Labels

About myself Name : Kumari S. Arunachalam alias Aruna S. Shanmugam Occupation : Form

Saturday, December 24, 2011

வாழ்ந்திட சொல்லுகிறேன். உங்களை வாழ்த்தியே சொல்லுகிறேன். இங்கு தாழ்வதும், தாழ்ந்து வீழ்வதும் உமக்கு தலையெழுத்தென்றால் உம்மை தாங்கிட நாதியுண்டோ ?


தெரியாத தேவதையை விட தெரிந்த பிசாசு எவ்வளவோ மேல் .

*  ஒரு கப்பல் கவிழ்ந்த பிறகு, அதை எந்தெந்த வழிகளிலெல்லாம் காப்பாற்றி இருக்க முடியுமென்று யோசனை சொல்ல எல்லோராலும் முடியும் !

பகைவனென்று யாரையும் ஒதுக்கிவிட வேண்டாம். நண்பனென்று யாரிடமும்  உங்களை  முழுமையாக ஒப்படைக்க வேண்டாம்.  கால போக்கில் பகைவன் நண்பனாகலாம். நண்பன் பகைவனாக மாறலாம்.







*  மனம் ஒரு நல்ல வேலைக்காரன் ; ஆனால் மோசமான எஜமான் !



*  தண்ணீரைக்கூட சல்லடையில் எடுத்துக் கொண்டு  வர முடியும். அது பனிக்கட்டியாக மாறும்வரை காத்திருக்கும் பொறுமை உங்களுக்கு இருக்குமானால் !!




*  சூதுக்கும் ஏமாளிதனத்துக்கும் நடுவில் நியாயத்தின் குரல்வளை நெரிக்கப்படுகிறது. 






*  செயல்பாட்டிற்கு முன்பே  வெற்றி வருவது ஆங்கில அகராதியில் மட்டுமே. 
( Victory  - Work  )





*  அறிஞர்கள், அலசி ஆராய அச்சப்படும் விஷயங்களில், முட்டாள்கள் முழுமூச்சுடன்  ஈடுபடுவார்கள்.  







*  இணைக்கும் பாலங்களை காட்டுங்கள். பிரிக்கும் மதிற்சுவர்களை கட்டாதீர்கள். 


யாரையாவது புகழ வேண்டுமானால் நாலு பேர் 
  முன்னிலையில் புகழுங்கள். கண்டிக்க வேண்டு  மானால்  தனியே அழைத்து கண்டியுங்கள்.  துரதிர்ஷ்ட வசமாக  நம்மில்  எல்லோருமே இதை தலை கீழாகத்தான்   செய்கிறோம்..   





நண்பனின் யோக்கியதையை நீண்ட பயணத்தில் அறியலாம்.!.
                         

No comments:

Post a Comment