Labels

About myself Name : Kumari S. Arunachalam alias Aruna S. Shanmugam Occupation : Form

Friday, January 10, 2020

மார்கழித் திங்கள் - 26


திருப்பாவை - 26


மாலே. மணிவண்ணா. மார்கழி நீராடுவான்
மேலையார் செய்வனகள் வேண்டுவன கேட்டியேல்
ஞாலத்தை எல்லாம் நடுங்க முரல்வன
பால் அன்ன வண்ணத்து உன் பாஞ்ச சன்னியமே
போல்வன சங்கங்கள் போய்ப் பாடுடையனவே
சாலப் பெரும் பறையே பல்லாண்டு இசைப்பாரே
கோல விளக்கே கொடியே விதானமே
ஆலின் இலையாய் அருளேலோர் எம்பாவாய்

திருப்பள்ளியெழுச்சி - 06


பப்பற வீட்டிருந்துணரும் நின் அடியார் 
பந்தனை வந்தறுத்தார் அவர் பலரும்
மைப்புறு கண்ணியர் மானுடத்தியல்பின் 
வணங்குகின்றார் அணங்கின் மணவாளா!
செப்புறு கமலம் கண் மலருந்தண்வயல் சூழ் 
திருப்பெருந் துறையுறை சிவபெருமானே!
இப்பிறப்பறுத்தெமை ஆண்டருள் புரியும் 
எம்பெருமான் பள்ளி எழுந்தருளாயே !

No comments:

Post a Comment