Labels

About myself Name : Kumari S. Arunachalam alias Aruna S. Shanmugam Occupation : Form

Sunday, March 27, 2016

குழந்தைகளுக்கான குறுந் தொடர் - 31


  அச்சுப்பிச்சு   அப்புமணி !              சேகருக்கு போன் பண்ணி சலித்துப் போன தனம், "தம்பி போனை ஆப் பண்ணி வச்சிருக்கே " என்று சொன்னவள், துணி துவைக்கக் கிளம்பிப் போய்விட்டாள்.
சற்று நேரத்தில், "இங்கே தனம்ங்கிறது ...!" என்று கேட்டபடியே ஒருவன் உள்ளே வர "நாந்தான் ... என்ன வேணும் ... உள்ளாற வா... குழாயண்டே இருக்கிறேன் " என்று குரல் கொடுத்தாள் தனம். 
ஒரு சிறுமியை அழைத்துக் கொண்டு உள்ளே வந்த அவன்,"பிரவீன் சொன்ன தனம்..." என்று சொல்லும்போதே, "அந்த தனம் நானே தான். ஒரு பொண்ணு வரும்னு தம்பி சொல்லிச்சு. இதுதான் அந்தப் பொண்ணா ?" என்று கேட்டாள் தனம்.
"நான் அக்பர் வந்துட்டுப் போனதா சொல்லுங்க. இந்த பாப்பா இங்கே இருக்கட்டும். மத்ததை நான் அவங்ககிட்டே பேசிக்கிறேன். பாப்பா பத்திரம் " என்று சொல்லிவிட்டு அங்கிருந்து வேகமாக நகர்ந்தான். 
அவன் சென்ற சில நொடியிலேயே சேகர் வேகமாக அங்கு வந்தான்.
"என்ன தனம் ... போன் பண்ணியிருக்கிறே போலிருக்கு. மிஸ்ட் காலில் பார்த்தேன் .அப்புமணி ஏதாவது அடம் பண்றானா ? உனக்கு  நான் போன் போட்டால் நீ எடுக்கவே இல்லை." என்றான் பரபரப்புடன்.
"கோவிச்சுக்காதே கண்ணு. துணி துவைக்க  வந்தேன். போனை வீட்டில் வச்சிட்டு வந்துட்டேன்..உன் அண்ணாத்தே அந்தப் பையனைப் பார்த்துட்டு ரொம்ப சந்தோசப்பட்டார். அவனைத் தொட்டு முத்தம் குடுத்தார். அதை சொல்லத்தான் போன் போட்டேன். நீ கொண்டு போய் சேர்த்தியே, அந்த ஆஸ்பத்திரி மருந்து நல்லாவே வேலை செய்யுது" என்றாள் தனம்.
"நல்ல சேதி சொல்லியிருக்கே.."என்ற சேகர், அப்போதுதான் அவளருகில் நின்று கொண்டிருந்த சிறுமியைக் கவனித்தான்.
"யார் இது ?" என்றான்.
"ஒருபொம்பளப்பிள்ளை வரும்னு பிரவீன் தம்பி சொல்லிட்டு இருந்துச்சே அதுதான் இது. இப்போ கொஞ்சம் முன்னேதான் அக்பர்னு ஒரு தம்பி கொண்டாந்து விட்டுச்சு  "
"சரி... சரி.. உள்ளே போய்ப் பேசிக்கலாம் " என்று சொல்லிவிட்டு, அந்த சிறுமியின் கைகளைப் பற்றி அழைத்துக் கொண்டு தனம் வருவதற்கு முன்பாகவே "அப்பு " என்று குரல் கொடுத்தபடி தனம் வீட்டுக்குள் நுழைந்தான் சேகர். 
"அண்ணா ... என்னை விட்டுட்டு நீங்க இருக்க மாட்டீங்கன்னு தெரியும் " என்றபடி ஓடிவந்த அப்புமணி,சேகர்அருகில்நின்ற சிறுமியைப் பார்த்ததும் "ஹாய்...ராஜகுமாரி"என்றுசந்தோசக்கூச்சலிட,"பேசாமலிரு"என்று கண் களால் ஜாடை செய்தாள் அவள்.
"இந்தப் பொண்ணை உனக்குத் தெரியுமா ?" என்று கேட்டான் சேகர் ஆச்சரியத்துடன்.
"ஊஹும் ... கதையில் வர்ற ராஜகுமாரி மாதிரி இருக்கிறான்னு சொல்ல வந்தேன்"என்று சொல்லிச்சமாளித்தான் அப்புமணி,வந்தஅந்த சிறுமியின் எச்சரிக்கையைப் புரிந்து கொண்டவனாக.  
"அப்புக்கண்ணா...உனக்குப் பொழுதுபோகலேன்னு என்னைப் படுத்தினே  . உன்னோட விளையாட ஒரு ஆள் வந்தாச்சு " என்றாள் தனம்.
"தும்கோ க்யா சாஹியே ? மைம் ஜானா சாஹியே " என்றாள் அந்த சிறுமி  "அண்ணா... இது என்ன சொல்லுது ?" என்று கேட்டான் அப்புமணி 
"அது இந்தியிலே பேசுது. உனக்கு என்ன வேணும் என்னைப் போக விடுன்னு சொல்லுது " என்று விளக்கினான் சேகர் 
"போறேன்னு சொன்னா... விட்டுட வேண்டியதுதானே " என்றான் அப்புமணி  
"உனக்கு ஒன்னும் தெரியாது. நீ பேசாமலிரு "
"ஏ ...க்யா ?"
"என்னண்ணா இது ! திடீர்னு க்யா க்யானு  கத்துது ?"
அதற்குப்பதில் சொல்லாத சேகர்,"அண்ணாஎங்கே?"என்றுஉள் அறைக்குள் எட்டிப் பார்த்தான். பிறகு, "தூங்கறார் ... எழுப்ப வேண்டாம் . ஒரு அவசர வேலை அப்புறமா வர்றேன். தனம்... உனக்கு இந்தி தெரியும் தானே. பத்திரமா பார்த்துக்கோ. வாசல் வரை வா. நான் குழந்தைகளுக்கு சாப்பாடு வாங்கிக் குடுத்துட்டுப் போயிடறேன் " என்று சொல்லிவிட்டு வேகமாக வெளியில் வர அவனைத் தொடர்ந்து தனமும் வந்தாள் 
"ஏம்ப்பா ... நான்.. சோறாக்கிப் போட மாட்டேனா ?"
"நீ எப்போ ஆக்கி அதுங்க எப்போ சாப்பிட ... இப்போ டிபன் வாங்கி தர்றேன். அப்புறமா சமைச்சுப் போடு ..."
"யாரும் பசின்னு சொல்லிட்டா உனக்குப் பொறுக்காதே !" என்றபடி வாசலில்  வந்து நின்ற  தனம், சேகரின் வருகைக்காக காத்திருந்தாள்.
உள்ளே .... தனத்தின் வீட்டினுள்.....
"ஏய் ... நீ ராஜகுமாரி.... இல்லே .... இல்லே....நிவேதிதா தானே ?" என்று அப்புமணி சத்தமாகக் கேட்க, விரைந்து வந்து அவன் வாயைக் கைகளால் பொத்திய நிவேதிதா"அசடு.. அசடு.. என்னைத் தெரிஞ்ச மாதிரி காட்டிக் காதே " என்றாள்
"ஏன் ?" என்று ரகசியக் குரலில் கேட்டான் அப்புமணி 
"உன்னைக் கடத்தி வச்சிருக்காங்களா ?" என்று பரபரப்புடன் கேட்டாள் நிவேதிதா  
"நான் உலகத்தை சுத்திப் பார்க்க வந்திருக்கிறது உனக்குத் தெரியும்தானே  பிறகு ஏன் இப்படிக் கேட்கிறே ?"
'என்னைக் கடத்திட்டு வந்திருக்காங்க. நாம் ரெண்டு பேரும் தனியா இருக்கும்போது மட்டும் பேசலாம். மத்தவங்க எதிரிலே என்னைத் தெரிஞ்சுக் கிட்ட மாதிரி காட்டிக்காதே... நீ எப்படி இங்கே வந்தே ?"
"சேகர் அண்ணா கூட வந்தேன் "
"அவர் உனக்கு அண்ணனா ?"
"ஆமாம் அவர் அண்ணன்... நீ அக்கா மாதிரி "என்று சொல்லிச் சிரித்தான் அப்புமணி  
"யாரோ வர்ற மாதிரி இருக்குது. நீ அங்கே போயிடு .. எதுவும் தெரியாத மாதிரி இரு  " என்று மீண்டும் எச்சரித்தாள் நிவேதிதா.
டிபன் பொட்டலங்களுடன் உள்ளே வந்த தனம், "கண்ணுங்களா .. சாப்பிட வாங்க  "என்று கூப்பிட்டாள் 
"நை... முஜே ....." என்று அவள் சொல்லும்போதே, "நீச்சே பைட்டோ ..காவோ " என்று தனம் சொல்ல "நை... நை..." என்றாள் நிவேதிதா.
"தனம் அக்கா... அந்தப் பொண்ணு நெய் கேட்குது " அப்புமணி சொல்ல, தனம் அதைக் கேட்டு பெருங்குரலில் சிரிக்க... நிவேதிதா சிரிப்பை அடக்க முடியாமல் தவித்தாள்.
"அது எதுவும் வேணா ங்கிறதை அப்படி சொல்லுது " என்றாள் தனம்.
"அது நைனு சின்ன வார்த்தை சொல்லுது. அதுக்கு இவ்வளவு பெரிய அர்த்தம் சொல்றே ?" என்று அப்புமணி கேட்க, சிரிப்பை அடக்கமுடியாமல் தவித்தாள் நிவேதிதா.
------------------------------------------------------- தொடரும் ----------------------------------------- 

No comments:

Post a Comment