Labels

About myself Name : Kumari S. Arunachalam alias Aruna S. Shanmugam Occupation : Form

Sunday, April 17, 2016

குழந்தைகளுக்கான குறுந்தொடர் - 34

               
         அச்சுப்பிச்சு அப்புமணி !
சேகர் அங்கிருந்து வெளியேறியதும், நிவேதி தாவின் அருகில் வந்த அப்புமணி, "ஏய் .. ராஜகுமாரி .... நிஜமாவே உனக்கு பயமே இல்லியா ?" என்று கேட்டான்.
அதைக் கேட்ட நிவேதிதா, "பயப்படறதாலே ஏதாது நடக்கும்னா பயப்படலாம். வாட்ஸ் த யூஸ் ? அடுத்தது என்ன...அடுத்தது என்னனு யோசிக்கணுமே தவிர மூலையில் உட்கார்ந்து அழவா முடியும்? எங்க தாத்தா அடிக்கடி சொல்வார்,  'பிக்கிறதும் இறக்கிறதும் ஒரேஒரு முறை தான். ஆனால் பயப்படறவன் தினமும் செத்துச்செத்துப் பிழைப்பா'னு. அவங்க நோக்கம் என்னனு தெரிஞ்சு அதுக்குத் தக்கபடி போராட நான் தயாரா இருந்தேன். அவங்க பேசினதை வச்சு இவங்க என்னை ஆள் மாறிக் கடத்திட்டாங்கனு நல்லாவே தெரிஞ்சு போச்சு. அடுத்தாப்லே அவங்க நோக்கம் என்னை வச்சு எங்க வீட்டில் பணம் வாங்க முடியுமாங்கிறது தான். நான் மெண்டல் மாதிரி ஆக்ட் பண்ணவும், என்கிட்டே இருந்து அவங்களாலே எந்த இன்பர்மேஷனும் கலெக்ட் பண்ணமுடியலே. இதைவிட ஒரு ப்ராஞ்ச் ஸ்டோரி .. ஏற்கனவே இவங்க சென்னையில் ஒரு வெளிநாட்டுப் பொண்ணைக் கடத்த ப்ளான் பண்ணி அது சொதப்பிட்டு போலிருக்குது. ஒருவேளை அது நானா இருக்குமோனு இவங்களுக்கு ஒரு டௌட். ஆனா அதை கன்பார்ம் பண்ண முடியாதபடி அவங்க மாதிரி பேசி அவங்களைக் குழப்பி விட்டுட்டேன். என்னாலே அவங்களுக்கு எந்த யூஸும் இல்லேங்கிற முடிவுக்கு வந்தாங்க. என்னைத் தெருவோரமா விட்டுட்டுப் போகாம இவங்க கிட்டே கைமாத்தி விட்டுட் டாங்க. அவ்வளவுதான் " என்று சொன்னாள் 
"என்ன நீ கதைமாதிரி எதையோ சொல்றே?" என்று கேட்டான் அப்புமணி .
"அப்பு ... சில சமயங்களில் நடக்கிற சில சம்பவங்கள் சினிமாக் கதையை மிஞ்சும்படி இருக்கும்..."
"எனக்கு ஒண்ணுமே புரியலே "
"இரு ... உனக்குப் புரியும்படி சொல்றேன் ... முன்னே உங்க ப்ரைம் மினிஸ்டர் இந்திரா காந்தியை அவங்க வீட்டிலே இருந்த ஒரு செக்யூரிட்டி சுட்டுக் கொன்னான் தானே ?"
"ஆமாம் .. எங்க அம்மா அடிக்கடி சொல்வாங்க..... அந்தம்மா தைரியமான பொம்பளைன்னு "
"சரி ... ஓகே .. அந்த சம்பவம் நடக்கும் முன்னாலே அதே பாணியிலே ஒரு சினிமா வந்திருந்தால் என்ன நடந்திருக்கும் தெரியுமா?"
"என்ன நடந்திருக்கும் ?"
"நாட்டில் உளவுத்துறைன்னு ஒண்ணுஇருக்கிறது டைரக்டருக்குத் தெரியா தா? ஒரு நாட்டோட ப்ரைம் மினிஸ்டரை அவர் வீட்டு  செக்யூரிட்டி சுட்டுக் கொல்றதா டைரக்டர் கதை விட்டுருக்கிறார். வழக்கமா எல்லாரும் மத்தவங்க காதில் பூ சுத்துவாங்க. இந்த டைரக்டர் நம்ம காதில் பெரிய பூந்தோட்டமே வளர்க்கிறார்னு விமரிசனம் பண்ணி இருப்பாங்க.அப்பு ... கற்பனையை மீறிய சில சம்பவங்களும் நடைமுறையில் இருக்கத்தான் செய்யுது. அதைப் போல ஒரு இன்சிடெண்ட்தான் நான் கடத்தப்பட்டதும். நான் யாருன்னு தெரியாமலே என்னைக் கடத்திட்டு, என்னாலே எந்த யூஸும் இல்லேன்னுதெரிஞ்சதும்,'எங்களுக்குத்தேவையில்லை... உனக்கு தேவைனா வச்சுக்கோ'னு சொல்ற மாதிரி என்னை இங்கே கொண்டாந்து சேர்த்துட்டு அந்த பார்ட்டி  கழண்டுக்கிச்சு. உங்க அண்ணன் ஒரு லூஸு ... " என்று நிவேதிதா சொல்லும்போதே , "அண்ணனை தப்பா சொல்றியா?" என்று கோபமாகக் கேட்டான் அப்புமணி 
"ஏய் ... என்ன இது ? கூல் .... கூல்  டௌன் .. உங்க அண்ணா மாதிரி ஒரு புத்திசாலியை இந்த உலகம் முழுக்க தேடினாலும் கிடைக்க மாட்டான். ஆனா உங்க அண்ணா கூட சுத்துதே ஒரு அரை லூஸு .. அது என்னவோ என்னை அவன் கஸ்டடியிலே வச்சிருந்தா பணம் கிடைக்கும்னு நினைச்சு இங்கே கொண்டு வந்து வச்சிருக்குது. பணம் கிடைக்குமோ இல்லையோ ஆனா களி நிச்சயம் " என்றாள் நிவேதிதா 
"நீ பேசறது எதுவுமே புரியலே " என்றான் அப்புமணி.
"சரி.. சரி .... இந்தப் பேச்சை இதோடு விட்டுடுவோம் " என்று அவனை சமாதானப் படுத்தினாள் நிவேதிதா.   
"எல்லாத்தையும் யோசிக்கணும்னு நீ அடிக்கடி சொல்வியே . அப்படின்னா நீ யோசிக்கவே தெரியாமேதான் அங்கேருந்து இங்கே வரைக்கும் இவங்க பின்னாடி வந்தியா ?"
"நிறையவே யோசிச்சேன் அப்பு. இந்தியா எனக்குப் புதுசு. இங்கே உள்ளவங்க பேசற மொழியிலே எனக்கு தமிழ் தெரியும். இந்தி கொஞ்சங் கொஞ்சம் தெரியும். நான் எந்த இடத்திலே இருக்கிறேன் .. அந்த இடத்தில் இருந்தவங்க பேசற மொழி என்னனு தெரியாத சூழ்நிலையில்தான் நான் இருந்தேன். உன்னை மீட் பண்ணுவேன்னு கனவுலே கூட நான் நினைக்கலே. " என்று உணர்ச்சிப் பெருக்குடன் சொன்னாள் நிவேதிதா.
---------------------------------------------------- தொடரும்------------------------------------------------ 

No comments:

Post a Comment