Labels

About myself Name : Kumari S. Arunachalam alias Aruna S. Shanmugam Occupation : Form

Friday, January 03, 2014

Scanning of inner - heart ( Scan Report Number - 096 )

                                          சூட்சுமம் ? !!

ஆபீஸ் நோட்டிஸ் போர்டில் சல்லடை போட்டுத் தேடித் பார்த்தான் ராகுல் . ஊஹும் . இந்த வருஷமும் யாரோ அந்த காண்ட்ராக்டை தட்டிக் கொண்டு போய்விட்டார்கள். தனக்குக் கிடைக்கவில்லை. எதனால் இந்த காண்ட்ராக்ட் தனக்குக் கிடைக்காமல் போகிறது என்கிற ஆதங்கம் ஒரு புறம் கவலை ஒருபுறம் என்று  இரண்டும் சேர்ந்த   குழப்பத்துடனேயே டூ வீலரில் பறந்து கொண்டிருந்தான் ராகுல், கவெர்ன்மெண்ட் ஆபீஸ் காண்டீன். இடம் ப்ரீயாகக் கிடைக்கும். ஓரளவு டீசெண்ட் ஆட்களாக வந்து போகும் இடமென்பதால் பிரச்சினை எதுவும் இருக்காது. என்னதான் மூன்று வருஷ  காண்ட்ராக்ட் என்றாலும் மூணு வருஷம் எந்தப் பிரச்சி னையும் இல்லாமல் காலையில் ஆறு மணிக்கு வேலையை ஆரம்பிச் சோம் சாயங்காலம் ஆறு மணிக்கு அடைச்சு மூடினோம்னு நிம்மதியாப் பொழுதைக் கழிக்கலாம். அங்கு வரும் கஸ்டமர்ஸ் பழக்கத்தை வச்சு ஏதாவது விசேஷங்களுக்குக் கூட கேட்டரிங் ஆர்டர் பிடிக்கலாம்னு பார்த்தால் அதுக்கும் வழியில்லாமல் போச்சே என்று நொந்து போனான். திடீரென்னு  ஒருவிதத் தள்ளாட்டத்துடன் வண்டி நின்று விட்டது . ச்சே சனியன். இருக்கிற தலைவலி போதாதுன்னு இது வேறு வழியில் நின்று விட்டதே என்ற சலிப்புடன் வண்டியை தள்ளிக் கொண்டு வந்து ஓரங்கட்டினான். பெட்ரோல் புல் என்பதை இண்டிகேட்டர் காட்டினாலுங் கூட தனது திருப்திக்காக பெட்ரோல் டேங்கை திறந்து பார்த்தான். தனக்குத் தெரிந்த கை வைத்தியமெல்லாம் செய்து பார்த்தேன். உன்னால் முடிஞ்சதைப் பாரு. நான் இந்த இடத்தை விட்டு நகர மாட்டேன் என்று அடம் பிடித்தது வண்டி.
வாழ்க்கையும் சரி; வண்டியும் சரி ; ஸ்மூத்தாக ஓடிக் கொண்டிருக்கும் வரைதான் சௌகரியம் ; சந்தோசமெல்லாம். எங்காவது ஒரு இடத்தில் நின்று கொண்டு நகர மறுத்தால், சந்தோஷமெல்லாம் கை சொடுக்கும் நேரத்துக்குள் காணாமல் போய்விடும் என்று தனக்குள் சொல்லிக் கொண்டான். இந்த சங்கடத்திலும் ஆறுதலான ஒரே ஒரு விஷயம் ஒதுங்கி நிற்க ஒரு மரநிழல் கிடைத்ததுதான். மரத்தை ஏறிட்டுப் பார்த்தான். புளியங்காய்கள் கொத்துக் கொத்தாக தொங்கிக் கொண்டிருந் தன. பள்ளிப் பருவத்தில் கல் வீசி புளியங்காய் பறித்து, வீதி வழி சென்று கொண்டிருந்த பால்காரர் மண்டையை உடைத்து, முதுகு பழுக்கும் அளவு வாங்கிக் கட்டிக் கொண்டது ஞாபகம் வந்தது.
"என்ன ஸார், வெஹிகில் ப்ராப்ளமா ?" என்று அக்கறையாக விசாரித் தார் அந்த வழியாக வந்து கொண்டிருந்த மற்றொரு டூ வீலர்.
கவெர்ன்மெண்ட் ஆபீஸ் கான்டீன் காண்ட்ராக்ட் மட்டும் இந்நேரம் எனக்குக் கிடைத்திருந்தால்  நீ கேட்ட கேள்விக்கு "  வெஹிகிளில்  எந்த ப்ராப்ளெம்  எதுவும் இல்லே. புளியங்காய் சாப்பிடணும்னு ஆசை  வந்துச்சுது. அதான் வண்டியை ஓரங்கட்டிட்டு புளியங்காய் பறிச்சுச் சாப்பிடறேன்னு உனக்குப்  பதில் சொல்லியிருப்பேன். மவனே கேள்வியா கேட்கிறே? " என்று மனதுக்குள் கோபப்பட்டாலும், இத்தனை பேர் பறந்து கொண்டிருக்கிற  பாதையில் இவன் ஒருத்தனாவது அக்கறையாகக் கேட்கிறானே என்ற  நன்றி உணர்ச்சியில்,  " நல்லாத் தான் வந்துட்டு இருந்தது. என்னனு தெரியலே. சடனா நின்னு போச்சு. இப்போ கிளம்ப மாட்டேன்னு அடம் பிடிக்குது  " என்றான் ராகுல் 
தனது வண்டியை ஓரங்கட்டிய அந்த " திருவாளர் பொதுஜனம் ", ராகுலின் வண்டியை  பல்ஸ் பிடித்துப் பார்த்து விட்டு, " என்னனு தெரியலையே " என்று அலுத்துக் கொண்டார். இதற்குள் அந்த வழியாக வந்து கொண்டிருந் த   இரண்டு ஆட்டோ ரிக் ஷா  ட்ரரைவர்ஸ், அவர்கள் வேலையை விட்டு விட்டு  ராகுலின் உதவிக்கு வந்தார்கள். " உனக்காச்சா எனக்காச்சா "ன்னு பார்த்துடலாம்  என்கிற தோரணையில் வண்டி அசைய மறுத்தது.
"ஸார், வண்டியை நகர்த்தக் கூட முடியலே. நீங்க எப்படி இதை மெக்கானிக் ஷாப் வரை கொண்டு போய்ச் சேர்ப்பீங்க. இங்கிருந்து ஒரு கிலோ மீட்டர் தூரத்தில்  ஒரு மெக்கானிக் ஷாப் இருக்குது. வேணும் னா நான் அவங்களை வரச் சொல்லட்டுமா ? " என்று கேட்டார் ஆட்டோ டிரைவர்.
"சரி " என்று ராகுல் தலையசைக்க, " ஸார், அவங்க வர்ற வரை நீங்க பொறுமையா நில்லுங்க. எங்கேயும் போயிடாதீங்க. நான் அவங்களை வரச் சொல்லிட்டுப் போக, நீங்க பாட்டுக்குக் கிளம்பிப் போயிட்டா என் கதை கந்தலாயிடும். எனக்கு ரொம்பவும் தெரிஞ்ச கடை அது " என்று சொல்லியபடி   ஆட்டோ டிரைவர் கிளம்பிப் போனார்.
கிட்டத் தட்ட ஒன்றரை மணி நேரம் கழித்து ஒரு மெக்கானிக் வந்து சேர்ந்தான், " ஸாரி ஸார். உடனே கிளம்பி வர முடியலே. போலீஸ் இன்ஸ்பெக்டர் வண்டி ஒண்ணு செர்வீசுக்கு வந்துச்சு. அதைப் பார்த்துட்டு இருந்தேன் . அதான் லேட் " என்றபடி.
"நல்லா ஓடிட்டு இருந்துச்சு. திடீர்னு ஒரு சத்தம் வந்து நின்னுச்சுது. பிறகு கிளம்பவே மாட்டேங்குது " என்றான் ராகுல் 
" பார்த்துடலாம் " என்றபடி வண்டி அருகில் மண்டியிட்டு உட்கார்ந்த  மெக்கானிக் ஒரு ட்யுபைக் கழற்றி மாட்டி, ஒரு ஸ்க்ருவை டைட்  செய்ய அடுத்த நொடி வண்டி ஸ்டார்ட் ஆக, " அம்மாடீ " என்ற நிம்மதிப் பெருமூச்சு வெளிப்பட்டது ராகுலிடமிருந்து.
" எவ்வளவுப்பா ? "
" நூறு குடுங்க ஸார் "
" ஏம்ப்பா அங்கிருந்து வந்ததுக்கும் சேர்த்து ரேட் போடுறியா ? "
"அதெல்லாம் இல்லை ஸார் . அந்த சைடு போற வண்டியில் லிப்ட் கேட்டு வந்தேன். இப்போ உங்களோடு சேர்ந்து வந்து கடையாண்டை இறங்கிடப் போறேன். வண்டியை சரி பண்ணினதுக்குத் தான் நூறு ரூபா  ".
"அநியாயமா இருக்கே . வந்து ஒரு ஸ்க்ருவை டைட் பண்ணினதுக்கு இந்த ரேட்டா  ?" என்று வாய் பிளந்தான் ராகுல் 
" ஸார் நீங்க எவ்வளவு நேரமா இங்கே நிற்கிறீங்க ? "
"என்ன .. ஒரு ரெண்டு இல்லாட்டி ரெண்டரை மணி நேரம் இருக்கும் "
"உங்க வண்டி ... உங்க வண்டியிலுள்ள ஸ்பார் பார்ட்ஸ். நான் டைட் பண்ணினது வெறும் ஸ்க்ரூ தான் . ஆனால் அதுகூடத் தெரியாமேத் தானே இவ்வளவு நேரம் நிற்கிறீங்க . அதில் எதை டைட் பண்ணினா வண்டி ஓடுங்கிறது உங்களுக்குத் தெரியலே. நான் தெரிஞ்சு வச்சிருக்கிறேன். அந்த சூட்சுமத்துக்குத் தான் காசே தவிர செய்த வேலைக்கு இல்லே "
யாரோ நெற்றிப் பொட்டில் அறைந்தது போலிருந்தது ராகுலுக்கு. பர்சைத் திறந்து  இரண்டு நூறு ரூபாய் நோட்டை எடுத்து அவனிடம் நீட்டினான்.
"ஸார் நான் கேட்டது நூறுதான் "
"நான் கேட்காமலே  ஒரு தொழில் ரகசியத்தை எனக்கு நீ சொல்லிக் குடுத்திருக்கே; இப்போ சொன்னே பாரு, எதை டைட் பண்ணினா வண்டி சரியாகும்னு தெரிஞ்சு வச்சிருக்கிறதுக்குத் தான் காசுன்னு. அது நூத்திலே ஒரு வார்த்தை. எந்த ஒரு விஷயத்திலும் இலக்கை கண்டு பிடிச்சு  முயற்சி பண்ணினா நிச்சயம் ஜெயிக்க முடியும்னு உங்கிட்டே யிருந்து நான் கத்துக் கிட்டேன். அதுக்கான ட்யூசன்   பீஸ் தான் இது "
"நீங்க என்னென்னவோ சொல்றீங்க . எனக்கு எதுவும் புரியலே . இருந்தா லும் வந்த வரைக்கும் லாபம். போற வழியில் என் கடையாண்டே என்னை டிராப் பண்ணிடுங்க ஸார் " என்று சொல்லிக் கிளம்பத் தயாரானான் மெக்கானிக்.  

No comments:

Post a Comment