Labels

About myself Name : Kumari S. Arunachalam alias Aruna S. Shanmugam Occupation : Form

Sunday, September 27, 2015

ப்ளீஸ் .... ப்ளீஸ்ங்க

ஹலோ பிரெண்ட்ஸ் / viewers ,
உங்ககிட்டே ஒரு முக்கியமான விஷயம் பேசணும். அதனாலே என்னதான் தலையே போகிற வேலை இருந்தால்கூட, அதையெல்லாம் மூட்டை கட்டி வச்சிட்டு என்னுடைய பேச்சை ரெண்டு நிமிஷம் காது கொடுத்து கேளுங்க. 
என்னோட மற்றொரு blog - ARUNA.S.SHANMUGAM.BLOGGER என்பதில் ON LINE CROSS WORD PUZZLES  வெளியாகும் விஷயம் உங்களுக்குத் தெரிந்திருக்கும். அதை solve பண்ண நீங்கள் முயற்சி செய்திருப்பீர்கள் என்று நம்புகிறேன். அந்த ப்ளாக்கில் குழந்தைகளுக்கான 100 க்கும் மேற்பட்ட ON LINE PUZZLES வெளியாகி உள்ளது.
தற்போது  ON LINE CROSS WORD PUZZLES IN ENGLISH ( மொத்தம் 24 ) வெளியாகியுள்ளது.
அதிலுள்ள சிறப்பு என்னவென்றால் : 10 x  10 கட்டங்களில் அனைத்துக் கட்டங்களும் நிரம்பும் வகையில் புதிர் அமைந்துள்ளது.  முதல்  புதிருக் கான பதில்கள் அனைத்தும் " A " என்ற வார்த்தையில்தான் தொடங்கும். இரண்டாவது புதிருக்கான பதில்கள் அனைத்தும் " B  " என்ற வார்த்தை யில் தான் தொடங்கும். இப்படியே A யிலிருந்து W வரையிலான புதிர்கள் வெளியாகியுள்ளது. " X " என்ற வார்த்தையில் அமைந்த புதிரை  நான் compose செய்துகொண்டிருந்த போது எங்கள் வீட்டுக்கு வந்த நண்பர், "உங்க புதிர்களை solve பண்ண நான் ட்ரை பண்ணுவேன். X Y Z என்ற எழுத்துக்களில் அமைந்த வார்த்தைகள் ரொம்பவும் கொஞ்சம். அதை வச்சு நீங்க எப்படி புதிர் எழுதுவீங்கனு நான் யோசனை பண்ணிட்டு இருந்தேன். good. நீங்க X -லும் புதிர் compose பண்ணிட்டீங்க. எனக்குத் தெரிஞ்சு  எல்லாக் கட்டமும் FILL  ஆகிறபடி english magazine ல் கூட யாரும் புதிர் எழுதி நான் பார்த்ததில்லை. எனக்கு தெரிஞ்ச வரையில்    இங்கிலீஷ் காரன் கூட இப்படியொரு முயற்சி பண்ணி இருக்க மாட்டான். நீங்க செஞ்சு காட்டிட் டீங்க.  உங்க முயற்சியை பாராட்டறேன் " என்றார்.
"முதல் புதிரை எழுத ஆரம்பிக்கும்போது X Y Z என்ற எழுத்துக்களில் புதிர் அமைக்க முடியுமா என்று ரொம்பவும் யோசிச்சேன். சரி .. வார்த்தைகள் கிடைக்காட்டா 3 எழுத்துக்களையும் ஒரே புதிரில் கொண்டு வந்திடலாம் னு decide பண்ணினேன். thanks to google. எனக்கு வார்த்தைகள் கிடைத்தது. இப்போது " Z " வரையிலானா புதிர்களை one hour ல் ரெடி பண்ணிடுவேன்" என்றேன்.
ஏற்கனவே தமிழில் நான் நிறைய குறுக்கெழுத்துப் புதிர்களை இதே ப்ளாக்கில்   பதிவு செய்திருக்கிறேன். ஆனால் அதை on-line ல் பார்வை யாளர்கள் சால்வ் பண்ணும் விதத்தில் என்னால் அமைக்க முடிய வில்லை. முயற்சி நடந்து கொண்டு இருக்கிறது. அது மட்டும் நான் எதிர்பார்க்கிற விதத்தில் அமைந்து விட்டால்  100க்கும் மேற்பட்ட தமிழ்  குறுக்கெழுத்துப் புதிர்களை உங்களுக்கு தருவேன்.
எனது வெகுநாள் சந்தேகம் : அனைத்துக் கட்டங்களும் நிரம்பும் வகையில் ஏதாவது ஒரு குறிப்பிட்ட subject ல் அமைந்த புதிர்களை இதற்க்கு முன்பாக யாராவது செய்து முடித்து இருக்கிறார்களா என்பதுதான். 
(அப்படி அமைப்பது கடினம் என்பது புதிர் எழுதும் பழக்கம் உள்ளவர் களுக்கு நன்கு தெரிந்திருக்கும். பத்திரிக்கைகளில் தற்போது வெளி யாகும் புதிர்களில்  சில கட்டங்களுக்கு வார்த்தை அமையா விட்டால் அந்த கட்டத்தில் கறுப்பு கலர் கொடுத்து விடுவது வழக்கம்.)
நண்பர் கடைசியாக சொன்ன வரிகள் என்னை சிந்திக்க வைத்தது. (எனக்குத் தெரிஞ்சு  எல்லாக் கட்டமும் FILL  ஆகிறபடி english magazine ல் கூட யாரும் புதிர் எழுதி நான் பார்த்ததில்லை.  எனக்கு தெரிஞ்ச வரை இங்கிலீஷ்காரன் கூட இப்படியொரு முயற்சி பண்ணி இருக்க மாட்டான் . நீங்க செஞ்சு காட்டிட்டீங்க. ) இந்தமாதிரி முயற்சியை இதற்க்கு முன்பாக யாராவது செய்திருக்கிறார்களா ? அப்படிஎன்றால் அது குறித்த விவரம் உங்களுக்குத் தெரியுமா  ? - இதை மட்டும் என்னுடைய பார்வைக்குக் கொண்டு வந்தால் போதும். 
இதை தெரிஞ்சு என்ன செய்யப் போறேன்னு கேட்கிறீங்களா ? என்னைத் தவிர வேறு யாரும் இதற்க்கு முன்பு செய்ததில்லை என்பது எனக்குத் தெரிய வந்தால்  ..... வந்தால் .... வந்தால் ....
திருவிளையாடல் படத்தில் T S பாலையா சொல்வாரே ... "என்னுடைய பாட்டுக்கு எதிர் பாட்டு பாட ஆள் இல்லை என்றால் அதன் பிறகு இந்த பாண்டிய நாடு எனக்கு அடிமை. அதன்பிறகு இங்கு யாரும் வாயைத் திறந்து பாடக் கூடாது " என்பாரே, அதே போல " நான் அமைத்த புதிர்களைப் போல  ஒரு முயற்சியை  இதற்க்கு முன்பாக இங்கிலீஷ் காரங்க கூட செய்திருக்கவில்லை யென்றால்,   இங்கிலீஷ்   பேசும், இங்கிலீஷ்  மொழியை தாய்மொழியாகக் கொண்ட அத்தனை பேரும் இனி மேல் எனக்கு அடிமை. அவர்கள் யாரும் இனிமேல் பேனா எடுத்து எழுதக் கூடாது" என்று சொல்வேன். எனக்கு முன்பாக சில முன்னோடிகள் இருக்கிறார்கள் என்ற விவரம் தெரிய வந்தால் அவர்கள் பாதம் தொட்டு வணங்கி அவர்கள் ஆசீர்வாதம் கோருவேன். (ஏதோ நம்மாலே முடிஞ்சது அவ்வளவுதானே  ?!)
விவரம் தெரிந்தவர்கள் arunasshanmugam@gmail.com க்கு தெரிவிக்கலாம். 
இந்த விஷயத்தை எந்த அளவுக்கு share பண்ண முடியுமோ அந்த அளவுக்கு எனக்காக செய்யுங்கள். 

No comments:

Post a Comment