Labels

About myself Name : Kumari S. Arunachalam alias Aruna S. Shanmugam Occupation : Form

Friday, August 31, 2012

Scanning of Inner- Heart ( மனதின் மறு பக்கம் ) - Scan Report No: 42

 ( 14.09.1991 ல் மாலைமுரசில் வெளியான எனது முதல் சிறுகதை )

                                              விடியலின் வாசலில் 

ஊருக்குப் புறப்படும் அவசரத்தில்,பெட்டி படுக்கைகளைத் தயார் படுத்திக் கொண்டிருந்தான் செல்வம். நாளைக்கு அவனுக்கு கடைசி இண்டர்வியூ . மிகப் 'பெரிய' இடத்திலிருந்து சிபாரிசு செய்யப்பட்டிருந்ததால் , நாளைய இறுதித் தேர்வில் வெற்றி நிச்சயம்  என்ற நம்பிக்கையில் இருந்தான். அவனது பயணத்திற்குத் தேவையான ஒத்தாசைகளை உடனிருந்து  கவனித்த தங்கை நளினி , போட்டி போட்டுக்கொண்டு பம்பரமாக சுழன்று கொண்டு இருந்தாள்.
" அண்ணா, எல்லாத்தையும் மறக்காமே எடுத்து வச்சுக்கோ. கிளம்பற    அவசரத்தில் எதையாவது மறந்துட்டு, அங்கே போய் முழிக்கப் போறே ." -
சிரித்துக் கொண்டே சொன்னாள்  நளினி.   
" எனக்குப் பிறகு பிறந்த நீ , எனக்கே பாடம் சொல்லித் தர்றியா ? " என்று  தங்கையின் தலையில் செல்லமாக ஒரு குட்டு வைத்தான் செல்வம். 
" ஆங்க் .." எனறு செல்லமாக சிணுங்கினாள் நளினி.
"டேய் .. செல்வம் , இன்னும் அங்கே என்ன பண்ணிட்டு இருக்கே? ரயிலுக்கு நேரமாச்சே .. சீக்கிரம் கிளம்பற வழியைப் பாரு. " பூஜை அறையிலிருந்து வெளியில் வந்த மங்களம் அவனை அவசரப்படுத்தி னாள் . 
'ஆளுதான் வளர்ந்துட்டானே  தவிர மனசளவிலே  இன்னும் பச்சப் புள்ளையா இருக்கிறான். படிச்சிருக்கிறானே தவிர பொறுப்பா எதையும் செய்யத் தெரியலே ' என்று தனக்குள் சொல்லிக் கொண்ட மங்களம்  செல்வத்தின் அறைக்குள் வந்தாள் .
ஒரு சூட்கேசில் நிறைய துணிமணிகளை வைத்து அடைத்துக் கொண்டிருந்த செல்வம்,  சூட் கேஸ் வாய் பிளந்து நிற்கவே அதன் மீது ஏறி உட்கார்ந்து அழுத்தி மூடிக் கொண்டிருந்தான்.
" டேய் .. என்னடா இது சின்னக் குழந்தையாட்டம் ? தங்கப்போறது ஒரே ஒரு நாள். அதுக்கு ஏன்  இவ்வளவு துணிமணி ? " என்று அங்கலாய்ப்புடன் கேட்டாள் .
" இதுவரை  நான்  போன மத்த கம்பெனி இன்டர்வியூ  மாதிரி இது கிடையாது. இன்டர் வியூ முடிச்ச கொஞ்ச நேரத்திலேயே ரிசல்ட் சொல்லிடறாங்க .ஏற்கனவே இரண்டு டெஸ்டில் பாஸ் ஆகிட்டேன்.  இந்த டெஸ்ட்க்கு ஸ்ட்ராங் ரெகமெண்டேசன்  வேறே இருக்கு. எந்த காரணம் கொண்டும் ரிசல்ட் சொல்றதை தள்ளிப் போட மாட்டாங்களாம் . என்னோட படிச்ச ரமேஷ் இப்ப அங்கேதான் வொர்க் பண்றான். அவன் சொல்லிதானே நான் இந்த பார்ட்டியை சிபாரிசுக்கு பிடிச்சேன்.  அந்த ஜாப் எனக்குதான்.அதனால் தான் எல்லா  ட்ரெஸ்ஸும் எடுத்து வைச்சி ருக்கிறேன். ரொம்ப ஸ்ட்ரிக்ட்டா  டிசிப்ளின்மெயின்டைன் பண்ணு வாங்களாம் . ஒன்பது மணின்னு சொன்னா, சரியா ஒன்பது மணிக்கு இருந்தாகணுமாம் .இரண்டு நிமிசம் தாமதமா வந்தாலும் தயவு தாட்சண்யம் பார்க்காமே வெளியே அனுப்பிடுவாங்களாம்" என்றான்.  
" இப்பவே மணி நாலே கால். ரயில் அஞ்சு மணிக்கு கிளம்பிடும். இப்பவே 
நாம ஆட்டோ பிடிச்சு போனாதான் அரைமணி நேரத்தில் எக்மோர் போக 
முடியும். சீக்கிரம் கிளம்பு " என்று பரபரத்தாள் மங்களம் .
சிறிது நேரத்தில் மூவரும் கிளம்பி வெளியில் வந்தனர்.
" ஆட்டோ " அந்த வழியாக வேகமாக வந்த ஒரு ஆட்டோவை கையைக் காட்டி நிறுத்தினான் செல்வம். " எக்மோர் ஸ்டேஷன் போப்பா "
"ஸார்  மீட்டருக்கு மேலே ரெண்டு ருபா போட்டுக்குடுங்க ஸார்.." --ஆட்டோ டிரைவர் வழக்கமான பல்லவியைப் பாடினான்.
" அவசரமா ஒரு இடத்துக்குப் போகணும்னு சொன்னா போதுமே . உடனே 
மேற்கொண்டு ரெண்டை குடு, மூணைக் குடுன்னு ஆரம்பிச்சிடுவீங்களே ?
சரி .. சரி .. போப்பா சீக்கிரம் "
அண்ணனுக்கு எப்படியும் இந்த தடவை வேலை கிடைச்சுடும் . அம்மா 
இத்தனை நாள் பட்ட கஷ்டத்திற்கு இப்பதான் விடிவு காலமே பிறக்கப்
போகிறது என்ற கனவில் மிதந்து கொண்டிருந்தாள் நளினி .
ஏதோ சிந்தனையில் அமர்ந்திருந்த செல்வத்தைப் பார்த்தும், பார்க்காதது போல் காட்டிக்கொண்ட மங்களத்தின் மனதிலும் ஏதேதோ எண்ண அலை கள் .
" பாவம் இந்தப் பிள்ளை. இத்தனை வருசமா வேலை வேலைன்னு அலைஞ்சி திரிஞ்சு அலுத்துபோய் உட்கார்ந்திருந்த சமயத்தில், கடவுளாப் பார்த்து இப்ப ஒரு வழியைக் காட்டி இருக்கிறான். இனி வருங்காலம் அவனுக்கு வசந்த காலந்தான் " என்ற நியாயமான உணர்வுகள்  அந்தத்  தாயின் உள்ளத்தில்  தோன்றியது.
" அம்மா பட்ட கஷ்டத்துக்கு ஒரு விமோசனம் கிடைக்கப் போகுது. இனிமே அவங்க கஷ்டப் படாமே பார்த்துக்கணும். நளினிக்கு நல்லதொரு வரன் பார்த்து அவளை நல்ல இடத்தில் திருமணம் செய்து கொடுக்க வேண்டும் இதுதான் என்னுடைய  அடுத்த கடமை " என்று மனதுக்குள் கோட்டை கட்டி,கட்டிய கோட்டையை ரசித்துக் கொண்டிருந்தான் செல்வம்.
எக்மோர் ஸ்டேஷன் வந்தடைந்தது ஆட்டோ. ஆட்டோவிலிருந்து இறங்கி ஆளுக்கொரு சூட் கேஸ் , பெட்டி படுக்கைகளை தூக்கிக் கொண்டு பிளாட் பார்ம் வந்து சேர்ந்தபோது  " நான் ரெடி " என்பதுபோல் ' முத்து  நகர் எக்ஸ்பிரஸ் ' ஓடத் தயார் நிலையில் நின்று கொண்டிருந்தது. ப்ளாட்பார்ம் முழுக்க  மனித தலைகளே தெரிந்தன. ரிசர்வ்ட் டிக்கெட் சார்ட்டில் தனது பெயரை சரி பார்த்துக் கொண்ட செல்வம் ரயில் பெட்டிக்குள் தன்னைத் திணித்துக்கொண்டான்.வழியனுப்ப வந்தவர் களும் வண்டிக்குள் ஏறி இருந்ததால் ஒரே இடிபாடு. ஜன்னலோர சீட் செல்வத்திற்கு புக் ஆகியிருந்தது. 
" அண்ணா, பெட்டி படுக்கை பத்திரம் " என்று நளினி சொல்ல, " உனக்குப் 
பிடிக்குமேனு  'மாலாடு ' செஞ்சு ஒரு சின்ன டிபன் பாக்ஸில் போட்டு. அதை சூட் கேஸ் அடியில் வச்சிருக்கிறேன்.  மறக்காமே சாப்பிடு . உடம்பைப்  பார்த்துக்கோ. அலட்சியமா இராதே." என்று கவலையோடு கூறிக் கொண்டு  நின்றாள்  மங்களம் , மகனை எங்கோ கண் காணா  தேசத்திற்கு அனுப்புவது போல.
க்ரீன் சிக்னல் பளிச்சிட்டதும் " நான் ரெடி " என்பதுபோல் முத்துநகர் 
எக்ஸ்பிரஸ் ஹார்ன் கொடுத்துக் கிளம்பியது. நளினியின் முகத்தில்தான் 
எத்தனை பூரிப்பு.  அண்ணனுக்கு இந்த வேலை கிடைத்துவிடும் என்ற 
நம்பிக்கை.
ஆனால், தாயின் முகத்தில் மட்டும் சோகம்  இழையோடி யிருந்தது. இந்த 
வேலை அவனுக்குக் கிடைக்க வேண்டும். கை நழுவி போய் விடக் கூடாது.
எத்தனை முறை ,எத்தனை நல்ல வாய்ப்புகள் அவனுக்குக் கை நழுவி 
போயிருக்கிறது. ஒவ்வொருமுறையும் அவன் ஒடிந்துபோய் மனதுக்குள் 
அழுததைக்கண்டு,இவள் வெளிப்படையாக  அழுதிருக்கிறாள் . கணவனை 
இழந்த நிலையிலும்  இத்தனை காலமாக,  தாய்க்குத் தாயாய், தந்தைக்குத் 
தந்தையாக  இருந்து , இரு குழந்தைகளை வளர்த்து ஆளாக்க அவள் பட்ட 
கஷ்டம் அந்த கடவுளுக்குதானே தெரியும் !
ஜன்னலோரம் அமர்ந்திருந்த  செல்வம் தாயின் பரிதவிப்பையும்  , தங்கை
நளினி முகத்தையும் மாறி மாறி பார்த்துக் கொண்டிருந்தான் , அவர்கள் அவன் கண் பார்வையிலிருந்து மறையும் வரையிலும் ! பிறகு கையி லிருந்த புத்தகத்தில் தன் பார்வையை ஓடவிட்டான் . 
செல்வத்தை நல்லபடியாக அனுப்பி வைத்த சந்தோசத்துடன், வீட்டுக்கு
வரும் வழியில் கோவிலுக்குப் போய்  தரிசனம் செய்து விட்டு ஹோட்டலில் சாப்பிட்டு விட்டு வீட்டுக்கு வரும் போது இரவு மணி பத்தைத் தாண்டி இருந்தது.  
இருவரும். வீட்டுக்குள் நுழைந்ததுமே, பூஜை அறைக்கு சென்று , மகனுக்காக தாயும்,அண்ணனுக்காக தங்கையும் வேண்டிக் கொண்டார்கள்.  கண்களை மூடி மங்களம் பிரார்த்தனையில்  இருக்க, விளக்கு அருகிலிருந்த விபூதியை எடுக்கக் கையை நீட்டிய நளினி , அதன் அருகில் ஒரு கவர் இருப்பதைக் கண்டு அதை பிரித்துப் பார்த்தாள் .
அடுத்த கணம் நளினியின் " ஐயோ அம்மா " என்ற அலறல் வீட்டைக் 
குலுக்கியது.
பதறிப்போன மங்களம் " என்னம்மா ? என்னாச்சு ? என்றாள் 
" இதைப் பாரும்மா. அண்ணணுக்கு வந்த கார்ட் . நீ  சாமி அலமாரியில் நேற்று வச்ச கார்டை   கிளம்பற அவசரத்தில்  அண்ணன்  எடுக்காமலே
போயாச்சு . இன்டெர்வியூ நடக்கிற இடத்தில்  இந்த கார்டைகாட்டினால்
தான் உள்ளேயே  போக முடியும்.   இந்த கார்ட் இல்லாமே அண்ணன்  அங்கே போயும் எந்த பிரயோஜனமும் இல்லே " என்று சொல்லி அழ
ஆரம்பித்தாள். அவர்களின் கனவுக் கோட்டை கொஞ்சம் கொஞ்சமாக இடிந்து கொண்டிருந்தது.    
 

No comments:

Post a Comment