Labels

About myself Name : Kumari S. Arunachalam alias Aruna S. Shanmugam Occupation : Form

Saturday, July 21, 2012

சொல்வதெல்லாம் உண்மை !

.


சிறிய துன்பங்கள் பேசுகின்றன, பெரிய துன்பங்கள் மௌனமாய் இருக்கின்றன.


மனிதன் சில சமயங்களில் தான் தேடாதவற்றைக் கூட கண்டுபிடித்து விடுகிறான்.


நேரத்தின் மதிப்பை உணர்ந்தவர்களால்தான் வாழ்க்கையின் மதிப்பையும் உணர முடியும்.


நண்பர்களைக் காட்டிலும் புத்தகங்கள் மேலானவை. புத்தகங்கள் வெளிப் படையாகப் பேசும்.


நமது மனதில் ஓடும் எண்ணங்களை நாம் மறைத்தாலும், நமது செயல்கள் நமது மன ஓட்டத்தைக் காட்டிக் கொடுத்து விடும்

பொறுமை கசப்பானது. ஆனால் அது விளைவிக்கும் நன்மைகளோ மிகவும் இனிப்பானவை.


பணிவாக நடந்து கொள்வது என்பது பலவீனம் அல்ல. அதுவே உண்மையான ஆன்ம பலம்



மனச்சாட்சியை மறந்தவன் எந்த பாவத்தையும், பாதக செயல்களையும் செய்ய தயங்க மாட்டான், 


கீழ்ப் படிய கற்றுக் கொண்டவர்கள்  வெகு விரைவில் தலைமைப் பொறுப்பை அடைந்து விடுகிறார்கள், அடங்கி நடப்பவனுக்குத்தான், மற்றவர்களை அடக்கி வழி நடத்தவும் தெரியும்.


நாம் செய்த பாவமும் புண்ணியமும் நம் வீட்டு வாசல் படியிலேயே தலை வைத்துப் படுத்திருக்கும். அவை என்றென்றும் நம்மைப் பின் தொடர்ந்து வரும்










மனச்சாட்சியை மறந்தவன் எந்த பாவத்தையும், பாதக செயல்களையும் செய்ய தயங்க மாட்டான், 

 

No comments:

Post a Comment