Labels

About myself Name : Kumari S. Arunachalam alias Aruna S. Shanmugam Occupation : Form

Saturday, December 22, 2012

அட, நிஜந்தாங்க !

நண்பர்களிடம் உள்ள நல்ல விசயங்களைப் பற்றி மற்றவர்களிடம் பேசுங்கள் :விரோதிகளைப் பற்றி எதுவுமே பேசாதீர்கள்.


மூட நம்பிக்கை என்பது மனவலிமை மனப்பக்குவம் இல்லாதவர்கள் தேர்ந்தெடுத்துக் கொண்ட துரதிர்ஷ்டம்.


எந்த நிறத்தைச் சேர்த்தாலும் கறுப்பின்  சொந்த நிறம் மாறாது.


ஒரு முறை சேமித்த தொகை, இருமுறை சம்பாதித்ததற்கு சமம்.


நமக்காகப் பொய் பேசத் துணிந்தவன், தனக்காக, நமக்கெதிராக பொய் பேச தயங்க மாட்டான்

சில சமயங்களில், காயப் படுத்தும் உண்மையைவிட, குணப் படுத்தும் பொய்யே மேலானது.


கடவுளை நெருங்கி செல்ல, நாம் மலையேற வேண்டிய அவசியமில்லை. மற்றவர்கள்  துன்பம் கண்டு நாம் இறங்கி வந்தாலே போதும் .


பார்வையுள்ளவர்கள் கீழே விழுவதைவிட, பார்வைக் குறையுள்ளவர்கள் குறைவாகவே  விழுகிறார்கள்.


கல்வியறிவு என்பது நமது அறியாமையை மேலும் மேலும் அறிந்து கொள்வது !

புத்திசாலிகள் யார் தெரியுமா ? அடுத்தவர்களுடைய முட்டாள்த் தனத்தில்  இருந்து பாடம் கற்றுக் கொள்பவர்கள் ! 

No comments:

Post a Comment