Labels

About myself Name : Kumari S. Arunachalam alias Aruna S. Shanmugam Occupation : Form

Sunday, May 15, 2016

குழந்தைகளுக்கான குறுந்தொடர் - 38

                                                 
அச்சுப்பிச்சு அப்புமணி !
ஆட்டோவிலிருந்து குதித்து ஓடி வந்து, "சின்ன போலீஸ் ... நான் ஒரு கொலை பண்ணிட்டேன்" என்று பயத்துடன் சொன்ன அப்புமணியைப் பார்த்து திகைத்துப் போய் நின்றார் அதிகாரி .
"என்ன ... தத்துப்பித்து .... நீ என்ன சொல்றே ?...... நீ கொலை செஞ்சியா!  யாரை? எங்கே ?" என்று அதிர்ந்து போய்க் கேட்டார்.
"ஸார் ... ஐ வில் எக்ஸ்ப்ளைன் ... அதுக்கு முன்னாடி இந்த ஆட்டோ டிரைவருக்குப் பணம் கொடுக்கணும். அவர் கேட்கிறதைக் கொடுங்க.. எங்க தாத்தா வந்ததும் நான் அதை திருப்பித் தந்திடுவேன்" என்றாள் நிவேதிதா .
அப்போதுதான் நிவேதிதாவைக் கவனித்த அவர், "நீ யாரும்மா ?" என்று கேட்டார்.
"அதையெல்லாம் சொல்லத்தான் நான் இங்கே வந்தேன். அப்புமணி என்னோட ப்ரெண்ட்" என்று நிவேதிதா சொல்ல, "அப்படியா ?" என்று கேட்பது போல அப்புமணியைப் பார்த்தார் அதிகாரி.
"ஆம் " என்று தலையசைத்தான் அப்புமணி.
"என்னப்பா... டிரைவர் ... எவ்வளவு தரணும் ?" என்று ஆட்டோக்காரரை அவர்கேட்க, "சாதாரணமா நான் நூத்து ஐம்பது வாங்குவேன். அய்யாவுக் குத் தெரிஞ்ச பசங்கங்கிறதாலே நூறு ரூபா கொடுத்தா போதும் " என்றார் டிரைவர்.
நூறு ரூபாயை எடுத்து ஆட்டோ டிரைவரிடம் நீட்டிய அவர், "வாங்க பசங்களா" என்று இருவரின் தோளின் மீதும் கை போட்டு அணைத்தபடி அலுவலகத்துக்குள் காலியாக இருந்த ஒரு ரூமுக்குள் அவர்களை அழைத்துக் கொண்டு  போனார்.
சல்யூட் செய்து நின்ற காவலரிடம், "மூணு கூல் ட்ரிங்க் வாங்கிட்டு வாப்பா " என்றார். சரி என்று சொல்லி அங்கிருந்து நகர்ந்தார் காவலர்.
"சின்ன போலீஸ்... நான் பொம்மை ராஜாவை கொலை பண்ணிட்டேன்" என்று நடுங்கும் குரலில் சொன்னான் அப்புமணி.
"அப்படியா? அதை பிறகு பேசலாம். முதலில் கூல் ட்ரிங்க் வரட்டும். அதைக் குடிச்சிட்டு அப்புறமா பேசலாம். அதோ அந்த ரூமில் வாஷ் பேசின் இருக்குது. போய் முகம் அலம்பிட்டு ப்ரெஷா வா பார்க்கலாம் " என்றார் அவர்.
அப்புமணி அசையாமல் உட்கார்ந்திருக்க, "எழும்பிப் போ" என்று சைகை செய்தாள் நிவேதிதா. அப்போதும் அவன் மௌனமாக இருக்க, அவன் கைகளைப் பிடித்து இழுத்துக் கொண்டு தண்ணீர்க் குழாய் இருக்கும் இடத்துக்குப் போனாள்.
அப்புமணியின் முகத்தைப் பார்க்கவே பரிதாபமாக இருந்தது   அவளுக்கு.
"அசடு .... நீ ஒண்ணும் கொலை பண்ணலே ...அடிபட்ட அவருக்கு எதுவும் ஆகிஇருக்காது.உன்னோட அண்ணன்அவரை அழைச்சிட்டு ஆஸ்பத்திரி க்குப் போயிருக்கிறார் தானே ... பிறகு ஏன் பயப்படறே ?" என்று கேட்டாள்.
"அப்படின்னா நான் நிஜமாவே கொலை பண்ணலையா ?"
"நீ எதுவும் பண்ணலே "
"அப்படின்னா நீ ஏன் என்னைப் போலீஸ் கிட்டே போக சொன்னே ?" என்று நடுங்கும் குரலில் கேட்டான் அப்புமணி.
"எல்லாம் நான் தப்பிக்கத்தான் !" என்று கேஷுவலாக பதில் சொன்னாள்  நிவேதிதா.
"என்ன சொல்றே நீ? நீ ஏன் தப்பிக்கணும்? யாருட்டே இருந்து தப்பிக்கணும் ?"
"எல்லாம் உன்னோட அண்ணன் கிட்டே இருந்து தப்பிக்கத்தான். நான் எங்க வீட்டுக்குப் போகணுமுன்னு சொன்னா உங்க அண்ணன் என்னைப் போக விட்டுடுவாரா? அங்கே இருந்து வெளியேற உன்னோட ஹெல்ப் எனக்குத் தேவைப்பட்டுது. கிடைச்ச சந்தர்ப்பத்தை நான் யூஸ் பண்ணிக் கிட்டேன். இனிமே உங்க அண்ணன் வந்தாலும் சரி ... ஆட்டுக்குட்டி வந்தாலும் சரி ... எனக்குப் பயம் கிடையாது "
"அப்படின்னா நீ அண்ணனைப் பத்தி போலீஸ் கிட்டே போட்டுக் குடுப்பியா .  தண்டனை வாங்கிக் குடுப்பியா ?"
"இல்லே... உங்க அண்ணனுக்கு மெடல் வாங்கி தர்றேன்...போதுமா ?" என்றுநிவேதிதாசொல்லிக்கொண்டிருக்கும்போதே,"பசங்களா.. இவ்வளவு நேரம் இங்கே என்ன பண்றீங்க ? ஐயா உங்களை கூப்பிடறார் ... வாங்க" என்று சொல்லியபடி அங்கே வந்தார் கான்ஸ்டபில் ஒருவர்.
"வா ... அப்பு .." என்றபடி அங்கிருந்து ரூமுக்குள் வந்தாள் நிவேதிதா.
"வா ... தத்துப்பித்து... கூல் ட்ரிங்க்  எடுத்துக்கோ ... இந்தாம்மா .... பொண்ணு நீயும் எடுத்துக்கோ... உன் பேர் என்னம்மா ?"
"நிவேதிதா ... ஐ அம்  ப்ரம் அமெரிக்கா "
"இசிட் ... முதலில் குடிங்க...அப்புறம் பேசலாம்." என்றார் அதிகாரி.
கூல்  ட்ரிங்க்கைக் கையில் எடுத்த நிவேதிதா அதை ரசித்து ருசித்துக் குடிப்பதையும், வாயில் வைத்திருந்த கூல் ட்ரிங்க்கை விழுங்கவும் முடியாமல்  துப்பவும் முடியாமல் அப்புமணி தவிப்பதையும் கவனித்தார். ஒருவழியாக அவன் அதைக் குடித்து முடிந்ததும், "இப்போ சொல்லுங்க.. என்ன நடந்தது?" என்று கேட்டு அப்புமணியைக் கூர்ந்து கவனித்தார் அவர்.
"நான் கொலை பண்ணினேனா இல்லையானு எனக்கே தெரியலை" என்று குழப்பமான குரலில் சொன்னான் அப்புமணி.
'நீ சொல்லும்மா..  அமெரிக்காவிலிருந்து வந்திருக்கிறதா சொல்றே ? யாரோட வந்தே? உனக்கு அப்புமணியை எப்படித் தெரியும்.?"
"சில நாட்களுக்கு முன்னாலே ஒரு மினிஸ்டர் மகளைக் கடத்திட்டதா சொல்லி நியூஸ் வந்தது .. அப்புறம் ஒரு வெளிநாட்டு சிறுமி கடத்தப் பட்டதா நியூஸ் வந்துதுதானே ?"
"நியூஸ் வந்தது ... ஆனால் தன்னோட மகள் பத்திரமா இருக்கிறதா மினிஸ்டர் சொல்லிட்டார்.. வெளிநாட்டு சிறுமி தன்னோட பேரண்ட்ஸ் கூட பத்திரமா இருக்கிறதாக மறுப்பு செய்தியும் வந்துச்சே."
"அந்த  வெளிநாட்டு சிறுமி நான்தான் !" என்று நிவேதிதா அமைதியாக சொல்ல அதைக் கேட்டு அதிர்ந்து போனார் அதிகாரி ..
"என்னம்மா....சின்னப்பொண்ணு..அப்புமணிகூட சேர்ந்துகிட்டு எங்கிட்டே காமெடி கீமெடி பண்ணலே தானே  ?" என்று சீரியஸான குரலில் கேட்டார். 
"இல்லே ... ஸார் .. நான் சொல்றது நிஜம். எங்க தாத்தா கூட நான் இந்தியா வந்தேன். திரும்பிப் போயிருந்தா அவரோடுதான் போயிருப்பேன். அப்படி இருக்க நான் வீட்டில்   இருக்கிறதா தாத்தா ஏன் பொய் சொன்னார்ங்கிறது எனக்குப் புரியலே. ஆனா அதுக்குக் கண்டிப்பா ஒரு காரணம் இருக்கும். நான் எங்க தாத்தாவை  உடனே காண்டாக்ட் பண்ணனும் "
"ஓகே.நம்பர் சொல்லும்மா..."
"ஏதாவது முக்கியமான வேலையா இருந்தா தாத்தா போனை ஆப் பண்ணிடுவார். மெயில் அனுப்பினா அவரோட அசிஸ்டன்ட்ஸ் அதை  உடனே பார்ப்பாங்க. தாத்தாவுக்கு இன்பார்ம் பண்ணுவாங்க"
"அப்படியா?' என்று கேட்ட அதிகாரி அவர்களை கம்ப்யூட்டர் ரூமுக்கு அழைத்துச் சென்றார்.
"தேங்க்ஸ்" என்ற நிவேதிதா கம்ப்யூட்டர் முன்பாக உட்கார்ந்து கொண்டு கம்போஸ் பண்ண ஆரம்பித்தாள்.
பிறகு, "ஸார்.. இங்கேயே வெயிட் பண்றேன்... எப்படியும் ரிப்ளை வந்துடும் " என்றாள் நிவேதிதா 
"ஓகே" என்றபடி அங்கிருந்த சேரில் அமர்ந்து கொண்டார் அதிகாரி.
அடுத்த ஐந்து நிமிடங்களுக்குள் ரிப்ளை வந்தது. படித்துப் பார்த்த நிவேதிதா, "எங்க தாத்தா ஆந்திராவில் இருக்கிறாராம். உடனே வர்றதா சொல்லியிருக்கிறார் " என்றாள் சந்தோஷமான குரலில்.
அவளது ஒவ்வொரு அசைவையும் கூர்ந்து கவனித்துக் கொண்டிருந்தான் அப்புமணி. "இவ கொஞ்சம் கூட எதுக்கும் பயப்படாமே எவ்வளவு தைரியமா இருக்கிறா " என்று தனக்குள் சொல்லிக் கொண்டான்.
அவர்களைத் தன் ரூமுக்குத் திரும்பவும் அழைத்து வந்த அதிகாரி, "ம் ... சொல்லும்மா ... இவ்வளவு நாளும் எங்கே இருந்தே ?" என்று கேட்டார். அதைக்கேட்டு அப்புமணிக்கு  உள்ளுக்குள் உதறல் எடுத்தது. அண்ணனை காட்டிக் கொடுத்து விடுவாளோ என்ற பயமும் இருந்தது.  உடனே ஓடிப் போய் அண்ணனைக் காப்பாத்தணும்" என்ற நினைப்பில் தவிப்புடன் இருந்தான். இதை நிவேதிதா புரிந்து கொண்டாள்.
"ஸார் .. உங்களோட நான் கோ-ஆப்ரேட் பண்ணலைன்னு நினைக்காதீங்க. எங்க தாத்தா வரட்டும். அவர் வந்ததும் அவர்கிட்டே பேசிட்டு நான் உங்க கிட்டே பேசறேன் " என்றாள் நிவேதிதா.
அவள் சொன்னதைக் கேட்டு, சின்னப் பெண்ணாக இருந்தாலும் இந்தப் பெண் என்ன ஒரு மெச்சூர்டாக இருக்குது என்று மனதுக்குள் வியந்து கொண்ட அதிகாரி, "ஓகே . அவர் வர்ற வரை எங்க வீட்டில் வந்து ரெண்டு பேரும்  இருக்கீங்களா .... இல்லே கெஸ்ட் ரூமில் இருக்கீங்களா?" என்று கேட்டார். 
"நாங்க இங்கேயே இருக்கிறோம் " என்று நிவேதிதா சொல்ல, "குழந்தை ங்களைப்   பத்திரமா பார்த்துக் கொள்ளணும். அவங்க கேட்கிறதை செஞ்சு குடுங்க" என்று காவலர்களிடம் சொல்லிவிட்டு தன்னுடைய   மேலதிகாரி இருக்கும் அறைக்குச் சென்றார் அவர் .  
--------------------------------------------------- தொடரும்--------------------------------------------------

No comments:

Post a Comment