Labels

About myself Name : Kumari S. Arunachalam alias Aruna S. Shanmugam Occupation : Form

Thursday, April 28, 2016

அவனவன் மனசிலே ஆயிரம் கவலைகள் !!


‘என்னங்க...’
’சொல்லுங்க ஸார்... என்ன வேணும்?’
‘ஒரு புக் வேணும்?’
’இந்தாங்க... கேட் லாக்.. எந்த புக் வேணும்னு சொல்லுங்க?’
‘தேர்தல் வாக்குறுதி பத்தியெல்லாம் புக் இருக்காங்க?’
‘அட.. அதுக்குத் தனி புக் தேவையா என்ன?அதான் ஒவ்வொரு பத்திரிக்கை யிலும் சுடச்சுட, சூடான செய்தியா பக்கம் பக்கமா போட்டுத் தள்ளிட்டு இருக்காங்களே. வாட்ஸ்-அப், ஃபேஸ்புக், டுவிட்டர்னு எல்லாத்திலும் கமென்ட்ஸ் வருது. போதாக்குறைக்கு சில டீவி சேனல்ஸ் தேர்தல் செய்தி சொல்றத முழுநேர சேவையா செஞ்சிட்டு இருக்குதே. இன்னும் ஒரு மாசம் பொழுது போறதே தெரியாது... தேர்தலுக்கு முன்னால ஒரு அமர்க்களம்... தேர்தலுக்கு பின்னால ஒரு அமர்க்களம்னு ஜனங்களுக்குப் பொழுது போக்குக்குப் பஞ்சமே இல்லை.’
‘அதை நினச்சாதான் பயமா இருக்குது’
‘என்ன ஸார் சொல்றீங்க?’
’எல்லாக் கட்சியும் சகட்டுமேனிக்கு வாக்குறுதியை அள்ளி வீசிகிட்டு இருக்குது’
’அது வாஸ்தவந்தானே. அவனவன் பிழைக்கிற வழியை, நாற்காலியப் பிடிக்கிற வழியைப் பார்க்கிறான்.’
‘இந்த எலெக்க்ஷன்னு இல்லே. எந்த இடத்திலே எலெக்க்ஷன் வந்தாலும் எதிர்க்கட்சிக்காரங்க, ஆளுங்கட்சிக்காரங்க செய்யாத ஒண்ணை, செய்ய முடியாத  ஒண்ணை செஞ்சு காட்டுவோம்னு சொல்றாங்களே’
‘மக்கள் நம்பறாங்க.. இவங்க சொல்றாங்க’
‘சரி எதோ ஒன்னு.. ஆட்சியில இல்லாதவங்களே அதை  இதையெல்லாம் செய்வோம்னு சொல்றப்ப, ஏற்கனவே ஆட்சியில இருக்கிறவங்க இதை யெல்லாம் செய்ய முயற்சி பண்ணாமலா இருப்பாங்க.?’
‘வாஸ்தவமான பேச்சு! ஆனா இதை சிந்திச்சுப் பார்க்க வேண்டியது நம்ம ஆட்டு மந்தை... அதுக்கு சிந்திக்கத் தெரியாது.’
‘நாற்காலியப் பிடிச்சு உக்காந்த பிறகு, மத்த இடங்களை ஒப்பிட்டுப் பார்க்கையிலே நம்ம மாநிலத்தில்தான் சும்மாவே எல்லாம் கெடைக்குது அப்படினு சொல்லப்போறாங்க. மத்திய அரசு போதிய நிதி உதவி தராத தாலே தேர்தல் வாக்குறுதிபடி எதையும் எல்லாருக்கும் இலவசமா குடுக்க முடியலேனு சொல்லப் போறாங்க. அறிவிப்பு குடுக்கறதுக்கு முன்னாடி பண உதவி செய்வியானு மத்திய அரசைக் கேட்டு நீ உறுதிபடுத்திட்டுதான் வாக்குறுதி குடுத்தியானு நம்மள்ல  யாரும் அவங்கள கேள்வி  கேட்கப் போறதில்லே. எல்லாத்துக்கும் பூம்பூம் மாடு மாதிரி தலை ஆட்டப் போறோம்’
’தலைய ஆட்டறதில் உங்களுக்கு அப்படி என்ன ஸார் பிரச்னை?’
‘சகட்டுமேனிக்கு அதை செய்வேன், இதை செய்வேன்னு அடுக்கிக்கிட்டே போவாங்க. நம்ம ஆட்டுமந்தையும் அதை நம்பி ஓட்டுப் போட்டுட்டு, மே மாசம் கடைசிக்குள்ள எல்லாம் வீடு தேடி வந்துரும்னு ஒரு கணக்குப் போட்டு வச்சுகிட்டு, அது கைக்கு வராட்டா ஜூன் ஒண்ணாந் தேதியில் இருந்தே அங்கே இங்கேனு சாலை மறியலில் இறங்கிடுவாங்களே. நல்ல நாள்லயே ஒரு இடத்துக்குப் போய்ட்டு வீட்டுக்குத் திரும்பறதுக்குள் நாய்படாத பாடுபடுவோம். மறியல்னா கேக்கவா வேணும். எவனோ ஒருத்தனோட தனிப்பட்ட பிரச்னைக்காக ரோட்டில் போகிற வர்ற அத்தனை பேரும் சேர்ந்து தெருவில் நிக்க வேண்டி இருக்குமே. அதை நினச்சுதான் பயப்பட வேண்டியிருக்குது. சாலை மறியல் போராட்டத்தை சமாளிக்கவே போலீஷுக்கு நேரம் பத்தலே. திருடனுங்க இதுதான் சமயம்னு எங்கேபார்த்தாலும் கைவரிசையைக் காட்டிட்டு இருக்கிறாங்க.. நாட்டுக்குள்ள இருக்கிற மிருகங்கள் பத்தாதுனு காட்டு மிருகங்க வேறே அப்பப்போ வந்து விசிட் குடுத்துட்டு போகுது.. எது எதையோ நினச்சுப் பயப்பட வேண்டியிருக்குது.. கவலைப்பட வேண்டி இருக்குது!’’
‘குடுத்து வச்ச மனுஷன் ஸார் நீங்க.. சொந்தக் கதை பத்திக் கவலைப் படாமே எப்பவோ நடக்கப் போற சோக சம்பவங்களைப் பத்தி கவலைப் படறீங்க! கவலைப்பட வேறே விஷயமே இல்லியா? ஜனங்க எல்லாருமே எலெக்க்ஷன் திருவிழாவை அங்கங்கே நடக்கிற கூத்தை வேடிக்கைப் பார்க்கிறதில் மும்முரமாயிட்டதாலே, யாரும் புக்-ஷாப் பக்கமே வர்றது இல்லே.  எந்த புக்கும் விக்கலியே.. இன்னிக்குப் பொழைப்புக்கு என்ன செய்றதுன்னு நான் யோசனை பண்ணிட்டு இருக்கிறேன். நீங்க என்னடான்னா நாளைக்கு நடக்கப் போறதப் பத்தி கவலைப்படறீங்க.!.. அட எஞ்சாமி பகவானே.. எனக்கு இன்னிக்குப் பொழுது இப்படியா விடியணும்?’’

No comments:

Post a Comment