* தெரியாத தேவதையை விட தெரிந்த பிசாசு எவ்வளவோ மேல் .
* ஒரு கப்பல் கவிழ்ந்த பிறகு, அதை எந்தெந்த வழிகளிலெல்லாம் காப்பாற்றி இருக்க முடியுமென்று யோசனை சொல்ல எல்லோராலும் முடியும் !
* பகைவனென்று யாரையும் ஒதுக்கிவிட வேண்டாம். நண்பனென்று யாரிடமும் உங்களை முழுமையாக ஒப்படைக்க வேண்டாம். கால போக்கில் பகைவன் நண்பனாகலாம். நண்பன் பகைவனாக மாறலாம்.
* மனம் ஒரு நல்ல வேலைக்காரன் ; ஆனால் மோசமான எஜமான் !
* தண்ணீரைக்கூட சல்லடையில் எடுத்துக் கொண்டு வர முடியும். அது பனிக்கட்டியாக மாறும்வரை காத்திருக்கும் பொறுமை உங்களுக்கு இருக்குமானால் !!
* சூதுக்கும் ஏமாளிதனத்துக்கும் நடுவில் நியாயத்தின் குரல்வளை நெரிக்கப்படுகிறது.
* செயல்பாட்டிற்கு முன்பே வெற்றி வருவது ஆங்கில அகராதியில் மட்டுமே.
( Victory - Work )
* அறிஞர்கள், அலசி ஆராய அச்சப்படும் விஷயங்களில், முட்டாள்கள் முழுமூச்சுடன் ஈடுபடுவார்கள்.
* இணைக்கும் பாலங்களை காட்டுங்கள். பிரிக்கும் மதிற்சுவர்களை கட்டாதீர்கள்.
* யாரையாவது புகழ வேண்டுமானால் நாலு பேர்
No comments:
Post a Comment