Labels

About myself Name : Kumari S. Arunachalam alias Aruna S. Shanmugam Occupation : Form

Saturday, March 30, 2013

திரை இசையில் " சொந்தங்களும், உறவுகளும் "

தொட்டால் சுடுவது நெருப்பாகும் ;
தொடாமல் சுடுவது வெறுப்பாகும் ;
தெரிந்தே கெடுப்பது பகையாகும் ;
தெரியாமல் கெடுப்பது உறவாகும் !

உறவு என்றொரு சொல்லிருந்தால்
பிரிவு என்று தொடரிருக்கும் !

பணத்தின் மீதுதான் பக்தி என்றபின்
பந்த பாசமே வீணடா
பதைக்கும் நெஞ்சினை அணைக்கும் யாவரும்
அண்ணன் தம்பிகள் தானடா !

பானையிலே சோறிருந்தா பூனைகளும் சொந்தமடா
சோதனையை பங்கு வச்சா சொந்தமில்லே ; பந்தமில்லே

இரவும் வரும் பகலும் வரும் உலகம் ஒன்றுதான் ;
உறவும் வரும் பகையும் வரும் இதயம் ஒன்றுதான் !

ஆயிரம் ஆண்டுகள் ஆயிரம் ஜென்மங்கள் பூமியில் பிறந்திட வேண்டுகிறேன்
அத்தனை பிறப்பிலும் இதனை உறவும் என்னுடன் பிறந்திட வேண்டுகிறேன்

சொந்தம் எப்போதும் தொடர் கதைதான் ;
முடிவே இல்லாதது !
எங்கே சென்றாலும் தேடி இணைக்கும்
இனிய கதை இது !!

குரங்காய் இருந்த மனிதன் மனதில்
குழப்பம் சூட்சி இல்லை
குடும்பம் மனைவி அண்ணன் தம்பி
கூட்டம் சிறிதும் இல்லை
ஆசை பாசம் காதலில் விழுந்தான் 
அமைதியைக் காணவில்லை
அழுதான் துடித்தான் அலைந்தான் திரிந்தான்
யாருக்கும் லாபமில்லை

கனவோடு சிலநாள் ; நினைவோடு சிலநாள் ;
உறவில்லை;  பிரிவில்லை;  தனிமை பலநாள் !

உறவு என்ற வானத்திலே
நாம் பறவையாகலாம் !
உள்ளம் என்ற தோட்டத்திலே
நாம் மலர்களாகலாம் !!

No comments:

Post a Comment