Labels

About myself Name : Kumari S. Arunachalam alias Aruna S. Shanmugam Occupation : Form

Tuesday, February 24, 2015

கேள்வி இங்கே இருக்கிறது ! பதில் யாரிடம் இருக்கிறது ?

கேள்வி எண் : 01
கடந்த வெள்ளிக்கிழமையன்று எங்கள் குடும்பத்தினருடன் திருச்சிக்கு பயணித்து கொண்டிருந்தேன். ரிசெர்வேசன் கம்பார்ட்மென்ட் என்றாலும் டே டைம் ட்ரைன் என்பதால் பயணிகள் இங்கும் அங்கும் நடப்பதும் பேசுவதும் இருந்ததால் சந்தைக்கடை மாதிரியான சூழ்நிலை எங்கும் இருந்தது. போதிய காற்றோட்டம் இல்லை. எங்கள் வீட்டுக் குழந்தையால் அந்த சூழ்நிலையை தாக்குப் பிடிக்க முடியவில்லை . ( பிறந்து பத்து மாதம் மட்டுமே ஆகிறது . குளிர்காலத்தில் கூட வீட்டில் அது தூங்கும் இடத்தில் ஏஸி, பேன், இரண்டுமே இருக்க வேண்டும்.) சில நேரம் விளையாடுவதும் சிலநேரம் அழுவதுமாக பொழுதைக் கழித்துக் கொண்டிருந்தது. ஒரு சந்தர்ப்பத்தில் அதன் அழுகை அதிகமாகிவிட்டது. நானும் என்னென்ன வோ சொல்லி வேடிக்கை காட்டுகிறேன், ஆனால் குழந்தை அழுகையை நிறுத்தவில்லை. அந்த கம்பார்ட்மெண்டில் இருந்த அனைவரும் அது அழுவதையும், "காக்கா , குருவி " என்று நான் வேடிக்கை காட்டுவதையும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார்கள். அந்த கம்பார்ட்மெண்டில் ஒரு முஸ்லிம் குடும்பமும் பயணித்தது. அந்தக் குடும்பத்தில் மூன்று வயது கூட நிரம்பாத குழந்தை ஒன்றும் இருந்தது. எங்கள் வீட்டுக் குழந்தை அழுவதை பார்த்த  அந்தக் குழந்தை, அதன் பெற்றோரிடமிருந்து ஒரு தாவு தாவி என்னருகில் வந்தது. வந்து குழந்தையின் கண்ணீரைத் துடைத்து விட ஆரம்பித்தது. "அழாதே பாப்பா" என்று சொல்லவில்லை . வேடிக்கை யாக எதையும் சொல்லவில்லை. செய்யவில்லை. ஆனால் இரண்டு கண்களில் இருந்தும் வடியும் நீரை மாறி மாறி துடைத்து விடுகிறது . அந்தக் குழந்தை அப்படி செய்வதை ஏதோ ஒரு விளையாட்டு என்று எங்கள் வீட்டுக் குழந்தை நினைத்ததோ என்னவோ உடனே அழுகையை நிறுத்தி விட்டு அதனோடு விளையாட ஆரம்பித்து விட்டது . அதன் பிறகு நாங்கள் திருச்சி வந்து சேரும் வரை எங்கள் வீட்டுக் குழந்தை அழவே இல்லை. அந்தக் குழந்தை கண்ணீரைத் துடைத்து விடுவதை கையில் காமிராவுடன் நின்றிருக்கும் யாராவது பார்த்திருந்தால் அதை ரிகார்ட் செய்து  face book ல் பதிவு செய்திருப்பார்கள். நானும் என்னுடைய face book ல் பதிவு செய்திருப்பேன்.  எங்கள் வீட்டுப் பிள்ளைகளிடமும் காமிரா செல் இருந்தது.  ஆனால் அந்த சம்பவம் நடந்தபோது அது on ல் இல்லை . காமிரா செட் பண்ணிவிட்டு திரும்ப ஒருதரம் அதே மாதிரி செய்ய சொன்னால் அது ரொம்பவும் நாடகத் தனமாக இருக்கும் என்பதால் அதை பதிவு பண்ணவில்லை .  
அந்தக் குழந்தையின் செயல் என்னை ரொம்பவும் சிந்திக்க வைத்தது .ஒரு குழந்தை அழுவதைப் பார்த்து விட்டு, யாரும் சொல்லாமலே இன்னொரு  குழந்தை ஓடி வந்து இந்தக் குழந்தையின்  கண்ணீர் நிற்கும் வரை கண்களைத் துடைத்து விடுகிறது. குழந்தையாக இருக்கும்போது எந்த வேற்றுமையும் யார் மனதிலும் தோன்றவில்லை. பள்ளியில் கல்லூரிகளில் படிக்கும் காலத்திலும் மனித வேற்றுமை பார்ப்பதில்லை. ஒற்றுமையாக இருக்கிறார்கள். ஓடி வந்து உதவுகிறார்கள். ஆனால் வளர்ந்து பெரியவர்களாகி விட்டவர்கள் எந்தவொரு காரணமும் இல்லா மல், எந்தவொரு செயலுக்கும் கொஞ்சம் கூட  சம்பந்தமே  இல்லாத வர்கள்  கண்களில் கண்ணீரை வரவழைத்து வேடிக்கை பார்ப்பது ஏன் ? இதனால் அவர்கள் அடைந்த லாபந்தான் என்ன  ?
இந்தக் கேள்விக்கான பதில் தெரிந்தவர்கள் அதை arunasshanmugam@gmail.com   ல் தெரிவிக்கலாம்.

No comments:

Post a Comment