|
* வேலைக்காரனின் வியர்வை உலர்ந்து போவதற்குள் அவனுக்குரிய கூலியைக் கொடுத்துவிடுவது உயர்வான செயல் .
|
|
* ஏற்ற சமயத்தில் சொல்லப் பட்ட
வார்த்தைகள், வெள்ளித் தட்டில் வைக்கப்பட்ட பொற் கனிகளுக்கு சமம்.
|
|
* நம்மை வெறுப்பவர்கள் பகைவர்கள் அல்ல. நாம் வெறுப்பவர்களே பகைவர்கள் ஆகிறார்கள்.
|
|
* இளவயதில் சூதாடுகிறவர் கள், முதுமையில் பிச்சை எடுப்பார்கள்..
|
|
* மோசக்காரனை விட முட்டாள் மேலானவன்!
|
|
கோபத்தோடு எழும்புகிறவன் வருத்தத்தோடு உட்காருவான்.
|
|
கையை வீசிக்கொண்டு தெருவில் நடக்கும் உரிமை உங்களுக்கிருக்கிறது;ஆனால் உங்கள் கைகள், மற்றவர்கள் மேல் பட்டு விடாதபடி பார்த்துக் கொள்வது மிகவும் அவசியம்.
|
|
* கீழ்ப்படிய கற்றுக் கொள்ளுங்கள்; கட்டளையிடும் பதவி தானாக வந்து சேரும்.
|
|
* போக்கிரியைக் கட்ட வடம் வேண்டும்; நல்லவனைக் கட்ட நூல் போதும்!
|
|
* விட்டுக் கொடுப்பவர்கள் கெட்டுப் போவதில்லை; கெட்டுப் போகிறவர்கள் விட்டுக் கொடுப்பதில்லை
|
No comments:
Post a Comment