Labels

About myself Name : Kumari S. Arunachalam alias Aruna S. Shanmugam Occupation : Form

Sunday, May 29, 2016

குழந்தைகளுக்கான குறுந்தொடர் - 40

                                   
                          அச்சுப்பிச்சு அப்புமணி !
நிவேதிதா பேசுவதைக் கண்ணீருடன் கேட்டுக் கொண்டிருந்த தாத்தாவை பார்த்த காவல்துறை அதிகாரி,"ஸார், கண்ட்ரோல் யுவர் ஸெல்ப். உங்க பேத்திதான் நல்லபடியா வந்து சேர்ந்துட்டாளே " என்றார்.
"எங்க பேமிலி மெம்பெர்ஸ்ம் சரி, நேபர்ஸ்ம் சரி .... நிவேதிதாவை பற்றி பேசும்போதெல்லாம் அவளோடவயசுக்கு மீறிய அறிவையும் பேச்சையும் ரொம்பவே பாராட்டுவாங்க. என்னோட  சன், "டாடி, அவ எனக்கு டாட்டர் மாதிரிலே பிஹெவ்  பண்ணலே. என்னோட க்ரண்ட் மா மாதிரி பேசறா" னு சொல்வார். யாருமே எதிர்கொள்ளத் தயங்குகிற ஒரு விஷயத்தை ரொம்ப பொறுமையா ஹேண்டில் பண்ணி இருக்கிறா. அதை நினைச்சு ஆனந்தக் கண்ணீர் விடறேன் " என்றார் தாத்தா.
"இந்தக் குழந்தைங்க ரெண்டு பேரும் கடைசியா எங்கே இருந்தாங்கன்னு கேட்டு பர்தெரா என்கொயரி பண்ணினா அந்தக் கும்பல் மாட்டிடும். அதற்கான ஏற்பாட்டை நாங்க செஞ்சிட்டோம் " என்றார் அதிகாரி.
அதைக் கேட்டு பதறிப் போனான் அப்புமணி. அதைக் கண்ட நிவேதிதா, "இது...இதுக்காகத்தான் தாத்தா வந்ததும் நான் பேசுவேன்னு சொன்னேன். தாத்தா நாங்க எங்கே இருந்து வந்தோமோ அவங்கதான் எங்களுக்கு சேப் கார்டா இருந்தாங்க. எந்தக் காரணம் கொண்டும் அவங்களை யாரும் தொந்தரவு பண்ணக் கூடாது. நான் கடத்தப்பட்டதா யாரும் கம்ப்ளைன்ட் தராதப்ப இவங்க ஏன் மற்றவங்களை தொந்தரவு பண்ணனும். தாத்தா .. உங்க பவரை யூஸ் பண்ணி நீங்க இதைத் தடுத்து நிறுத்தணும் " என்றாள். சிறிது நேரம் யோசனையில் இருந்த தாத்தா, "தப்பு பண்ணினவனை கைது செய்ய எத்தனையோ சந்தர்ப்பங்கள் கிடைக்கும். இப்போதைக்கு அவங்க மேலே   எந்த நடவடிக்கையும் வேண்டாம் ஸார் " என்றார் ரிக்வெஸ்டாக. 
"அந்த கிரிமினல் சேகரைக் கொண்டு வர அப்பவே ஆள் போயாச்சு. நாங்க என்ன முட்டாளா?" என்று கோபத்துடன் அதிகாரி கேட்க,"ஸார் .. அந்தப் பையன் மேலே ஏதாது தேசத் துரோக வழக்கு இருக்கா ?" என்று கேட்டார் தாத்தா. 
உடனே,அப்புமணிக்கு நண்பனான காவல்துறைஅதிகாரி,"அந்த அளவுக்கு சீரியஸ் கேஸ் எதுவும் இல்லை"  என்றார்.
"அப்படின்னா இப்போதைக்கு அவங்களை விட்டுடுங்க. திருந்த ஒரு சான்ஸ் குடுப்போம். நான் தேவையான பணஉதவி பண்ணி அவனை ஏதாவது ஒரு பிசினெஸ் பண்ண வைக்கிறேன் " என்று தாத்தா  சொல்ல, அதைக் கேட்டு அப்புமணி பூரித்துப் போனான்.
அப்போது அங்கு வந்து நின்ற கான்ஸ்டபில் ஒருவர், ரகசியக் குரலில் அதிகாரியுடன் பேசினார். "அப்படியா!" என்று வியப்புடன் கேட்ட அவர் , 'ஸார்..அந்தப்பையன் சேகர் இதுவரை யாரோ ஒருத்தரை அவனோட பொறுப்பில் வச்சிருந்தானாம். அவருக்கு ஏதோ ஒரு விபத்தில் ஞாபக சக்தி போயிருந்ததாம். இப்போ நினைவு திரும்பி, தான் இன்னார் என்பதை சொல்லிட்டாராம். அவரை அழைச்சிட்டு அந்தப் பையன் வயல்வெளி கிராமத்துக்குப் போயிட்டானாம். அது அப்புமணியோட அப்பாதான்னு அங்கே இருந்த ஒரு லேடி... பேரு தனம்... அவ சொன்னாளாம். " என்றார். அதைக் கேட்டதும் "சின்ன போலீஸ்", "சார் நானும் ஒரு சமயம்  அந்த கிராமத்துக்குப் போயிருந்தேன். அங்கே இருந்த ஒரு வேலைக்காரன் அப்புமணி அப்பா காணாமல் போயிட்டார்னு சொன்னான். எல்லாத்தை யும் கூட்டிக் கழிச்சுப் பார்த்தா, அந்த லேடி சொல்றது சரின்னுதான் தோணுது"என்றவர்,அப்புமணியின் முதுகில் தட்டிக்கொடுத்து உலகத்தை சுத்திப் பார்க்க வந்த நீ, உங்க அப்பா கிடைச்ச சந்தோசத்தோடு உன் ஊருக்குப் போகலாம்" என்றார்.
"அப்படின்னா பொம்மை ராஜாதான் எங்க அப்பாவா?" என்று சந்தோஷ மாகவும், "இனிமே நான் உலகத்தை சுத்திப் பார்க்க வேண்டாமா ?" என்று சோகமாகவும்  கேட்டான் அப்புமணி.
"முட்டாள் மாதிரி பேசாதே. அப்பாவே கிடைச்சாச்சு. அப்புறம் என்னடா உலகம்..பொல்லாத உலகம் வேண்டிக்கிடக்கு? எதற்கும் ஒரு காலம் நேரம் இருக்குது. முதலில் உன்வீட்டுக்குப் போ. நல்லா படி.அப்பாஅம்மாவோடு சந்தோசமா இரு. உனக்கு பாஸ் போர்ட் வாங்க நான் ஏற்பாடு பண்றேன். விசா எல்லாம் ரெடி பண்ணிட்டு நானே உன்னை எங்க வீட்டுக்குக் கூட்டிட்டுப் போவேன்.." என்று அப்புவிடம் சொன்ன நிவேதிதா, "தாத்தா ... நான் சொல்றது சரிதானே ?" என்று கேட்டாள்.
"நீ எது செய்தாலும் அது ரொம்ப சரியாக இருக்கும்" என்று அவளிடம் சொன்ன தாத்தா, 'ஸார் ... நாங்க வர்றோம். உங்களுக்கு ரொம்ப தேங்க்ஸ்  " என்றார் அதிகாரிகளிடம்.
"தாத்தா ... நாம அப்புவை அவன் வீட்டில் கொண்டு போய் விட்டுட்டு அப்புறமா நம்ம வீட்டுக்குப் போகலாம்.. தாத்தா, வயல்வெளி கிராமத்தில் உள்ள லோக்கல் போலீஸ் ஸ்டேஷனுக்குப் போன் பண்ணி அப்புமணி பத்திரமா இருக்கிறான்னு அவங்க அம்மாவுக்கு உடனே இன்பார்ம் பண்ண சொல்லுங்க தாத்தா" என்றாள் 
"சுட்டிப் பொண்ணு... நீ சொல்றதுக்கு முன்னேயே ஒவ்வொண்ணும் சரியா நடந்துகிட்டே இருக்குது" என்ற அதிகாரி, "என்ன தத்துப்பித்து.. இனிமே உலகத்தை சுத்திப் பார்க்க தனியா கிளம்பி வரக்கூடாது. அப்பா அம்மா வோடுதான் வரணும்"  என்று சொல்ல "சரி " என்று தலையசைத்தான் அப்புமணி. அடுத்த நொடியே அவர்கள் வயல்வெளி கிராமத்தை நோக்கிப் பறந்தார்கள். அதற்கு முன்பாகவே அப்புமணியும் அவனது அப்பாவும் வருகின்ற  விஷயம் வயல்வெளி கிராமத்துக்கு சென்றடைந்தது.
வழி நெடுக "பொம்மை ராஜாதான் எங்க அப்பாவா! சேகர் அண்ணா ராஜாவை நல்லாபார்த்துக்கிட்டார்தானே?" என்றுநிவேதிதாவிடம் கேட்டு கொண்டே வந்தான்.
திடீரென்று "தாத்தா, சேகர்அண்ணா,அவரோட போகிற அப்புவோட அப்பா அடையாளங்களை சொல்லி ஏதாவது ஒரு செக் போஸ்ட்டில் அவங்களை நிறுத்தி வைக்கச் சொல்லுங்களேன்" என்றாள் நிவேதிதா.
"ஏன்மா ?"
"வயல்வெளி கிராமத்துக்குள் நுழையறப்ப எல்லாரும் சேர்ந்து ஒண்ணா அப்பு வீட்டுக்குப் போகலாம்"
"நல்ல ஐடியா" என்ற தாத்தா, அதற்கான ஏற்பாட்டை செய்தார்.   
வயல்வெளி கிராமமே திருவிழா கோலம் கொண்டிருந்தது. ஒருவரைப் பார்த்து மற்றொருவர், "அப்பு வரப் போறானாமே !" என்று சந்தோஷமாக சொல்லிக் கொண்டார்கள். அப்புவின் நண்பர்களும், ஊரிலுள்ள மற்ற சிறுவர்களும்  "இனிமே நாம அவனைக் கிண்டலோ கேலியோ பண்ணக் கூடாது. அதனாலே தான் அவன் ஊரை விட்டுப் போனான். அவனை நாம் ரொம்பநல்லபடியா பார்த்துக்கணும்" என்று சபதமே எடுத்துக் கொண்டனர் .
பத்து நாட்களுக்கும் மேலாகப் படுக்கையில் இருந்த அம்மா, அப்புவும் அவனது அப்பாவும் வரும் செய்தி கேட்டு, படுக்கையிலிருந்து எழும்பி சிறு பெண் போல ஓடியாடி வேலை செய்ய ஆரம்பித்து விட்டாள். எல்லோரது விழிகளும் பட்டணத்திலிருந்து கிராமத்துக்குள் வரும் பாதை மீதே பதிந்திருந்தது.  
சற்று நேரத்தில் "வந்தாச்சு .... வந்தாச்சு " என்று சந்தோசக் கூச்சல்.
கார் வந்து நின்றதுமே குதித்து இறங்கிய அப்புமணி, "அம்மா" என்று கத்தியபடி ஓடி வந்து அம்மாவைக் கட்டிப்பிடித்தான். அம்மாவோ கதறி விட்டாள்.
"அப்பா.. வெளிநாட்டில் இருக்கிறதா சொன்னீங்க... அவர் சேகர் அண்ணா வோட பொம்மை ராஜாவா இருந்தார் " என்று அப்புமணி சொல்ல, எதுவும் புரியாமல் திகைத்த அம்மாவுக்கு கண்ஜாடை காட்டி "நான் விளக்கமா அப்புறம் சொல்றேன் " என்றாள் நிவேதிதா.
அம்மாவின்கண்கள் அப்புமணியின் அப்பாவை தேடின.காருக்குள்ளிருந்து அவரைக் கைத்தாங்கலாக அழைத்து வந்த சேகர்,"அம்மா உங்க கணவரை உங்ககிட்டே பத்திரமா சேர்த்துட்டேன்" என்றான். 
அந்தஇடம் ரொம்பஅமைதியாக இருந்தது. பேசவேமுடியாத மௌனத்தில் அம்மா அப்பா இருவருமே இருந்தார்கள். பத்துவருடக்கதைகளை பார்வை யிலேயே பேசி முடித்தார்கள். 
கூட்டத்தில் இருந்த ஒரு பெரியவர், 'இத்தனை வருஷம் கழிச்சு ஒரு மனுஷன் திரும்பி வந்திருக்கிறார். முதலில் அவங்க வீட்டுக்கு அவர் போகட்டும்"என்றுசொன்னதும்ஒருசிலர்அங்கிருந்துகிளம்பிப்போனார்கள்.
அப்புமணியின் நண்பர்கள் ஓடிவந்து அவனை அரவணைத்துக் கொண்டார் கள். எல்லோரும் அப்புமணியின் வீட்டுக்குவந்தனர்.
அம்மாவின் உடல்நலன் கருதி அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள், வந்திருந்த அனைவருக்கும் விருந்து படைப்பதில் மும்முரமாக இருந்தார்கள்.  
விசாரிப்பு, விருந்து   எல்லாம் முடிந்து நிவேதிதா தாத்தாவுடன் கிளம்ப தயாரானாள். அதற்கு முன்பாக, "சேகர் அண்ணா.. உங்களுக்கு தாத்தா ஹெல்ப் பண்ணுவார். நீங்க ஏதாவது ஒரு பிசினெஸ் பண்ணி நல்ல நிலைக்கு வரணும் " என்றாள்.
"ஊஹும் .. அண்ணா என்னோடதான் இருப்பார். எங்க அப்பாவோடு சேர்ந்து விவசாய வேலையை பார்த்துப்பார். அப்படிதானே அண்ணா " என்று அப்புமணி கேட்க, கண்களில் கண்ணீர் வர "ஆமாம்" என்று தலையாட்டினான் சேகர். 
"ஓகே..அப்பு.... உன் அண்ணா உன்னோடயே இருக்கட்டும். நாங்க கிளம்ப றோம்.  கூடிய சீக்கிரம் உன்னை எங்க நாட்டுக்கு கூட்டிட்டுப் போய் அதை சுத்திக் காட்டுவேன்... இப்போ பை " என்றாள் நிவேதிதா.
"நீயும் இப்பவே போணுமா ? இங்கேயே இருந்துடேன் "
"என்னோட அப்பா அம்மா என்னைத் தேடுவாங்கதானே. நான் இப்போ போறேன்...அப்புறமா வருவேன்" என்று சொல்லிய நிவேதிதா காரில் ஏறிக் கொள்ள, கார் சென்னை நோக்கிப் பறந்தது.
என்னவென்று சொல்லத்தெரியாத வருத்தம் மனதுக்குள் இருந்தாலும் அதை யாரிடமும் சொல்லாமல், சேகர் அண்ணா, பொம்மை ராஜாவின் கைகளைப் பிடித்தபடி வீட்டுக்குள் வந்தான் அப்புமணி.  இனி அந்த வீட்டில் சந்தோசம் சந்தோஷம் சந்தோசம் மட்டுமே இருக்கும். 
  --------------------------------------- நிறைவுற்றது ----------------------------------------------------                

No comments:

Post a Comment