வாழும் போது வருவோர்க்கெல்லாம் வார்த்தையாலே நன்றி சொல்வோம். வாழ்வா சாவா என்பது தெரியாமல் தவிக்கும்போது உதவிக்கரம் நீட்டி காப்பாற்றியவர்களுக்கு எந்த விதத்தில் நன்றி சொல்வது என்பது தெரியவில்லை. தமிழில் ஏகப்பட்ட அகராதிகள் வார்த்தைகள் இருந்தாலும் "நன்றி " என்ற வார்த்தைக்கு ஈடாக எங்கள் கண்ணீரையே காணிக்கை ஆக்க வேண்டும். சென்னை, முடிச்சூர் ரோட்டில் உள்ள பாரதிநகரில் எங்கள் வீட்டின் முன் ஓடிய வெள்ளத்தின் அளவு 12 அடியைத் தாண்டி விட்டது. BOAT, BOAT என்று கத்தினோம். வீட்டின் முன்பாக பல போட்ஸ் போன போதும் எங்கள் வீட்டுக்குள் வர முடியாத நிலைமை. மறுநாள் முஸ்லிம் முன்னேற்றக் கழக சகோதரர்கள் எங்களை பரிசலில் ஏற்றி பாதுகாப்பான இடத்துக் கொண்டு வந்து சேர்த்து காபி பிஸ்கட் சாப்பாடு என்று கொடுத்து எங்களைத் திணற வைத்தார்கள். அம்மாவின் உடல் நலனைக் கருத்தில் கொண்டு ஆம்புலன்சில் ஏற்றி தாம்பரம் வரை அனுப்பி வைத்தார்கள். அதன் பின் எனது சகோதரியின் வீட்டுக்கு பத்திரமாக வந்து சேர்ந்தோம். நாங்கள் எங்கே எப்படி இருக்கிறோம் என்பது தெரியாத எங்களது குடும்ப உறவுகள் தினமலரில் வெளியான இந்தப் படத்தைப் பார்த்த பின்புதான் நிம்மதிப் பெருமூச்சு விட்டுருக்கிறார்கள்.இந்தப் படத்தை எடுத்த போட்டோக்ராபருக்கும், அதை வெளியிட்ட தினமலர் (04.12.2015) நாளிதழுக்கும் கோடானு கோடி நன்றி.
(நீங்களெல்லாம் போதும் போதும் என்று சொல்லும் அளவுக்கு விரிவான தகவல்கள் பிறகு வெளியாகும்.)
No comments:
Post a Comment