வாருங்கள் ! கை கோர்த்துச் செல்வோம் !!
பள்ளியில் படித்துக் கொண்டிருந்த காலத்தில் பள்ளி முடிந்து வீட்டுக்கு வந்ததும் எங்களுடைய வீட்டில் நான் இருந்த நேரத்தைவிட, எங்கள் வீட்டுக்கு அருகிலிருந்த ஒரு லைப்ரரியில் இருந்த நேரந்தான் அதிகம்.
சிறுவயதில் நான் படித்த ஒரு புத்தகத்தில் எனது மனதில் பதிந்த .... பதிந்த என்று சொல்வதைவிட "பதியம்" போடப்பட்ட வரிகள் என்று சொன்னால் அது பொருத்தமாக இருக்கும். அந்த வரிகள் :-
"இந்தியாவும் சரி ; இந்துமதமும் சரி ; ஒரு ஆலமரம் மாதிரி ! அந்த ஆலமர நிழலில் யார் வேண்டுமானாலும் வந்து தங்கலாம்! இளைப்பாறலாம் ! தங்களை ஆசுவாசப்படுத்திக் கொள்ளலாம். இன்னார்தான் வந்து தங்க வேண்டுமென்று ஆலமரம் ஒருபோதும் சொல்வதில்லை! வேர்கள், விழுதுகள் தாங்கி நிற்க ஆலமரம் காலாகாலத்துக்கும் நிலைத்து நிற்கும். தன் நிழல்தேடி வருபவர்களை இருகரம் நீட்டி அரவணைத்துக் கொண்டு இளைப்பாறுதல் தரும். நிழல் தேடி வருகிற உயிரினங்கள் ஏற்படுத்தும் அசுத்தங்களினால் அந்த இடம் வேண்டுமானால் சிறிது மாசுபடுமே தவிர, ஆலமரத்துக்கு எந்த இழுக்கும் வந்து விடாது!!"
இந்த வரிகளை எனது நட்பு வட்டங்களோடு பகிர்ந்து சந்தோஷப்பட்டிருக் கிறேன். நான் ஒரு இந்திய பிரஜை என்று சொல்வதில் பெருமைப்பட்டிரு க்கிறேன். ஆனால் இந்துமதத்தை, இந்தியாவைக் காப்பாற்றுகிறோம் என்று சொல்லிக்கொண்டு ஒரு சிலர் தங்கள் அபாயகரமான கற்பனை களால் எதை எதையோ செய்வதைப் பார்க்கும்போது, சிறுவயதில் பதியம் போடப்பட்ட இந்த வரிகள் எனது நினைவிலிருந்து கொஞ்சங்கொஞ்சமாக அழிந்து கொண்டு வருகிறது.
தொழில் நுட்பத்தில் நாகரிக வளர்ச்சியில் வேண்டுமானால் நாம் நவீன இந்தியாவில் இருப்போம். ஆனால் மனித நேயம், உயர்ந்த சிந்தனையில் பழங்கால இந்தியாவுக்கே நாம் போய்விடலாம். வாருங்கள் தோழர்களே !
No comments:
Post a Comment