லிக்கிட்டே வரணும். யார்அதிகப்படியான வார்த்தைகளை கண்டுபிடிக்கிறாங்களோ அவர்களுக்கு அஞ்சுரூபா பரிசு" என்றார் தாத்தா. யோசித்து யோசித்து ஒவ்வொரு வார்த்தைகளாக ஒவ்வொருவரும் சொல்ல ஆரம்பித்தனர். குழந்தைகள் கண்டுபிடித்த வார்த்தைகள் வா சிவா, தாராதா, தா கீதா, மோரு  போருமோ மேயுமே, தேயுதே
"சரிதத்தை தைத்தகருதித் திருக, குலவி விலகு   இதையெல்லாம் வாக்கியமாக சொன்னால் இன்னொரு அஞ்சு ரூபா பரிசுஎன்றார் தாத்தா.
உடனே, "இது தத்தை தைத்த சட்டை", "தண்ணீர்க் குழாய்   என்று கருதித் திருக காற்றுதான்வந்தது,தண்ணீர் வரவில்லை"என்று சொல்லி பரிசை வாங்கிக் கொண்டான் ரங்கன்.
"காரியம் ஆகணும்னா குழஞ்சி பேசி, குலவிவிலகுறது அவனுக்குக் கைவந்த கலை " என்று கோவாலு சொல்ல, "சபாஷ் !" என்றார் தாத்தா. 
மாடு மேயுமே",  " நிலா தேயுதே " என்று வேலு சொன்னான். 
(குழந்தைகளே இதே போல வார்த்தைகளைக்    கண்டுபிடிக்க நீங்களும் முயற்சி பண்ணனும்). குழந்தைகள் சொல்லிக் கொண்டிருக்கும் போதே,  "என்னடா உங்க அப்பனைக் கண்ணாலேயே பார்க்க முடியலேஊரிலே  இருக்கிறாரா வெளியூர் எங்காவது போயிட்டாரா? இல்லே உடம்புக்கு முடியாமே வீட்டில் இருக்கிறாரா? என்கிட்டே வாங்கின நூறு ரூபாயை ரெண்டு வாரத்தில் கொண்டாந்து தர்றதா சொல்லிட்டுப் போனார். ஆளும் வரலே பணமும் வரலே" என்று வேலனைப் பார்த்துக் கேட்டார் தாத்தா. "இந்த வருஷம் ஆடிமாசத்திலே நெல் விதைச்சாங்கதானேவிளைஞ்சத  அறுத்து எடுத்துகிட்டு சந்தையிலே வித்துட்டு அப்படியே எனக்கு தீபாவளிக்கு துணி எடுத்துட்டு வர்றேன்னு சொல்லிட்டு போனாங்கஅடுத்த மாசம்தீபாவளியாச்சே"  என்று வேலன் சொன்னான்.  
"படவா ராஸ்கல், இவ்வளவு  நாளும் புதிர் போட்டுப் பேசுனீங்க.  இப்போ  பொய்சொல்ல ஆரம்பிச்சிட்டீங்களா? " என்று கோபப்பட்டார் தாத்தா
இப்போ கேள்வி என்னவென்றால் எதைக் கண்டு அவன் சொன்னது பொய் என்று சொல்கிறார் தாத்தா ?

No comments:

Post a Comment