Labels

About myself Name : Kumari S. Arunachalam alias Aruna S. Shanmugam Occupation : Form

Friday, January 10, 2014

Scanning of inner - heart ( Scan Report Number - 097 )

           நிரந்தரம் .... மாற்றம் மட்டுமே !

"என்னால் நம்பவே முடியலியே . நெஜமாத்தான் சொல்றீங்களா ? " என்று வியந்து போய்க் கேட்டாள் வசுமதி 
"என்னாலும் நம்ப முடியலே. ஆனால் சொல்றது ராஜு ஸார். அதுவும் அவர் பிள்ளைகளைப் பத்தி. பிள்ளைங்க விஷயத்தில் யாராவது பொய் சொல்வாங்களா ? " என்றார் சாரங்கபாணி 
"ஸாரோட  மனைவி எப்படி இருக்கிறாங்களாம் ? பாவம் அந்த அம்மா ஒரு வாயில்லாப் பூச்சி . அப்பவே பிள்ளைகளுக்குக்காகப் பேசறதா இல்லை புருசனுக்காகப் பேசறதான்னு அல்லாடிகிட்டு நிப்பாங்க. இப்போ எப்படி இருக்காங்களாம், கேட்டீங்களா ? "
"யாரோடயும் பேசறதே கிடையாதாம். சாப்பாட்டைக் கொண்டு போய் முன்னாலே வச்சா சாப்பிடுவாங்களாம். மத்த நேரம் பூரா பூஜை ரூமும் படுக்கையும்தான் அவங்களுக்குக் கதியாம் "
"பாவங்க .. ஸார் எப்படி இருக்கிறார் ? "
"பொம்பளைங்க துக்கத்தையும் சந்தோசத்தையும் உடனே ரிஆக்ட் பண்ணிடுவீங்க. ஜென்ட்ஸ் எதையும் வெளியே காட்டிக்க மாட்டங்க. அது தான் அவர் நிலைமையும் "
"ஆணோ பெண்ணோ, அந்தந்த வயசிலே அவங்கவங்களுக்கு செய்ய வேண்டியதை வீட்டிலுள்ள பெரியவங்க உடனே பார்த்து செய்யணும். மேலே மேலே படிக்கட்டும். உத்யோகம் பார்க்கட்டும். உத்யோகத்திலே சேர்ந்ததும் வீடு வாங்கட்டும். அதுக்குப் பிறகு வரன் பார்க்கலாம்னு நம்ம வசதிக்காக நாளைத் தள்ளிப் போட்டுட்டே வந்தா இப்படித்தான். குழந்தைங்க மனசறிஞ்சு பெரியவங்க நடக்க வேண்டாமா "
"நேத்து பஸ்சுக்காகக் காத்திட்டுருந்தேன் . கூடவே எங்க ஆபீஸ் பியூன் ரங்கசாமியும் நின்னுட்டு இருந்தான். பக்கத்திலேயே சில பொம்பளைப் பசங்க நின்னுட்டு இருந்துச்சு. அதுங்களை சைட் அடிச்சுகிட்டு சில விடலைப் பசங்க கூட்டம். அவனுக பேசறதைக் கேட்டு ஒரு பொண்ணு செருப்பை சைகை காட்டி, அதாலே அடிப்பேன்னு சைகை காட்டுச்சு. அதைக் கேட்டு அந்த விடலைப் பசங்க சிரிச்சாங்க. அப்பத்தான் ரங்கசாமி சொன்னான், " ஸார், அந்தக் கூட்டத்திலே தலைவனா நிக்கிறது நம்ம ஆபீஸ் கோபாலோட தம்பி. வீட்டில் வரன் பார்க்கிறாங்க. டிமாண்ட் என்ன தெரியுமா ? இந்தத் தறுதலைக்கு 100 பவுன் நகை வேணுமாம், பவுன் 23000 க்கு விக்கிற இந்தக் காலத்தில். கல்யாணம் பண்ணி வைக்கணும். வண்டி வேணும். லொட்டு லொசுக்குனு ஏகப்பட்ட டிமாண்ட்ஸ். செருப்படி வாங்கினாலும் பரவாயில்லைன்னு பொண்ணுக பின்னாலே போக இவன் தயாரா இருக்கிறான் "னு"
"அட வயசுப் பசங்க... நல்லது எது கெட்டது  எதுன்னு தெரியாத இரண்டுங் கெட்டான்  வயசு ..இப்போ நீங்க சொன்னீங்களே நம்ம ராஜு ஸாரோட   பிள்ளை கோபியைப் பத்தி.. அதைத் தான் என்னாலே நம்ப முடியலே. ஆனந்தாவது சரியாப் படிக்க மாட்டான். அவ்வளவு சின்ன வயசிலேயே கெட்ட சகவாசம். ஆனா இந்தப் பையன் அப்படியில்லையே. தான் உண்டு ..படிப்பு உண்டுன்னு இருப்பான். அவன் குரல் எப்படி இருக்குங்கிறது கூட அக்கம் பக்கத்துக்குத் தெரியாது. அப்படிப் பட்ட பிள்ளை இப்படி  கெட்ட   சகவாசம், செயின் பறிப்புன்னு மாறிட்டான்னு சொல்றதை என்னாலே நம்ப முடியலே .. அதுவும் பணத்துக்கு தேவையே இல்லாதப்ப ..."
"பணத் தேவைக்காக இல்லே . பிரெண்ட்ஸ் கிட்டே சாலெஞ்ச் பண்ணி அவனோட திறமையை நிரூபிக்கிறதுக்காகவாம். அதுமட்டுமில்லே .. ஒரு பொண்ணு .. அதுவும் வேறே ஜாதிப் பொண்ணு பின்னாலே சுத்தி அலைஞ்சு ஒரே ஜாதி சண்டையாம் . கலவரமாம் . ஏண்டா இப்படி செய்றேன்னு கேட்டால் " பொண்ணுங்க விஷயத்தில் என் திறமையை நிரூபிக்கத் தான் ரொம்ப அசால்ட்டா பதில் சொல்றானாம் . இதை சொல்லிட்டு ராஜு ஸார் அழுதப்போ என்னாலேயே தாங்க முடியலே  " என்று நெகிழ்ந்த குரலில் சொன்னார் சாரங்க பாணி 
"கரும சண்டாளம் .. திறமையை நிரூபிக்க வேறே வழியா இல்லே . இப்போ ஒரு சீரியலில் வருது... யாராவது பெட் கட்டினாப் போதும் . அதுக்காக  ஒரு பைத்தியக்காரன் என்ன வேணும்னாலும் செய்வான் . அந்தக் கதையாக இருக்குதே கோபி விவகாரம் "
"அப்போ ..  நாம ஸாரோட பக்கத்து வீட்டில் குடியிருந்தப்போ .. அவரோட பெரிய பிள்ளை  ஆனந்த் கூட , சாரங்கபாணி ஸார் மல்லுக்கு நிற்கும் போதெல்லாம் ' இவ்வளவு சின்ன வயசில் இந்தப் பையன் இவ்வளவு அடாவடியா இருக்கிறானே . இவன் வளர்ந்து வாலிபனாகி என்னென்ன தில்லுமுல்லு பண்ணப் போறானோன்னு    நினைப்பேன். நாமே பார்த்தது ஒண்ணு . அதை வச்சு நினைச்சது ஒண்ணு .  எவ்வளவு மாற்றம் பாருங்க .. உலகத்தில் நிரந்தரம்னு எதுவுமே கிடையாதா  ? "
" ஏன் கிடையாது ? ஒண்ணே ஒண்ணு இருக்குதே "
" என்னங்க அது ? " என்றாள் வசுமதி ஆவலாக 
"உலகத்தில் பொன் பொருள் மனிதர்கள் கட்டிடங்கள் எதுவுமே நிலையில்லை  ... நிரந்தரம் இல்லை ... மாற்றங்கள் மட்டுமே நிரந்தரம் .. அதில் எந்த மாற்றமும் கிடையாது  " என்றார் சாரங்கபாணி அமைதியாக .

No comments:

Post a Comment