Labels

About myself Name : Kumari S. Arunachalam alias Aruna S. Shanmugam Occupation : Form

Saturday, July 06, 2013

படிக்க வேண்டும் கணக்குப் பாடம் !!

ஹாய் குட்டீஸ் ,  

நீங்க எல்லாரும் கை விரல்களிலேயே 9 - ம் வாய்ப்பாடை கணக்குப் பண்ணி இருப்பீங்கன்னு நினைக்கிறேன். உங்க எல்லாருக்கும் ஒரு பெரிய O ( ஓ )

இன்றைக்கு என்ன கணக்குன்னு கேட்கிறீங்களா ? குழப்பத்தானே....  ஸாரி... ஸாரி ... சொல்லத்தானே நான் இருக்கிறேன் 

அப்பா எப்போது வீட்டிற்கு வருவாரென்று,  ஸ்கூல் விட்டு வந்ததிலிருந்து  வீட்டு வாசலைப் பார்த்துக் கொண்டிருந்த குருசரண், அப்பாவின் டூ வீலர் காம்பவுண்ட்டுக்குள் நுழைந்ததுமே, ஓடி சென்று " அப்பா எனக்கு ட்ரிபில் பைவ் வேண்டும் " என்றான் 
திகைத்துப் போன அப்பா " என்னடா , triple five  ஆ ? " என்று அதிர்ந்து போய்க் கேட்டார்
" எங்க ஸ்கூலில் இருந்து எங்களை  டூர் அழைச்சிட்டுப் போகப் போறாங்க.  அதுக்கு எல்லாரும் ஆளுக்கு  555 ரூபாய் கொண்டு வந்து கொடுக்கணும்னு எங்க மிஸ் சொன்னாங்க " என்று குருசரண் சொன்னதும் " அவ்வளவுதானா ? " என்று நிம்மதிப் பெருமூச்சு விட்ட அப்பா " வா . வீட்டுக்குள் போய்ப் பேசலாம் " என்றார் 
வீட்டுக்குள் வந்ததும் கைகால்முகம் சுத்தம் செய்து கொண்டு சோபாவில் வந்து உட்கார்ந்த அப்பா , காப்பியை குடித்தபடியே, " குரு, உனக்கு 555 ரூபாய் தானே வேணும். அதை நான் தரமாட்டேன் " என்று சொல்ல " அப்பா, என்ன இது ? " அலறினான் குருசரண்.
" முழுசும் சொல்ல விடு . 555 ரூபாயை நான் தர மாட்டேன் . நீயாகப் போய் எடுத்துக் கொள்ளணும் " என்றார் அப்பா 
" அட, இதுதானா ? " என்றான் குரு  அலட்சியமாக 
" இரு கண்ணு. என்னோட டேபிள் டிராவை திறந்து பார். அதில் 100 ரூபாய், 50 ரூபாய் , 20 ரூபாய், 10 ரூபாய் நோட்டு, 5 ரூபாய் நோட்டு ,  10 ரூபாய் 5 ரூபாய் காயின்ஸ், 50 பைசா, 2 ரூபாய், 1 ரூபாய் காயின்ஸ் எல்லாமே இருக்கும் . அதிலிருந்து நீ 555 ரூபாயை மட்டும் எடுக்க வேண்டும். ஆனால் ஒரே ஒரு கண்டிசன், நீ எந்த ரூபாயை எடுக்கிறாயோ,அந்த ரூபாய் மதிப்புக்கு தக்க படி நோட்டு எண்ணிக்கை இருக்கணும் " என்றார் அப்பா 
" நீங்க சொல்றது புரியலே " என்று குரு சொல்ல , " அதாவது, நீ 50 ரூபாயை எடுத்தால், 50 நோட்டுக்கள் அதிலிருந்து எடுக்கணும் . அப்படி எடுத்தால் அதன் மதிப்பு 2500 ரூபாய் ஆகி விடும். ஆனால் நீ கேட்பது 555 ரூபாய்தான். இந்த சாம்பிளை மட்டும் மனசில் வைச்சுக்கோ. நான் சொல்ற கண்டிசன்படி 555 ரூபாயை எடுத்துட்டு வந்து காட்டு " என்றார் அப்பா 
அப்பாவின் அறைக்குள் சென்ற குருசரண் 5 நிமிடங்களில் திரும்பிவந்து தான் எடுத்து வந்த 555 ரூபாயைக் காட்டினான். கண்டிசனை மீறாமல் குரு பணம் எடுத்து வந்ததைக் கண்ட அப்பா அவனைப் பாராட்டி, மேலும் 10 ரூபாய் நோட்டு 10 கொடுத்தார்.
இப்போ கேள்வி என்னன்னா , எந்த வரிசைப்படி பணத்தை குருசரண் எடுத்து வந்திருப்பான் ?

எடுங்க பேப்பர் பென்சிலை. போடுங்க கணக்கை !




No comments:

Post a Comment