Labels

About myself Name : Kumari S. Arunachalam alias Aruna S. Shanmugam Occupation : Form

Tuesday, November 29, 2011

நம்மவங்க சொன்னதுதாங்க ! இப்ப நான் சொல்றேன் உங்களுக்கு ! - 02




அதிர்ஷ்டம் கெட்ட காலத்தில் கைத்தடியும் பாம்பாகும்.





அடிமை போல் உழைக்கணும். அரசன் போல் 
   உட்கார்ந்து     சாப்பிடணும்





அதிகம் யோசிப்பவன் சொற்பமாகத்தான்
   செய்து    முடிப்பான்.




அறுபதடி கம்பத்தில் ஏறி வித்தை காட்டினாலும்,
   தரைக்கு   வந்துதான்  தட்டு ஏந்தியாகணும்.





அடுப்பு புகையுமிடத்தில் பிச்சைக்காரனுக்கும்
    ஒரு பங்கு   இருக்கத்தான் செய்கிறது





அரண்மனை வாசற்படி அதிகம் வழுக்கும்.







அழகாபுரி கொள்ளையானாலும் அதிர்ஷ்டம்
    இல்லாதவனுக்கு  ஒன்றும் கிடைக்காது





அதிர்ஷ்டம் இல்லாதவனுக்கு  ஆழாக்கு பால்
    கிடைத்தாலும்  அதையும் பூனை குடிக்குமாம்






அடுக்குகிற அருமை உடைக்கிற நாய்க்கு தெரியாது.





அண்டத்தை சுமக்கிறவனுக்கு சுண்டைக்காய் ஒரு  
    பாரமா?

No comments:

Post a Comment