Labels

About myself Name : Kumari S. Arunachalam alias Aruna S. Shanmugam Occupation : Form

Saturday, April 23, 2016

தூங்காத கண்ணென்று ஒன்று !

"என்னங்க .."
"ம்.... சொல்லு ..."
"தூக்கமே வரலே "
"அதுக்குத்தான் பகலில் தூங்கக்கூடாதுங்கிறது "
"பகலில் தூக்கமா ?"
"ஆங்க் .....ஆபீஸில் ?"
"உங்களை அப்படியே......."
"சரி .... சரி விடு .... மனசுக்குள்ளே ஒண்ணு ரெண்டு சொல்லிட்டே இரு. நூறு எண்ணி முடியறதுக்குள் தூக்கம் வந்துடும்."
"ஏற்கனவே ஆயிரம் வரை எண்ணி முடிச்சாச்சு "
"அப்படின்னா ... பிள்ளையார் ஸ்லோகம் சொல்லிட்டு இரு .... மனசுக்குள்ளேயே "
"சொல்லி முடிச்சிட்டேன்"
"முருகன் ஸ்துதி "
"அதுவும் முடிஞ்சுது ... விஷ்ணு ஸ்துதி, லிங்காஷ்டகம் எல்லாமே சொல்லி முடிச்சாச்சு "
"உடம்புக்கு எதாச்சும் பண்ணுதா ?"
"அதெல்லாம் இல்லே. தூக்கந்தான் வரலே "
"சரி .. தூக்கம் வர்ற வரை ஏதாது பினாத்திட்டு ... ஸாரி .. ஸாரி .. பேசிட்டு இரு "
"நான் பேச ஆரம்பிச்சாதான் உங்களுக்கு உடனே கொட்டாவி வந்துடுமே "
"நீ தூங்கறவரை அதெல்லாம் வராமே நான் பார்த்துக்கறேன் "
"என் தம்பி பொண்ணுக்கு அடுத்த மாசம் காதுகுத்து விசேஷம் ... ஞாபகம் இருக்குதுதானே "
"அதை நான் மறந்தா என்னை நீ குத்திடமாட்டே.. சரி.. அதுக்கு இப்போ என்ன ?"
"சீர் செய்யறது செய்றோம். அதை கொஞ்சம் நாலு பேர் பார்த்து மூக்கு மேலே விரலை வைக்கிறாப்லே பண்ணிடணும் "
"என்ன செய்யணும் ?"
"நல்ல கெட்டியா .. அடர்த்தியா இருக்கிறாப்லே கம்மல் ஜிமிக்கி "
"பச்சைக் குழந்தைக்கு .... அது பாரமா தோணாதா ?"
"சபை மரியாதைக்கு செய்வோம். அப்புறம் அவங்க கழட்டி வச்சுக்கட்டுமே "
"சரி "
"பட்டுப் பாவாடை ரவிக்கை ..."
"சின்னதா கொலுசு "
"அது அவசியம்கிறே ?"
"வெள்ளியிலே தானே போடப் போறோம் "
"சரி "
"தம்பிக்கு இப்போ பிஸினஸ் கொஞ்சம் டல்லடிக்குது... சாப்பாட்டு செலவை நாம ஏத்துக்குவோம்.... இருந்திருந்து சாப்பாட்டு விஷயத்திலே ஏன் கணக்குப் பார்க்கணும்  "
"சரி .... அடுத்தது ?"
"அடுத்ததென்ன ... சீர் வரிசை தட்டு...  என்னோட பொண்ணுக்கு  அத்தை சீர்னு சொல்லி என் தம்பி பொண்டாட்டி ஊர் முழுக்க டமாரம் அடிக்கிறாப்லே இருக்கணும் "
"போகவர டாக்ஸி ஏற்பாடு பண்ணிடுங்க.. இந்த வெயிலில் பஸ்ஸில் பிரயாணம் பண்ண முடியாது"
"சரி... உன் தம்பி வீட்டுக்குப் போயிட்டு வர்ற வழியில்தானே என் அக்கா வீடு இருக்குது. அவ பொண்ணு பெரியவளாகி ஆறு மாசம் ஆகுது... இப்போ வசதி பத்தாதுன்னு அவ விசேஷம் எதுவும் வைக்கலே. இருந்தாலும் நாம் ஒருமுறை  எட்டிப் பார்த்துட்டு வந்துடலாமே "
"ஆஆ ......வ்வ் .... எனக்குத் தூக்கம் வருது. சும்மா பினாத்தாமே மனுஷியைத் தூங்க விடுங்க "
"....................!!"

No comments:

Post a Comment