* பணக்காரனாக வேண்டுமா ? அதற்கு செல்வத்தை குவிக்க வேண்டிய அவசியமில்லை! தேவைகளைக் குறைத்துக்கொண்டாலே போதும்.
* முட்டாள் மேலும் மேலும் பணத்தை தேடிக் கொண்டிருப்பான். அறிவாளி, இருக்கும் கொஞ்ச பணத்தையும் அனுபவித்துக் கொண்டிருப்பான்.
* பானையில் சோறிருக்கும்வரை, கூரையில் காக்கை கூட்டத்திற்கு குறைவில்லை. கையில் பணமிருக்கும் வரை, உறவு கூட்டத்திற்கும் பஞ்சமில்லை.
*கண்ணில் பட்ட பொருளை எல்லாம் வாங்கும் பழக்கமானது, முடிவில் தேவையான பொருளைக் கூட விற்கும் நிலைக்கு கொண்டு போய் விட்டு விடும்.
* பிறக்கும்போது மூடிய கைகளோடு பிறக்கிறோம். இறக்கும்போது திறந்த கைகளோடு போகப்போகிறோம். இந்த இரண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் நமக்கு கிடைப்பது எல்லாமே லாபந்தான்.
* ஒண்ணுந்தெரியா ஆளானாலும் பணம் இருந்தாலே, அவனை உயர்த்தி பேச மனிதர் கூட்டம் என்றும் தப்பாதே ! என்ன அறிவு இருந்திட்டாலும் பணமில்லாத ஆளை, ஒரு மனிதனாக உலகம் என்றும் மதிக்க மாட்டாதே.
* கருவறையிலிருந்து வெளிவருவது முதல் கல்லறைக்குள் போய் அடங்குவதுவரை, சில்லறையை வெட்டினால்தான், எந்த ஒரு காரியமும் நடக்கும் என்பது எழுதாத நீதியாகி விட்டது.!.
* பணம் இருந்தால் உன்னை உனக்கு தெரியாது. பணமில்லாவிட்டால் உன்னை யாருக்குமே தெரியாது.
No comments:
Post a Comment