Labels

About myself Name : Kumari S. Arunachalam alias Aruna S. Shanmugam Occupation : Form

Saturday, December 12, 2015

குழந்தைகளுக்கான குறுந்தொடர் - 18

                                           
    அச்சுப்பிச்சு அப்புமணி !
"அம்மா, நான் உலகத்தைச் சுத்திப் பார்த்துட்டு வந்துடுதேன் " என்று கைகளில் பையைப் பிடித்தபடி அப்புமணி சொன்னபோது, ஒருபுறம் அழுகையும் மறுபுறம் ஆற்றாமையும் அம்மாவுக்குள் எழுந்தது, 'இப்படி ஒரு அசடாக இருக்கிறானே என்பதை நினைத்து.
"அப்புமணி , கையில் ஒரு குடை வச்சுக்கோயேன். மழை வரும்போல இருக்குதே !" என்று கவலையுடன் சொன்னாள் அம்மா.
"அம்மா , இன்னிக்கு டீவீயில் ரமணன் வந்தாரா ?" என்று அப்புமணி கேட்க, "ஏன் கண்ணா ? அம்மா இன்னும் டீவீ ஸ்விட்சை 'ஆன்' பண்ணவே இல்லையே. ஏன் கேட்கிறே? எந்த ரமணன் ?" என்று கேட்டாள் அம்மா.
"அதான்ம்மா .... மழையைப் பத்தி சொல்வாரே அவர். அவர் டீவீயில் வந்தால் மழை வரும். அவர் வராட்டா மழையும் வராது" என்றான் அப்புமணி.
"எதுக்கும் கையில் இருக்கட்டும்"என்று சொல்லி  குடையைக் கொண்டு வந்து கொடுத்தாள் அம்மா. அப்புமணி வீட்டை விட்டுக் கிளம்பிய அதே நேரம் .... சென்னையில் உள்ள ஒரு வீட்டில் ;;;;
"தலைவா .... இன்னிக்கு எந்த ஏரியா போகணும் ?" என்று ஒருவன் கேட்க , "இந்த ஏரியாதான்னு கணக்கு வழக்கெல்லாம் கிடையாது. ஜனங்க அதிகமா நடமாடற இடத்தில் ஏதாவது ஒரு கலகம் , கலாட்டா பண்ணனும். இல்லே ராத்திரி நேரத்தில் ஏதோ ஒரு ஏரியாக்குப் போய் அங்குள்ள ஏதாது சிலையை உடைக்கணும். இல்லாட்டா கோயில் உண்டியலை உடைச்சு திருடணும். அவ்வளவுதான் " என்றான் மற்றவன் .
"தலைவா ... எனக்கு ஒண்ணே ஒண்ணு மட்டும் புரியலே தலைவா "
"ஒண்ணே ஒண்ணு மட்டும் தானே  புரியலே. மத்ததெல்லாம் புரியுது தானே. அது போதும். கம்முனு வா "
"தலைவா "
"அட .... கம்முனு வா கசுமாலம். சும்மா தொனதொனணு பேசிட்டு இராதே . சொல்றதை மட்டும் செய்"
"தலைவா ... நான் தொழிலுக்குப் புதுசு தலைவா "
"அட ... ஒண்ணு விட்டேன்னா கன்னம் வீங்கிப் போயிடும். ஒரு வெங்காயத்தை எடு. அதோ அங்கே கொஞ்சம் கும்பலா ஜனக் கூட்டம் தெரியுது பாரு. அங்கே வீசு " என்று தலைவன் சொல்ல, தொண்டன் அப்படியே செய்தான். அங்கே நின்று கொண்டு  இருந்த அத்தனை பேரும் தலை தெறிக்க அந்த இடத்தை விட்டு ஓடினார்கள். ஒரே கூச்சல் . குழப்பம். அன்றைய மாலைப் பத்திரிக்கைகளில் "சென்னை,சைதாப் பேட்டையருகே குண்டுவீச்சு..அதன் பின்னணி என்ன? குற்றவாளிகளைப் போலீஸ் தேடுகிறது " என்று விரிவான செய்தி  வெளியாகி இருந்தது.
அன்று இரவு.....
"இன்னாடா போட்டிருக்கு பேப்பர்லே ?"
" காலைலே வெங்காயம் வீசினோம் தானே ! நம்மள போலீஸ் தேடுதாம் தலைவா "
"எங்கெல்லாம் தேடுதாங்கனு போட்டிருப்பாங்களே !"
"அட ... ஆமாம் தலைவா "
"எந்தெந்த இடம்னு நோட் பண்ணு. நாம அந்தப் பக்கமே தலை காட்டக் கூடாது "
"நாமதான் வீசினதுன்னு அவங்களுக்குத் தெரியாதே தலைவா. அப்புறமாட்டி இன்னாத்தை வச்சு நம்மள தேடுதானுக ?"
"சரி .. அவனுக டூட்டியை அவனுக பார்க்கட்டும். நாம மத்த வேலையைக் கவனிக்கலாம். "
"நமக்கு யாரிட்டேயும் பகை கிடையாது. பிறகு இன்னாத்துக்கு நாம வெங்காயம் வீசினோம்.?"
"கசுமாலம்.  புறம்போக்கு.... நமக்கு என்ன உத்தரவோ அதை செய்யணும். கேள்வி கேட்கிற வேலை எதுவும் எங்கிட்டே வச்சுக்காதே. ஒருவாட்டி வெங்காயம் வீசினா நம்ம கைமேலே ஆயிரம் தருவானுக. அதை கை நீட்டி  வாங்கினோமா .. அனுபவிச்சோமானு இருக்கணும். "
"சரி தலைவா "
சென்னையின் வேறொரு பகுதியில் .... ஒரு மாடி வீட்டில் ...
"நம்ம பசங்க விளையாடினது இன்னிக்குப் பேப்பர்லே வந்துட்டுது. நாளைக்கு சிலைகளை சேதம் பண்ண அதே பார்ட்டியை அனுப்பவா ராஜு?  இல்லாட்டா நீ வேறே யாரையாவது செட் பண்ணி இருக்கியா ?"
"வேண்டாம் சேகர் .. கையில் காசு வந்ததும் அந்தப் பார்ட்டி இந்தப் பக்கம் வராது. வேறே ஆளுங்களைத்தான் அனுப்பணும்... நவீன்.. பிரவீன் ரெண்டு பேரும் இப்போ எந்த ஏரியா ?"
"சவுத் சைட் அனுப்பினேன் .. தகவல் எதுவும் வரலே.  ஒருவேளை மாட்டிக் கிட்டானுகளோ என்னவோ ! அப்படி எதுவும் நடந்திருந்தால் கூட இந்நேரம் தகவல் வந்திருக்கும்.  பிரவீன் ரொம்பவும் சின்ஸியர் .. அவன் என்ன ஆனான்னு தெரியலையே .. பசங்க வந்தால் கையில் காசைக் குடுத்து அனுப்பு. பேரம் பேசிட்டு இருக்காதே. சரி ... நான் வெளியில் போயிட்டு வர்றேன் ராஜு... "
"எங்கே போறே ? உடன்பிறவா சகோதரனைப் பார்க்கவா ?"
"இந்தக் கிண்டல்தானே வேண்டாங்கிறேன்." என்று சொல்லிவிட்டு அங்கிருந்து வெளியேறினான் சேகர்.
மறுநாள் ரயில் டிக்கெட் இல்லாமலே சென்னை வந்து சேர்ந்தான் அப்புமணி.அப்படி ஒன்று உண்டு என்பதுகூட அப்புமணியின் கவனத்துக்கு வரவில்லை. அவனது நல்ல நேரமா அல்லது ரயில்வே ஊழியரின் கவனக் குறைவா .... சரி ... எதோ ஒன்று. அப்புமணியிடம் யாரும் பயண சீட்டு செக் பண்ண வரவே இல்லை. 
ரயில்வே  காண்டீனைப் பார்த்ததும் காபி குடிக்க ட்ரவுசர் பைக்குள் கையை விட்டு பணத்தை எடுத்தான். அப்போது அப்புமணியின் அம்மா, காவல்துறை அதிகாரியின் கவனத்துக்கு என்று முகவரியிட்டுக் கொடுத்த கடிதம் கீழே விழுந்து காற்றில் பறந்து போனது.. அதை அப்புமணி கவனிக்கவில்லை .
------------------------------------------- தொடரும் -------------------------------------------------------

No comments:

Post a Comment