Labels

About myself Name : Kumari S. Arunachalam alias Aruna S. Shanmugam Occupation : Form

Friday, May 06, 2016

ஒண்ணுமே புரியலே உலகத்திலே !

எனக்கு ஒரு விஷயம் புரியலீங்க !. ( மத்த எல்லாம் புரிஞ்சிருக்கானு தயவுசெய்து யாரும் கேட்காதீங்க.   "உன்னைப் போல ஒரு முட்டாள் ஜென்மத்தை உலகத்திலே எங்கும் பார்க்கமுடியாது!". இது எங்கம்மா எனக்கு அடிக்கடி தருகிற சர்டிபிகேட்  ) 
ஒரு குடும்பம் ஆகட்டும்,ஸ்கூல் ஆகட்டும், சங்கம் ஆகட்டும் .. எதுவாக இருந்தாலும் அங்கே தலைமைப் பொறுப்பில் ஒருத்தங்க இருப்பாங்க. (குடும்பம்னா அப்பா அல்லது அம்மா, ஸ்கூல்னா தலைமையாசிரியர் , சங்கம் என்றால் அங்கே ஒரு தலைவர்) 
இது நாமாக ஏற்படுத்திக் கொண்ட ஒரு சமூக அமைப்பு. தடியெடுத்தவன் எல்லாம் தண்டல்காரன்னு ஆடக் கூடாது. ஒரு கட்டுக் கோப்புக்குள் நாம் எல்லாரும் இணைந்து இருக்கவேணும்கிறதுக்காக நாமே ஏற்படுத்திக் கொண்ட அமைப்பு.
தலைமைப் பொறுப்பில் இருப்பவரின் பேச்சைக் கேட்டு அடங்கி நடக்க வேண்டிய அவசியம் மத்தவங்களுக்கு இருக்கிற மாதிரி, தலைமைப் பொறுப்பில் இருக்கிறவங்களுக்குத் தன்னை சார்ந்து நிக்கிறவங்களோட நலனில் அக்கறை காட்ட வேண்டிய பொறுப்பும் இருக்கிறது. நேரம் காலம் தேவை அறிந்து செயல்பட வேண்டிய கட்டாயம் அவங்களுக்கு உண்டு.
அந்தக் காலத்தில் ராஜா தன்னோட பொறுப்பை பலர் கிட்டேயும் பகிர்ந்து கொடுத்திருப்பார். அதே நடைமுறைதான் இப்பவும் இருக்குது ஒருசில மாற்றங்களுடன்.
ஒரு குடும்பத்தின்  தலைமைப்பொறுப்பில் உள்ள அப்பாவோ அம்மாவோ, "உங்களுக்கு நான் அதை செய்தேன்..இதை செய்தேன்" என்று தங்கள் குழந்தைகளிடம்  லிஸ்ட் போட ஆரம்பித்தால் அது மிகப் பெரிய காமெடி. (செய்ய வேண்டியது தன்னோட கடமை என்று அறியாத  ஜென்மங்களை என்னவென்று சொல்வது ?) 
அந்தக் காலத்து  ராஜாவுக்குப் பதிலாக, இந்தக் காலத்தில் மந்திரிகளை நாமதான்  பொறுப்பில் அமர்த்துகிறோம். அந்தப் பொறுப்பை உணர்ந்து இந்த சமுதாயத்துக்கு என்ன தேவை என்பதை உணர்ந்து , வேண்டியதை செய்யவேண்டியது இவங்க கடமை.அதுக்காகத்தானே நாம இவங்களைத் தலைமைப் பொறுப்பில் உட்கார வைக்கிறோம். எல்லாவிதத்திலும் முதல் மரியாதையும் சலுகையும் அவர்களுக்கு வழங்கப்படுகிறது.
இந்த சமுதாயத்துக்கு அவர்கள் செய்கிற சேவை எல்லாமே நாம கொடுக்கிற வரிப்பணத்தை வச்சுதான். யாரும் அவங்க கைக்காசைப் போட்டு எதுவும் செய்றதில்லே. (நாம குடுத்ததை அவங்க சுருட்டினதுக்கு நிறையவே ஆதாரம் மீடியா வசம் இருக்குது.)
ஆனா, "நான் அதை செய்தேன்.. இதை செய்தேன்"னு ஒவ்வொருத்தரும் போடுகிற லிஸ்டைப் பார்த்தால், "அதையெல்லாம் செய்யவேண்டியது உன்னோட கடமை. அதுக்குத்தான் உன்னைத் தலைமைப் பொறுப்பில் அமர்த்தினோம். அதுக்கான செலவை ஒட்டு மொத்த சமுதாயமே பகிர்ந்து கொள்கிறது " என்ற பதிலை யாருமே முன் வைக்கலியே........அது ஏனுங்க  ?  
(படத்தில் இருக்கிறாப்லே ஆயிரம் கனவுகளோடு இருக்கிறோம்... ஹூம்... என்ன நடக்குதுன்னு பார்ப்போம் )

No comments:

Post a Comment