நதியை கடக்கும்வரை முதலைகளை முறைத்துக்கொள்ள கூடாது !
இரண்டு யானைகள் மோதிக்கொள்ளும்போது குள்ள நரிகளின் பாடு கொண்டாட்டம். சிறு விலங்குகளின் பாடோ திண்டாட்டம்.
சிங்கம் இல்லாத இடத்தில் சிறு நரிகள் வெகு சுலபமாக சிம்மாசனம் ஏறி விடுகின்றன.
நாயிடம் கடிபடுவதைவிட நாய்க்கு வழிவிட்டு ஒதுங்கி நிற்பது புத்திசாலித் தனம் !
ஒரு எலி, பூனையைப்பார்த்து சிரிக்கிறதென்றால், அது நிற்கும் இடத்துக்கு வெகு அருகிலேயே அதன் பொந்து இருக்கிறதென்று அர்த்தம்.
ஒருவனுக்கு நேரம் சரியில்லைஎன்றால், அவன் ஒட்டகத்து மேலே உட்கார்ந்து போனாலும், ஓடி வரும் நாய் அவன் காலை கடித்துவிட்டுதான் போகும்.
சுண்டெலிக்கு தலையாய் இருப்பதைவிட சிங்கத்திற்கு வாலாய் இருப்பது எவ்வளவோ மேல்.
என்னதான் சிங்கம், காட்டிற்கு ராஜாவாக இருந்தாலும், அது நாட்டுக்குள் வந்தால் கூண்டுக்குள்தான் அடைபட்டு கிடக்கவேண்டும்.
My personal request : தயவு செய்து மிருகங்களை மனிதர்களோடு ஒப்பிட்டு பேசாதீர்கள். மிருகங்கள் மற்ற மிருகங்களை அடித்துப் பிழைக்கும். ஆனால் கெடுத்துப் பிழைப்பதில்லை..
No comments:
Post a Comment