Labels

About myself Name : Kumari S. Arunachalam alias Aruna S. Shanmugam Occupation : Form

Saturday, February 02, 2013

தத்துவமா நான் சொல்லுவதெல்லாம் சத்தியம் !

சிவப்பு மனிதனுக்கும் நிழல் கறுப்புதான். கறுப்பு மனிதனுக்கும் ரத்தம் சிவப்புதான். வண்ணங்களில் இல்லை வாழ்க்கை ; மனதின் எண்ணங்களில் உள்ளது .

மனந்திறந்து பேசுங்கள் ; மனதில் பட்டதையெல்லாம் பேசாதீர்கள்! சிலர் 
புரிந்து கொள்வார்கள். பலர் பிரிந்து செல்வார்கள் 

தன்னம்பிக்கை இருக்கிறவரை, தோல்விகள் தளர்ச்சியைத் தருவதில்லை !

காயப் படுத்த பலர் இருந்தாலும், மருந்தாக சிலர் இருப்பதால்தான் நமது வாழ்க்கை அடுத்த கட்டத்தை நோக்கி பயணிக்கிறது.

தோல்வியை ஒப்புக்கொள்ளத் தயங்காதே; தோல்வியிலிருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டிய விஷயங்கள் நிறையவே இருக்கிறது .

தோல்வியின் அடையாளம் தயக்கம் ; வெற்றியின் அடையாளம் துணிச்சல் .

விலகி நிற்பவர்கள் வெல்லுவதில்லை ; வெல்ல நினைப்பவர்கள் விலகுவதில்லை!

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம் : பலமுறை தோற்றவன் ஒரு முறை ஜெயித்தால் அது சரித்திரம் !

பிரிவும் கோபமும் ஒருவரை மறப்பதற்கல்ல ; அவர்களைப்பற்றி அதிகமாக நினைப்பதற்கே!

ரோஜா செடியில் முள் இருக்கிறதே என்று நினைத்தால் வருத்தம் வரும் :
ஆஹா, முள் செடியிலும் ரோஜா மலர்கிறதே  என்று நினைப்பு மனதுக்கு  மகிழ்வைத் தரும் .

( மேலே உள்ள தத்துவமெல்லாம் FACE BOOK  நண்பர்கள் அனுப்பியவை ) 

No comments:

Post a Comment