Labels

About myself Name : Kumari S. Arunachalam alias Aruna S. Shanmugam Occupation : Form

Saturday, November 26, 2011

Stories told by Grand -Ma ( Story number - 00)

                               
  யோசிக்காமல் எவரையும்  ஏளனம் நீ செய்வதேன் ?

( பாட்டி சொன்ன கதைகள் வரிசையில் இந்த கதைதான் முதலில் பிரசுரம் ஆகியிருக்க வேண்டும். sorryவரிசை மாறி பிரசுரம் ஆகிவிட்டது )

"பாட்டி  ரொம்ப போரடிக்குது பாட்டி ? என்றனர் பிரபுவும் மனோவும்.
"என்னடா இது! உங்க அப்பா உங்களைக்கொண்டுவந்து விட்டுட்டு போய் இன்னும் அரை மணி நேரம் கூட ஆகவில்லை. அதற்குள் போரடிக்கிறதா?"
என்று ஆச்சரியமாக கேட்டாள் பாட்டி.
"இங்கே கம்ப்யூட்டர் இல்லே டிவி இல்லே.அப்புறம் என்னத்துக்காக எங்க ரெண்டு பேரையும் இங்கே அனுப்ப சொல்லி லெட்டர் போட்டே ?"
"உங்க ரெண்டு பேரையும் பார்க்கணும் போல இருந்துச்சு. நீங்க ரெண்டுபேரும் இதுவரை இந்த ஊருக்கு வந்ததில்லையே. ஒரு பத்து நாளாவது கம்ப்யூட்டர் 
டி வி  எல்லாத்துக்கும் டாட்டா சொல்லிட்டு, நிம்மதியா தூங்கி எழுந்து, நல்லா சாப்பிட்டு,  மனசு மூளைக்கு ஓய்வு குடுத்து, ரிலாக்ஸ்டா இருக்கட்டும்னு உங்க
டாடி நீங்க இங்கே இருக்க சம்மதிச்சார். உங்க அம்மாக்கு நீங்க ரெண்டு பேரும் இங்கே வர்றதில் துளிக்கூட விருப்பமில்லே, ஏன்னா நீங்க ரெண்டு பேரும் எப்பவும் சண்டை போட்டுகிட்டே இருப்பீங்களாமே ! அப்படியா?" என்று கேட்டாள் பாட்டி.
"போ பாட்டி போரடிக்குது பாட்டி "
"உங்க கூட பேசி விளையாட இங்கே நிறைய குழந்தைங்க இருக்காங்க. இப்போ கூப்பிடறேன் "
"போ பாட்டி. கிராமத்து பசங்ககிட்டே நாங்க என்ன பேசி விளையாட முடியும்"
"அப்படியா ? இப்ப பாரு " என்று சொல்லி வாசலுக்கு சென்ற பாட்டி "ஏ குழந்தைகளா, எல்லாரும் இங்கே வாருங்க. வந்து யார் வந்திருக்கிறாங்கனு பாருங்க " என்று குரல் கொடுத்ததுமே  ஒரு சிறுவர் பட்டாளமே பாட்டி வீட்டுக்குள் படை எடுத்து வந்தது.
"யார் வந்திருக்கிறாங்க பாட்டி" என்று எல்லோரும் ஆவலாக கேட்க 
" என்னோட பேரனும் பேத்தியும் சென்னையிலிருந்து  வந்திருக்காங்க ஸ்கூல் லீவில். ஒரு பத்து நாள் இங்கேதான் இருப்பாங்க." என்றாள் பாட்டி.
"நான் பிரபு. செவன்த் படிக்கிறேன் ."
"நான் மனோ. பிப்த் படிக்கிறேன் " - என்று இருவரும் தங்களை தாங்களே அறிமுகபடுத்திகொள்ள, மற்ற குழந்தைகளும் தங்கள் பெயரை வரிசையாக சொல்ல ஆரம்பித்தார்கள். 
அவர்கள் சொல்லி முடித்ததுமே " ஒ. சிவா, சத்யா, ராதா, அப்பு, ஜெயந்தி, புவி, ரேகா, விச்சு, நிவேதிதா, லாவண்யா, கல்யாணி," என்று அவர்கள் பெயரை வரிசையாக இருவரும் சொல்ல, மற்ற குழந்தைகள் முகத்தில் ஒரே ஆனந்தம். 
"சத்யா நீ வழக்கமா ஒரு பாட்டு வரி சொல்வியே. அதை இந்த தம்பிக்கு சொல்லு" என்று பாட்டி சொல்ல, சத்யா  சிறிதும் தயங்காமல் " இட்டிது பட்டானால்  விச்செது வாட்டென்ன ?" என்றான். 
"என்னப்பா பட்டணத்து குழந்தைகளா, அவன் என்ன சொன்னான்கிறது புரியுதா?" என்று கேட்டாள் பாட்டி.
வெகு நேரம் யோசித்து பார்த்த பின்பு "தெரியலே பாட்டி" என்றனர் இருவரும்.
"நீயே சொல்லு சத்யா" என்று பாட்டி சொன்னதும் விளக்க ஆரம்பித்தான் சத்யா.
"it - இது , but - ஆனால்,  which - எது, what - என்ன, இப்போ எல்லாத்தையும் சேர்த்து சொல்லு - இட்டிது பட்டானால் விச்செது வாட்டென்ன " என்று சத்யா முடிக்க
"ஆஹா, ஓஹோ, பேஷ் பேஷ் " என்றான் பிரபு.
"இப்போ நான் ஒரு புதிர் கதைசொல்றேன்" என்று பாட்டி சொன்னதும் எல்லா குழந்தைகளும் பாட்டியை சுற்றி உட்கார்ந்து கொண்டார்கள் .
"கதை முடிஞ்சதும் கேள்வி கேட்பேன். ஆனா குழந்தைகளா, அந்த கேள்விக்கான பதிலை பிரபு மனோ மட்டும்தான் சொல்லணும். நீங்க யாரும் சொல்லித் தரக்கூடாது. நான் உங்க கிட்டே கேட்டால் மட்டும்தான் பதில் சொல்லவேண்டும் " என்று கண்டிஷன் போட்ட பாட்டி கதை சொல்ல ஆரம்பித்தாள். 
"ஒரு ஊரில் ஒரு தாத்தா இருந்தார். எல்லா குழந்தைகளுக்கும் எப்பவும் கதை சொல்வார். புதிர் போடுவார். குழந்தைகளுக்கு அவரை ரொம்பவும் பிடிக்கும். எப்பவும் அவரை சுற்றி ஒரு கூட்டம் இருக்கும். அன்றைக்கு தீபாவளி. பகல் முழுக்க பட்டாசு வெடித்து ஓய்ந்த குழந்தைகள், இரவானதும் ,'தாத்தா, கதை'
என்றதும் ' நிலா வெளிச்சம் அருமையா இருக்கு. வாங்க,மொட்டை மாடியில் உட்கார்ந்து பேசலாம்' என்று சொல்லி எல்லாரையும் மொட்டை மாடிக்கு அழைத்து சென்ற தாத்தா, ஒரு பையனிடம், 'நீ இன்னும் தீபாவளி டிரெஸ்ஸை மாத்தலையாடா'னு கேட்க, அவன், "தீபாவளி டிரெஸ்ஸை அவுத்து வச்சிட்டேன் . இது போன மாதம் கார்த்திகை தீபத்துக்கு வாங்கின டிரஸ்' என்றான்.  இன்னொரு பையனிடம் "டேய் சுப்பா, உங்க அப்பனை எங்கேடா? ஆளையே பார்க்க முடியலே'னு தாத்தா கேட்க,  "எங்க வீட்டு காளை மாட்டிலே பால் கறந்திட்டு இருக்கிறப்போ அவரை வண்டு கடிச்சிட்டுது .  விஷம் இறக்க டவுனுக்கு போயிருக்காக. ஆடி பதினெட்டுக்கு இந்த வருஷம் ஆறு மாச பயிர் போட்டாக. நல்ல விளைச்சல். அதுதான் அறுப்பெடுத்திட்டு போயிருக்காக. அதை வித்து காசாக்கிட்டுதான் வருவாக. அதுதான் தீபாவளிக்கு கூட வீட்டில் இல்லை " என்று  சுப்பன் சொன்னான். 
(பாட்டி கதை சொல்லும்போது மற்ற குழந்தைகள் ஜாடை மாடையாக சிரிப்பதை பிரபுவும் மனோவும் கவனித்தார்கள்.கோபம் வந்தது, இருந்தாலும் முதல் நாளே வம்பு வேண்டாம் என்று அமைதியாக இருந்தார்கள். இதை பாட்டியும்  கவனிக்கத்தான் செய்தாள்.)
தாத்தா, இன்னிக்கு கதை கிடையாது. புதிர்தான் போடுவேன். சரியான பதிலை சொல்றவங்களுக்கு அம்பது ரூபா பணம் உண்டுன்னு சொல்லி புதிர் போட ஆரம்பித்தார். "ஒரு ஊரில் அண்ட புளுகன், அபார புளுகன், ஆகாச புளுகன்னு மூணு பேர் இருந்தாங்க"
("புளுகன்னா யார் பாட்டி" என்று மனோ கேட்க "பொய் சொல்கிறவங்க" என்று விளக்கினாள் பாட்டி. )
அண்ட புளுகன் சொன்னான், 'நான் கடல் மண்ணை கயிறா திரிச்சேன்னு. அபார புளுகன் சொன்னான், 'அதில் நான் துணி காய போட்டேன்'னு. ஆகாச புளுகன் சொன்னான் 'அதை நான் பார்த்தேன்'னு. இந்த மூணு பேரில் யார் சொன்னது  
ரொம்பவும் பெரிய பொய்னு தாத்தா கேட்டார் என்று சொன்ன பாட்டி
"சரி பிரபு. தாத்தா மத்த குழந்தைக கிட்டே கேட்டது இருக்கட்டும். உன்கிட்டே நான் கேட்கிறேன். இந்த மூணு பேரில் யார் சொன்ன பொய் அப்பட்டமான   பொய் " என்று பாட்டி கேட்க "மணலை கயிறா திரிச்சேன்னு சொன்னது அப்பட்டமான பொய்"னு  பிரபு சொல்ல, "இல்லே ரெண்டாவது ஆள் சொன்னது அப்பட்டமான பொய்'ன்னு மனோ சொல்ல, "ரெண்டுமே இல்லே. செய்யவே முடியாத ஒரு காரியத்தை செய்து முடிச்சதா ரெண்டு பேர் சொல்ல, அதை தன் கண்ணாலே பார்த்ததா மூணாவது ஆள் சொன்னான் பாரு அதுதான் அப்பட்டமான பொய் என்று " சொல்லி முடித்த பாட்டி, "நான் தாத்தா பத்தி சொல்ல ஆரம்பிக்கும் போது, தாத்தா ஒரு பையனிடம் அவன் டிரஸ் பத்தி விசாரிச்சார். இன்னொரு பையனிடம் அவனோட அப்பா பத்தி விசாரிச்சார். அவங்களும் பதில் சொன்னாங்க. அதில் ஏதாவது தப்பு   இருந்ததா?" என்று கேட்க, "எந்த தப்பும் இல்லை" என்றார்கள் இருவரும். 
"அப்படியா ? தாத்தா பத்தி நான் சொன்ன கதையில் எத்தனை தப்புன்னு இவங்க சொல்வாங்க பாரு. நான் கதை சொல்லும்போதே அது தப்புன்னு இவங்க கண்டு பிடிச்சிட்டாங்க. அதனாலேதான் சிரிச்சாங்க. அது தெரியாமே நீங்க கோப பட்டது உண்மைதானே ?" என்று பாட்டி சொல்ல, "என்ன தப்புன்னு சொல்ல சொல்லு பாட்டி" என்றார்கள் இருவரும்.
"சிவா நீ சொல்லு " என்று பாட்டி சொல்ல, " தீபாவளி அமாவாசை அன்னிக்குத்தான் வரும். அன்னிக்கு நிலா வராது. அதனாலே மொட்டை மாடியில் நிலா வெளிச்சத்தில் உட்கார்ந்ததா சொன்னது ஒரு தப்பு. தீபாவளி முடிந்த மறு மாதம்தான் கார்த்திகை தீபம் வரும். அப்படியிருக்க 'போன மாசம் கார்த்திகை தீபத்துக்கு வாங்கின டிரஸ் இதுன்னு அந்த பையன் சொன்னதா சொன்னது அடுத்த தப்பு. காளை மாடுங்கிறது ஆண் மாடு. பசு மாடுதான் பால் தரும். காளை மாடு பால் தராது. அதில் சுப்பனோட அப்பா பால் கரந்ததா சொன்னது தப்பு. ஆடியிலே போட்ட ஆறு மாச பயிரை பொங்கலுக்கு முன்னாடிதான் அறுப்பாங்க. தீபாவளி சமயத்தில் அறுக்க முடியாது" என்று வரிசையாக அடுக்கிகொண்டே போக, "அடேயப்பா. இதில் இவ்வளவு விஷயம் இருக்கா? இதெல்லாம் எங்களுக்கு தெரியாது!" என்று வெளிப்படையாக ஒத்துக்கொண்டான் பிரபு.
"நாங்க கிளம்பறோம் பாட்டி" என்று எல்லோரும் கிளம்பிப்போன பின்பு,
"கிராமத்து குழந்தைகளுக்கு எதுவும் தெரியாதுன்னு நீ நினைசிட்டிருந்தே. உன் எண்ணம் தப்புன்னு புரிய வைக்கிறதுக்காகதான் நான் ஒரு கதை சொன்னேன்.
 அவங்கவங்க பிறந்து வளர்ந்து வாழ்கிற சூழ்நிலைமைக்கு தகுந்தாப்லே ஒவ்வொரு விசயத்தை தெரிஞ்சு வச்சிருப்பாங்க..அதை ஒவ்வொருத்தரும் மத்தவங்க கிட்டே பகிர்ந்துகிட்டு அவங்க வளர்ச்சிக்கு பயன் படுத்திக்கிடணும் , தன்னை தவிர மற்றவங்க எல்லாரும் எதுவும் தெரியாதவங்க என்ற நினைப்பு என்றைக்குமே வரக்கூடாது. இங்கேயும் ஸ்கூல் இருக்கு. குழந்தைங்க ஸ்கூலில் போய் படிக்கிறாங்க. அதனாலே உன் எண்ணத்தை மாத்திகிட்டு எப்பவும் அவங்களோடு சேர்ந்து விளையாடு. உனக்கு போரடிக்காது" என்று பாட்டி சொல்ல, "ஐயோ, தெரியாமே சொல்லிட்டேன். நான் சொன்னதையே சொல்லி சொல்லி போரடிக்காதே பாட்டி " என்று பிரபு சொல்ல, "டபுள் ஓகே " என்றாள் பாட்டி.

No comments:

Post a Comment