Labels

About myself Name : Kumari S. Arunachalam alias Aruna S. Shanmugam Occupation : Form

Monday, April 04, 2016

DEAR VIEWERS,

                               
என்னை நினைச்சே நானும் சிரிச்சேன் !

நம்மோட சின்ன வயசிலே, நம்ம வீட்டுப்பெரியவங்க (கல்வி, பொது அறிவு, வெளியுலக அனுபவம் இல்லாதவர்கள்) செய்யும், சொல்லும் விஷயங்களை கிண்டல் கேலி பண்ணி ரசித்திருப்போம். அதே போன்ற செயல்களை பிற்காலத்தில் நாம் செய்யும்போது ..... அப்படி ஒன்றை செய்துவிட்டு என்னை நினைச்சே நானும் சிரிச்சேன். அதை உங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன். 
1965-ம் வருடம்....அப்போது நாங்கள் பாளையங்கோட்டையில் இருந்தோம். நான் எட்டாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன். நெல்லையிலிருந்து திருச்செந்தூர் சென்று கொண்டிருந்தோம், ரயிலில். ஒரு பிச்சைக்காரன் அந்த ரயிலில் ஏறி, அங்குள்ள ஒவ்வொருவரிடமும் கை நீட்டிப் பிச்சை கேட்டுக் கொண்டிருந்தான். கிழிந்த ஆடை, அழுக்கு மேனி என்று பரதேசி கோலத்தில் இருந்தான் (அப்படி இருந்தால்தான் அவனைப் பிச்சைக்காரன் என்று சொல்லுவோம் ஒருகாலத்தில்!. இப்போதெல்லாம்வெள்ளையும் சொள்ளையுமா டிப்டாப் கோலத்தில் அலுவலகங்களில் உட்கார்ந்து கொண்டு "என்னைக் கவனியுங்க" என்று வாய் விட்டுக் கேட்கிறார்கள். இவர்களை எந்த லிஸ்டில் சேர்ப்பதென்று தெரியவில்லை). அவனுக்கு யாரும் எதுவும் கொடுக்கவில்லை. நாயை விரட்டுவது போல விரட்டிக் கொண்டிருந்தார்கள்.
சிறிது நேரத்தில் டிக்கெட் செக் பண்ணும் T.T.R  வண்டிக்குள் வந்து ஒருவர் முன்னே கை நீட்டவும் எல்லோரும் பரபரப்புடன் அவரவர் பைக்குள் கை விட்டுக் கொண்டிருந்தார்கள் தங்கள் டிக்கெட்டை வெளியில் எடுத்துக் காட்டுவதற்காக. அவர்   T.T.R என்பது எங்கள் வீட்டுப் பாட்டியம்மாவுக்குத் தெரியாது. அவர் ரொம்ப கேஷுவலாக , "பரட்டை கோலத்தில் ஒருத்தன் வந்து பிச்சை கேட்டால் அவனுக்கு ஒருத்தரும் ஒண்ணும் குடுக்க மாட்டீங்க. ஆனா எவனாவது ஒருத்தன்  வெளுப்புத்துணி மாட்டிட்டு வந்து டிப்டாப்பா கை ஏந்தினால் அத்தனை பேரும் பிச்சை போடுவீங்களா ?" என்று சத்தமாகக் கேட்டுவிட்டார். T.T.R சிரித்துக் கொண்டே "என் நிலைமையைப் பார்த்தீங்களா" என்றபடி  அங்கிருந்து போய் விட்டார். அதன்பிறகு ட்ரைன் பற்றிய பேச்சு வரும்போதெல்லாம் இந்த சம்பவத்தை சொல்லிச் சிரிப்போம். 
1982 ல் வீட்டிலிருந்து அலுவலகத்துக்கு நான் எலெக்ரிக் ட்ரைன்ல் போய்வருவேன். டூ வீலர் ஓட்ட ஆரம்பித்தபின் எலெக்ரிக் ட்ரைனில் பயணிப்பது முற்றிலுமாக நின்று போனது. அதன் பிறகு எப்போதாவது வெளியூர் போனால் உண்டு. அதுவும் ரொம்பவும் அபூர்வமாகத்தான் ரயில் பயணம். hire taxi, bus என்று மாற்றிக்கொண்டோம். ரயில்வே சர்வீஸில் பெண்கள் ஸ்டேஷன் மாஸ்டர், மற்றும் டிக்கெட் செக்கிங் வேலையில் இருப்பது  எனக்குத்  தெரியாது, போன மாதம் வரை. After retirement வீட்டில் போரடிக்கிறதென்று மல்லிகை மகள் பத்திரிக்கை ஆபீஸில் வேலையில் சேர்ந்ததும் மறுபடியும் என்னுடைய ரயில் பயணம் ஆரம்பித்தது. கோடம்பாக்கம் ஸ்டேஷனில் இறங்கி staircase நோக்கி நடந்து கொண்டிருந்தபோது ஒரு பெண் என் எதிரே வந்து நின்று கொண்டு கை நீட்டினார். அந்தப் பெண்ணைப் பார்த்ததும், "கைகால் நல்லாத் தானே இருக்குது. உழைச்சுப் பிழைக்க என்ன கேடு ?" என்று கேட்க நினைத்து வார்த்தை தொண்டை வரை வந்து அங்கேயே நின்றுவிட்டது. எனக்குப் பின்னால் வந்து கொண்டிருந்தவர்கள் கைப்பைக்குள் கைவிட்டு டிக்கெட்டை எடுத்துக் காட்டவும், நான் சுதாரித்துக் கொண்டு  "ஓஹோ. இந்த லேடி டிக்கெட் செக் பண்றவங்க போலிருக்குது" என்று நினைத்துக் கொண்டு என்னுடைய சீசன் டிக்கெட்டை எடுத்துக் காட்டினேன்.   
இதை நினைத்து என்னால் சிரிப்பை கண்ட்ரோல் பண்ணவே முடிய வில்லை. வீட்டுக்குப் போனதும் இந்த சம்பவத்தை எங்கள் வீட்டுப் பையனிடம் சொன்னதும், "நீ கேட்க நினைச்சதை உடனே கேட்டுட்டு அந்த லேடியோட ரியாக்ஸன் என்னனு பார்த்திருக்கணும். அதை செய்யாமே விட்டுட்டியே " என்று சொன்னதும்  "அட .. ஆமாம்லே " என்று நினைத்துக் கொண்டேன். இந்த நிமிடம்கூட இதை நினைத்துச் சிரிக்கிறேன். 
(இந்த மேட்டருக்கு மேலே உள்ள படம் ஓகே தானே ?! தற்போது எனது ப்ளாக்கில் வெளியாகும் படங்கள் அனைத்தும் face book லிருந்து திருடப்பட்டவை ஆகும். )

No comments:

Post a Comment