Labels

About myself Name : Kumari S. Arunachalam alias Aruna S. Shanmugam Occupation : Form

Saturday, January 21, 2012

அட இதுதாங்க உலகம் ! இதுதாங்க வாழ்க்கை !

.          



*  வேலைக்காரனின் வியர்வை உலர்ந்து போவதற்குள் அவனுக்குரிய கூலியைக் கொடுத்துவிடுவது உயர்வான செயல் .






*ஏற்ற சமயத்தில் சொல்லப் பட்ட
 வார்த்தைகள், வெள்ளித் தட்டில் வைக்கப்பட்ட பொற் கனிகளுக்கு சமம்.






நம்மை வெறுப்பவர்கள் பகைவர்கள் அல்ல. நாம் வெறுப்பவர்களே பகைவர்கள் ஆகிறார்கள்.








இளவயதில் சூதாடுகிறவர் கள், முதுமையில் பிச்சை எடுப்பார்கள்..







மோசக்காரனை விட முட்டாள் மேலானவன்!






கோபத்தோடு எழும்புகிறவன் வருத்தத்தோடு  உட்காருவான். 



கையை வீசிக்கொண்டு தெருவில் நடக்கும் உரிமை உங்களுக்கிருக்கிறது;ஆனால் உங்கள் கைகள், மற்றவர்கள் மேல் பட்டு விடாதபடி பார்த்துக் கொள்வது மிகவும் அவசியம். 







*  கீழ்ப்படிய கற்றுக் கொள்ளுங்கள்;  கட்டளையிடும் பதவி தானாக வந்து சேரும். 







போக்கிரியைக் கட்ட வடம் வேண்டும்; நல்லவனைக் கட்ட நூல் போதும்!





விட்டுக் கொடுப்பவர்கள் கெட்டுப் போவதில்லை; கெட்டுப் போகிறவர்கள் விட்டுக் கொடுப்பதில்லை   
-- 3
    

No comments:

Post a Comment