$ அதிர்ஷ்டம் கெட்ட காலத்தில் கைத்தடியும் பாம்பாகும்.
$ அடிமை போல் உழைக்கணும். அரசன் போல்
உட்கார்ந்து சாப்பிடணும்
$ அதிகம் யோசிப்பவன் சொற்பமாகத்தான்
செய்து முடிப்பான்.
$ அறுபதடி கம்பத்தில் ஏறி வித்தை காட்டினாலும்,
தரைக்கு வந்துதான் தட்டு ஏந்தியாகணும்.
$ அடுப்பு புகையுமிடத்தில் பிச்சைக்காரனுக்கும்
ஒரு பங்கு இருக்கத்தான் செய்கிறது
$ அரண்மனை வாசற்படி அதிகம் வழுக்கும்.
$ அழகாபுரி கொள்ளையானாலும் அதிர்ஷ்டம்
இல்லாதவனுக்கு ஒன்றும் கிடைக்காது
$ அதிர்ஷ்டம் இல்லாதவனுக்கு ஆழாக்கு பால்
கிடைத்தாலும் அதையும் பூனை குடிக்குமாம்
$ அடுக்குகிற அருமை உடைக்கிற நாய்க்கு தெரியாது.
$ அண்டத்தை சுமக்கிறவனுக்கு சுண்டைக்காய் ஒரு
பாரமா?
No comments:
Post a Comment