Labels

About myself Name : Kumari S. Arunachalam alias Aruna S. Shanmugam Occupation : Form

Friday, January 17, 2014

Scanning of inner - heart ( Scan Report Number - 098 )

                            சிந்தனை செய் மனமே !!
"என்ன மனோகர், ஏன் இவ்வளவு டல்லா இருக்கிறே ? "
"எல்லாம் என்னோட பையனைப் பத்தின கவலைதான் !"
"நீ கவலைப் படும்படி அப்படி என்னதான் பண்றான் ?"
"குணா, அவனை நினைச்சா எனக்கு ரொம்பவும் கவலையா இருக்குடா. அவன் பேச்சு வார்த்தை செயல் எதுவும் ஏழு வயசுப் பையன் பண்ற மாதிரி இல்லாமே ஏதோ வாழ்ந்து முடிச்சவங்க செய்ற , சொல்லுற விஷயம் மாதிரி இருக்கு. அவனைக் குழந்தையாகவும் ட்ரீட் பண்ண முடியலே பைத்தியக்கார லிஸ்டிலும் சேர்க்க முடியலே. எப்பவும் டீவீ தான் . அவனோட பேச ஆரம்பிச்சா நான் மென்டல் ஆயிடுவேன் போலிருக்கு " என்றான் மனோகர் விரக்தியாக.
"ச்சே. என்னடா இது .. சின்னக் குழந்தைங்க விஷயத்தை ரொம்ப சீரியஸா திங்க் பண்ணிட்டு இருக்கிறே "
"ஸ்கூலுக்குப் போக மாட்டேங்கிறான் "
"இப்போ வீட்டில்தான் இருக்கிறானா ? "
" ஆமாம் "
"உன் வொய்ப் ?"
"வேலைக்குப் போய்ட்டா. வீட்டில் ராகவ் மட்டுந்தான் இருக்கிறான் "
"துணைக்கு யாருமில்லாமே குழந்தையை நம்பி வீட்டை விட்டுட்டுப் போறதா ?"
"வேறே என்ன பண்ணலாம்கிறே ?"
"நான் போய் அவனோட பேசிப் பார்க்கட்டுமா ?"
"டேய் .. உன்னை அவன் புலம்ப வச்சிடுவான்டா "
"அதையுந்தான் பார்க்கலாம் .. நான் போயிட்டு வந்திடறேன் "
"இப்பவா ?"
"டூ வீலரில் போனால் , உன் வீட்டுக்குப் பத்து நிமிஷத்தில் போயிட்டு வந்திடலாம். யாராவது கேட்டால் 'தலைவலின்னு சொன்னான் . மெடிக்கல் ஷாப் வரை போயிருப்பான்'னு  சொல்லி சமாளி. நான் எப்படியும் ஒரு ஒரு மணி நேரத்தில் வந்திடுவேன் " என்ற குணா அடுத்த நொடி அங்கிருந்து பறந்தான் 
காலிங் பெல்லை அழுத்திய அடுத்த நொடியே கதவு திறக்கப் பட்டது.
குணாவைப் பார்த்ததுமே, " ஹாய் .. அங்க்கிள் .. டாடி ஆபீஸ் போயிட்டாங்களே..  நீங்க போகலியா ? " என்றான் ராகவ் 
"ஆபீஸ் வேலையா ஒரு இடத்துக்குப் போனேன். திரும்பி வர்றச்சே லேசா தலை சுத்தறமாதிரி இருந்தது. உங்க வீடு பக்கத்திலேயே இருக்கிறது ஞாபகம் வந்துச்சுது  .. அதான் .. ஒரு அஞ்சு நிமிஷம் ரெஸ்ட் எடுத்துட்டுப் போகலாம்னு வந்தேன்  "
"அங்க்கிள் ..தலை சுத்தறப்போ உங்க பேக் சைடை நீங்க பார்க்கலாம் தானே ? செமே ஜாலிதானே ?"
"ஆஹா .. அட்டாக் ஆரம்பிச்சிடுச்சு போலிருக்கே " என்று மனதுக்குள் நினைத்துக் கொண்ட குணா, " ஆமா ...இந்த நேரத்தில் நீ வீட்டிலிருக்கிறே. ஸ்கூல் போகலியா ?" என்றான் 
"நான் இருப்பேன்னு தெரிஞ்சுதானே இங்கே வந்து காலிங் பெல்லை பிரஸ் பண்ணுனீங்க !"
"இல்லே ..  உங்க டாடி .. அதான் மனோ இருப்பான்னு நினைச்சேன் "
"நாளைக்கு நான் லீவு . நான் வீட்டிலிருப்பேன்னு நேத்து எங்க டாடி சொன்னாரா என்ன  ?"
"ஆஹா .. அடுத்த அட்டாக் " என்று நினைத்துக் கொண்ட குணா , " ராகவ், நீ போய்  எனக்கு கொஞ்சம் ஐஸ் வாட்டர் கொண்டு வாயேன் " என்றான்.
அடுத்த நொடியே ஐஸ் வாட்டர் பாட்டில் அவன் முன்பாக வந்தது 
"நீ ஸ்கூல் போகலியா ... இன்னிக்கு லீவா என்ன ?"
"அதெல்லாம் ஒண்ணுமில்லே .. நான் லீவு .. அவ்வளவுதான் "
"உன் இஷ்டத்துக்கு அப்படியெல்லாம் நீ லீவு போட முடியுமா என்ன ?"
"எனக்கு போகவே பிடிக்கலே "
"என்னடா இப்படி சொல்றே ? ஸ்கூலுக்குப் போகணும் . நல்லாப் படிக்கணும் . படிச்சு பெரிய ஆளா வரணும் "
"படிக்காமே பெரிய ஆளா வர முடியாதா?"
"முடியாது "
"காம்ப்ளான் குடிச்சா பெரிசா வளரலாம்னு டீவீ யிலே சொல்றதெல்லாம் பொய்யா ?"
"அது விளம்பரம் ... நான் சொல்ற " பெரிய ஆள் " வேறே ... அதாவது ... படிச்சு வேலைக்குப் போய் நாலு மனுஷங்க மதிக்கிற மாதிரி வாழ்வதை சொன்னேன் "
"ஆமாம் .... வேலை ....பெரிய வேலை ...."
"என்னப்பா இப்படி சொல்றே. பறவைகள் கூட இறை தேடி கூட்டை விட்டு வெளியே போகிறது. அதைப் பொறுத்த வரை அதுக்கு அதுவும் ஒரு வேலைதான். ஆடுமாடுங்க மேய்ச்சலுக்குப் போகுது ..குதிரையை வண்டியிலே பூட்டி ஓட்டறாங்க. வண்டியை இழுக்கிறது அதோட வேலை . .. சரி ... பறவைங்க .. ஆடுமாடுகளை விட்டுத் தள்ளு. காலையில் பால் கொண்டு வந்து கொடுப்பது , பேப்பர் போடறது .. காய்கறி, தண்ணீர் கொண்டு வந்து கொடுக்கிறதுன்னு ஒவ்வொருத்தரும் தனக்குத் தெரிஞ்ச வேலையை செய்துட்டு தானே இருக்கிறாங்க. பத்து கம்பெனியை வச்சு ஒருத்தர் நிர்வாகம் பண்ணிட்டு இருப்பார். அது அவரோட வேலை.. இப்படி ஏழைங்க  முதல் பணக்காரங்க வரை ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு வேலையை செஞ்சுட்டு இருக்கிறாங்களே. நாளைக்கு நாம என்னவா வரணும்னு இன்னிக்கே நாம ஒரு ப்ளான் பண்ணிக்கணும். எதிலும் ஒரு தொலை நோக்குப் பார்வை இருக்கணும். அதுக்குத் தகுந்த படி   இப்போ நம்மை நாமே தயார் பண்ணிக்கணும் "
"நான் அதைத் தானே செய்றேன் அங்க்கிள் " என்றான் ராகவ் 
"அப்படியா என்ன செய்றே ? உன்னோட தொலை நோக்குப் பார்வை என்னனு சொல்லு  "
"அங்க்கிள் நீங்க டீவீ பார்ப்பீங்களா ?"
"அதுக்கெல்லாம் ஏது நேரம் ? எப்பவாவது பார்ப்பேன் "
"பேப்பர் படிப்பீங்களா, இல்லே அதுக்கும் நேரமில்லையா ?"
"எங்க வீட்டில் பேப்பர் வாங்கறதே கிடையாதுப்பா "
"டீவீ யும் பார்க்காமே பேப்பரும்  படிக்காததாலே உங்களுக்கு, அரௌண்ட் தி வேர்ல்ட்  என்ன நடக்குதுன்னே தெரியலை..  ஸ்கூல் போகறப்போ சின்னக் குழந்தைங்களைக் கடத்திட்டுப் போயிடறாங்க... பெரியவனாகி காலேஜ் போனா அங்கேயும் ராகிங் அது இதுன்னு ஏகப் பட்ட தகராறு. வேலை பார்க்கிற இடத்தில் மட்டும் பிரச்சினை இல்லையா என்ன?  நாம எந்தத் தப்பும் பண்ணாட்டாலும்  எவனெவனோ பண்றதில் நாம மாட்டிக்க சான்ஸ் இருக்கு . வேலைக்குப் போயிட்டு மிட் நைட் வீடு திரும்பினா திருட்டுப் பசங்க அடிச்சுப் போட்டுட்டு போயிடுவாங்களோ என்கிற பயம் . வெளிநாடு போனாக்கூட பயந்து பயந்துதான் வாழணும். ஏதாவது வம்பில் மாட்டிக்காமே  இருக்கணுமே .. வேலை முடிஞ்சு போச்சு .. உன் நாட்டுக்குப் போன்னு சொல்லாமே இருக்கணுமேன்னு தினமும் பயந்து பயந்து சாகணும். வேலை கிடைச்சா உடனே கல்யாணம்தான். நாம யாரையாவது லவ் பண்ணினாலும் சாகடிப்பாங்க .. நாம கல்யாணம் பண்ணின பொண்ணு வேறே யாரையாவது லவ் பண்ணியிருந்தாலும் அதுக்கும் நம்மளத்தான் சாகடிப்பாங்க.. இதெல்லாம் எதனாலே வருது . நாம படிச்சு வேலை பார்த்து கல்யாணம் பண்ணிக்கிறதாலேதானே. இது வராமே, நடக்காமே இருக்க என்ன வழின்னு யோசியுங்க ... எங்கயும் போகாமே நாம உண்டு நம்ம வீடு உண்டுன்னு நம்ம வீட்டில் இருக்கிறது தான்  சேப் அங்க்கிள்.. அதைத்தான் நான் இப்போ செய்றேன் " என்று மூச்சு விடாமல் சொன்னான் ராகவ்  
கொஞ்ச நேரம் யோசித்த குணா, " சரி தம்பி .. நான் கிளம்பறேன் .. வீட்டை நல்லா லாக் பண்ணிக்கோ . எவனாவது திருட்டுப் பசங்க நுழைஞ்சிடப் போறாங்க .. நான் வர்றேன் " என்று சொல்லிக் கிளம்பினான் 
குணாவின் வருகைக்காக காத்திருந்த மனோகர், அவனது டூ வீலர் கண்ணில் பட்டதுமே   ஷெட்டுக்கு ஓடிப் போனான். வண்டியை ஸ்டான்ட் போட்டு நிறுத்திக் கொண்டிருந்த குணாவிடம்  " என்னப்பா ஆச்சு ?" என்றான் ஆவலுடன்  
"எனக்கு ஏதாவது ஆகாமல் இருந்ததுக்காக நான் சந்தோசப்படறேன் . உன் பையனோட தொலை நோக்குப் பார்வை  ராக்கெட் வேகத்தை விட வேகமானது . எனக்கு நெஜமாவே தலை சுத்தற மாதிரி இருக்கு. என்னை ஒரு நல்ல டாக்டர் கிட்டே கூட்டிட்டுப் போயேன் " என்றான் 

No comments:

Post a Comment