Labels

About myself Name : Kumari S. Arunachalam alias Aruna S. Shanmugam Occupation : Form

Thursday, March 03, 2016

DEAR VIEWERS

,

face book ல் வெளியான எனது படத்தில் இருக்கும் மற்ற இருவர் யார் என்று போனில் விசாரித்த நண்பர்களுக்கு எனது பதில்: (அது உங்கள் பார்வைக்கும்)ஓவியர் திரு. ஜெயராஜ் அவர்கள் தனது துணைவியாருடன். இந்தப் படம் 2014ல் TVS, சென்னையில் எடுக்கப்பட்டது. அங்கு நடந்த விழாவில் கோலப் போட்டிக்கு நடுவராக நானும், ஓவியப் போட்டிக்கு நடுவராக  ஓவியர் திரு. ஜெயராஜ் அவர்களும் கலந்து கொண்ட போது எடுத்தபடம். "எல்லாருக்குந்தான் விரல் இருக்குது. ஆனா  உங்களோட   விரல்கள் மட்டும் வித்தை காட்டுது. உங்கள் விரலில் உள்ள பவரில் இருந்து கொஞ்சத்தை நான் எடுத்துக்கப் போறேன், உங்க மனைவியோட சம்மதத்தோடு " என்று சொல்லி அவரின் ஆட்காட்டி விரலைத் தொட்டுத் தடவி, "இப்போ என்னோட விரலுக்கும் பவர் வந்துட்டுது "என்றேன். இதை அவரோட மனைவி மிகவும் ரசித்தார். மனம் விட்டுப் பேசினார். மறக்கவே முடியாத சந்திப்பு. பெண்களின் இடுப்பு வளைவை வரைவதில் அவருக்கு நிகர் அவர்தான். அந்தக் காலத்தில் (அவர் அறிமுகமான காலத்தில்) அவர் வரையும் ஓவியங்களை பெண்கள் (குறிப்பாக கல்லூரி மாணவிகள்) மிகவும் ரசித்தார்கள். எல்லாப் பத்திரிக்கையிலும் அவர் வரைந்த படங்கள் வெளியாகின. படங்களைப் பார்ப்பதற்காகவே பத்திரிக்கை வாங்கியவர்களும் உண்டு. இதை நான் அவரிடம் சொன்னபோது சங்கோசத்தோடு நெளிந்தார்.

No comments:

Post a Comment