Labels

About myself Name : Kumari S. Arunachalam alias Aruna S. Shanmugam Occupation : Form

Saturday, January 11, 2020

மார்கழித் திங்கள் - 27



திருப்பாவை - 27


கூடாரை வெல்லும் சீர் கோவிந்தா உந்தனைப்
பாடிப் பறை கொண்டு யாம் பெறும் சம்மானம்
நாடு புகழும் பரிசினால் நன்றாகச்
சூடகமே தோள் வளையே தோடே செவிப் பூவே
பாடகமே என்றனைய பலகலனும் யாம் அணிவோம்
ஆடை உடுப்போம் அதன் பின்னே பாற் சோறு
மூட நெய் பெய்து முழங்கை வழி வாரக்
கூடி இருந்து குளிர்ந்தேலோர் எம்பாவாய்

திருப்பள்ளியெழுச்சி - 07


அதுபழச் சுவையென அமுதென அறிதற்கு 
அரிதென எளிதென அமரரும் அறியார் ;
இதுஅவன் திருவுரு,இவன் அவன் எனவே 
எங்களை ஆண்டுகொண்டு இன்னருள் புரியும் 
மதுவளர் பொழில்திரு உத்தரகோச 
மங்கையுள்ளாய்! திருப்பெருந்துறை மன்னா!
எது எமைப் பணிகொள்ளும் ஆறு?அது கேட்போம்; 
எம்பெருமான் பள்ளி எழுந்தருளாயே !

No comments:

Post a Comment