வேண்டுமென்றால் வேரில் கூட காய்க்கும்; வேண்டாமென்றால் கிளையில்கூட காய்க்காது.
உங்கள் பலம் உங்களுக்குத் தெரியும்; உங்களுடைய பலவீனம் உங்கள் எதிரிக்குத்தான் தெரியும்.
இஷ்டப்படி வாழ்பவர்கள் கெட்டுத் தான் போவார்கள்; கட்டுப்பட்டு வாழ்பவர்கள்தான் முன்னேற்றம் காண்பார்கள்.
உங்களுக்கு எவையெல்லாம் நடக்கக் கூடாதென்று நீங்கள் நினைக்கிறீர்களோ, அவற்றை மற்றவர்களுக்கு செய்யாதிருங்கள்.
வீழ்த்தப்பட்டு கிடக்கும்போது அமைதியாக இருப்பது ஒரு பெரிய விஷயமல்ல. வாழ்த்தப்ப்படும்போதும் உன்னால் அமைதியாக இருக்க முடியுமானால் நீ இரண்டாவது முறையும் வென்றவனாவாய்.
பேராசை ஆட்சி செய்யுமிடத்தில் நாணயம், கண்ணியம் கைகட்டிதான் நின்றாக வேண்டும்.
முன்பின் யோசியாமல் ஆத்திரத்தோடு "அவை"யில் பேசுகிறவன் அவமானப்பட்டுத்தான் அமர்வான்.
விழிப்பதற்கே உறக்கம்; வெல்வதற்கே தோல்வி; எழுவதற்கே வீழ்ச்சி.
பணமும் நிம்மதியும் ஜென்மப் பகைவர்கள்; ஒன்றிருக்கும் இடத்தில் மற்றது இருக்காது.
பொறுமைசாலி பொங்கி எழுந்து கோபம் கொள்ள நேர்ந்தால், எச்சரிக்கையுடன் விலகி நிற்பதுதான் மற்றவர்களுக்கு நல்லது.
.
No comments:
Post a Comment