டீவி நியூஸ் பார்ப்பதில் அம்மாவுக்கு ஆர்வம் உண்டு. (வயது கிட்டத்தட்ட 90). ஒருநாள், ஒருவர் (யார், எந்த டீவியில் என்பதெல்லாம் நினைவில் இல்லை) வாகனங்களிலிருந்து வெளிவரும் புகையும் ,மண்ணின் மாசு படிந்த நிலையுமே இயற்கை சீற்றங்களுக்கும், உலக அழிவுக்கும் காரணம் என்ற செய்தியை சொல்ல, "கீழே உள்ள புகையும் தூசியும் மேலே போய் சீதோஷ்ணத்தை மாத்துதுன்னு இவன் சொல்லுதானே, அப்படின்னாமேலேஎத்தனைஎத்தனையோராக்கெட்,என்னென்னவோகோள் கீள் எல்லாம் விட்டுருக்காங்களே. அதனாலே எந்த பாதிப்பும் மண்ணுக்கு வராதா ?" என்று அம்மா கேட்டாள்.
அது என்னை சிந்திக்க வைத்தது. இன்றுவரை என்னைக் கேள்வி கேட்டுக் கொண்டிருக்கிறது. விவரம் அறிந்தவர்கள் அதை எனக்குத் தெரிவியுங்க . ப்ளீஸ் .... ப்ளீஸ்ங்க ...
தொடர்புக்கு : arunasshanmugam@gmail.com
No comments:
Post a Comment