Labels

About myself Name : Kumari S. Arunachalam alias Aruna S. Shanmugam Occupation : Form

Thursday, November 24, 2011

நம்மவங்க சொன்னதுதாங்க ! இப்ப நான் சொல்றேன் உங்களுக்கு ! - 01

* அற்பப்புத்திகாரன் கைகளில் அதிகாரம்
   வந்தால் அண்டை வீட்டுக்கார்களுக்கு
   இரைச்சல்தான் மிச்சம்.

அரைக்காசுக்கு தோணியும் வேண்டும் ; 
   அது ஆற்றை  கிழிச்சிகிட்டு பாயவும் 
   வேண்டும் !


* அன்ன நடை நடக்கபோய் காகம் தன்
   சொந்த நடையை    இழந்ததாம்.




அணில் தள்ளி தென்னை சாயுமா ?





அன்பற்ற மாமிக்கு கும்பிடும் ஒரு குற்றமே !




அமாவாசை இருட்டில் பெருச்சாளி 
    போனதெல்லாம் வழிதான் !




அறுக்கதெரியாதவன் இடுப்பில் 
    ஐம்பத்தெட்டு அரிவாள் !



அறுவடை காலத்தில் எலிக்கும் 
அஞ்சு  பெஞ்சாதி.



அறப்படித்தவன் அங்காடி போனால் 
    விற்கவும் மாட்டான்;  வாங்கவும்
   மாட்டான்.

அங்காடிகாரியை சங்கீதம் பாட 
    சொன்னால் வெங்காயம்,  கறிவேப்பிலை
    என்பாள்.

No comments:

Post a Comment