கடலில் எத்தனை புயல்களை நீ சமாளித்தாய் என்பது பற்றி யாருக்கு என்ன கவலை ? கப்பலை பத்திரமாக கரை சேர்த்தாயா ? அதுதான் கேள்வி இப்போ !
உலகம் முழுவதும் அயோக்கியர்கள்தான் இருக்கிறார் களா? அதனாலென்ன, இருந்துவிட்டு போகட்டும். நீங்கள் ஒருவர் மட்டுமாவது யோக்கியராக இருந்து பாருங்களேன். உலகிலுள்ள அயோக்கியர்களின் எண்ணிக்கையில் ஒன்று குறைந்து விடும் !
உலகம் ஒரு மோசமான அங்காடி. இங்கு மோசடிக்காரர்கள் விற்கும் இலந்தை பழங்கள், திராட்ஷை விலைக்கு விற்பனையாகின்றது. நல்லவர்கள் விற்கும் திராட்ஷை பழங்கள் , இலந்தைபழ விலைக்குகூட விலை போவதில்லை !
தப்பை தப்பென்று சொன்னால் அது தப்பு, தப்பு, தப்புங்க. தப்பு செஞ்சுட்டோமேன்னு நினைச்சு வருத்தப்படற வங் களை விட, நாம செஞ்ச தப்பை கண்டு பிடிச்சிட்டாங் க ளேன்னு ஆத்திரப் படுகிறவர் கள்தான் இங்கு அதிகம் !
இங்கு சாதனைகளை செய்பவர்கள் சிலர். அதை வேடிக்கை பார்த்துக்கொண்டிருப்பவர்கள் பலர். ஆனால் என்ன நடக்கிறது என்பது தெரியாமலே இருப்பவர்கள் அநேகர் !
இங்கு நல்லவர்கள் என்று யாரும் இல்லை ! கெட்டவர்கள் என்று எவருமே இல்லை ! சந்தர்ப்ப சூழ்நிலைகள்தான் ஒவ்வொரு வரையும் நல்லவர்களாகவும் கெட்டவர் களாகவும் வாழ அனுமதிக்கின்றது .
பொய்யை மெய் என்று நம்பும்படியான வஞ்சகம் உலகமெங்கும் தலை விரித்தாடிக் கொண்டிருக்கிறது !
உலகம் ரொம்பவும் சிறியதுதான் ! இங்கு சந்தித்தவர்களையே மீண்டும் மீண்டும் சந்தித்து கொண்டிருக்கிறோம். பார்த்தவைகளையே திரும்ப திரும்ப பார்த்துக்கொண்டிருக்கிறோம் !
அழுகை + சிரிப்பு = வாழ்க்கை . நீங்கள் சிரித்தால் மற்றவர்கள் எரிச்சலில் அழுவார்கள். நீங்கள் அழுதால் கைகொட்டி சிரிப்பார்கள். வாழ்க்கை ஒரு விசித்ரமான கணக்குதான் . உலகம் எப்போதுமே நாம் பயணிக்கும் திசைக்கு எதிர் திசையில்தான் சுழன்று கொண்டிருக்கிறது !
ச்சே ! என்ன உலகம் இது !! ஒரே ஓட்டமும் நடையும் ! இங்கு நின்று நிதானிக்க யாருக்கு இருக்கிறது நேரம் ?
No comments:
Post a Comment