இன்று train ல் பயணிக்கும்போது கேட்ட உரையாடல்.. பேசிக் கொண்டிருந்த அந்தப் பெண்கள் அனைவருமே படித்தவர்கள் வேலை பார்க்கிற வர்கள்தான். அவர்கள் பேச்சு - பறக்கும் படையின் பணம் பறிமுதல் பற்றியது. பேச்சு :
விவரம்:
எந்த வேலையையாவது எவனாவது துட்டு வாங்காமே செய்து தர்றானா என்ன? அவன் அத்தனை கோடி சுருட்டினான் இவன் இத்தனை கோடி சுருட்டினான்னு தினமும் நியூஸ் வருது. சுருட்டின பணத்தை திரும்ப வாங்கினாங்களா ? வாங்கின பணத்தை என்ன செய்தாங்கனு ஏதாவது தகவல் வருதா ? அரசியல்வாதிங்க கையிலிருந்து பொது மக்களுக்குப் பணம் வர்றது அஞ்சு வருஷத்துக்கு ஒருக்கதான்.அதை ஏன் தடுக்கணும்? இதுதான் நேரம்னு அவனுக கிட்டேயிருந்து பணம் பறிக்கிறதை விட்டுட்டு வேண்டாத வேலை பார்க்கிறாங்க. அவனவன் கஷ்டப்பட்டு சம்பாதிச்ச பணத்தையா எடுத்துக் குடுக்கிறான்? வாங்கினதில் ஒரு துளியைத் தானே திருப்பிக் குடுக்கிறான் . குடுக்கட்டுமே. அப்படியாவது சுருட்டினதெல்லாம் வெளியே வரட்டும். அதுக்கு ஏன் ஆப்பு வைக்கணும்.? குடுக்க கொண்டு வர்ற பணத்தைப் பத்திரப் படுத்தி திரும்ப அவங்க கிட்டேயே கொண்டு போய் சேர்த்திடுவாங்களாமா ! எந்த ஊர் நியாயம் இது ?
இந்தக் கேள்விக்கு பதில் தெரிஞ்சவங்க சொல்லுங்களேன். விடையை தெரிந்து கொள்ள நானும் ஆவலாக இருக்கிறேன்.
(சின்னக் குழந்தைங்க கூட சிரிப்பா சிரிக்கிற அளவுக்கு எந்த கேள்விக்கும் பதில் தெரியாத மட ஜென்மமா நான் இருக்கிறேன்!)
No comments:
Post a Comment