DEAR VIEWERS,
நடந்து முடிந்த பொதுத் தேர்தலின் போது பொது ஜனங்களோடு க்யூ வரிசையில் நின்று சில பிரபலங்கள் வாக்களித்ததை ஏதோ உலக சாதனை மாதிரி படம் பிடித்து மீடியாக்கள் ஒளிபரப்பிக் கொண்டிருந்தன.
அதே போல க்யூ வரிசையில் நின்று அத்தி வரதரை தரிசித்த பிரபலம் யாராவது இருந்தால் அதை ஒளிபரப்புங்களேன்.
இதை நான் பதிவு செய்ய ஒரு காரணம் உண்டு.
16.07.2019 அன்று நானும் வரதரை தரிசிக்கப் போனேன். (முதலில் 18.07.2019ல் போவதாக பிளான். ஆனால் அன்று திருவோண நட்சத்திரம். கூட்டம் அதிகம் இருக்கும் என்பதால் இரண்டு நாட்கள் முன்பே போய் வந்தோம்) சீனியர் சிட்டிஸன் வரிசையில் நின்று இரண்டு மணி நேரத்தில் பெருமாள் தரிசனம் முடித்தோம்.
கோவிலை விட்டு வெளியில் வந்தோம். யாரோ ஒரு பிரமுகர் / பிரபலம்.
அவரை சுற்றி துப்பாக்கி ஏந்தாத குறையாக சுமார் 10 போலீஸ் அதிகாரிகள். அவரை வரதர் இருக்கும் இடத்துக்கு நேராக அழைத்து சென்றார்கள்.
வலுத்தவன் வகுத்ததுதான் வாழ்க்கை நெறி என்றால் சட்டத்திட்டம், கடவுள் எல்லாம் எதற்காக. (இதே டாபிக்கை விலாவாரியாக உங்களோடு பேசணும். இப்போ நேரமில்லே. அப்புறம் பேசறேன்.)
சயன கோலத்தில் இருக்கும் பெருமாள் நின்ற கோலத்தில் இருப்பார் என்றும், அவரைப் பார்க்க பிரதமர் வருவார் என்றும் பேசிக் கொண்டார்கள்.
மோடிஜீ , உங்களிடம் ஒரு பணிவான விண்ணப்பம். நீங்கள் வர்றப்ப உங்கள் பின்னோடு ஒட்டிக்கொண்டு வரும் கும்பலோடு கும்பலாக நானும் ஒட்டிக் கொண்டு வர ஒரு சந்தர்ப்பம் ஏற்படுத்தி தாருங்களேன்.
பெருமாளை நின்ற கோலத்தில் தரிசிக்க எனக்கும் ஆசை. (நான் தீவிர பெருமாள் பக்தை )
இப்போதெல்லாம் ஆண்டவனால் நிறைவேற்ற முடியாத கோரிக்கைகளை க் கூட ஆள்பவர்கள் நிறைவேற்றி விடுகிறார்கள். அந்த நம்பிக்கையில் கேட்கிறேன்.
என் ஆசை நிறைவேறுமா ? இந்தியப் பிரஜை என்கிற உரிமையில் இந்த கோரிக்கையை உங்கள் முன் வைக்க எனக்கு உரிமை உண்டுதானே?
(Dear Viewers.. அட .. ஏதோ கேலி கிண்டலுக்காக இதை நான் பதிவு செய்கிறேன் என்று நீங்கள் நினைத்தால்... அது உங்கள் எண்ணம். அவ்வளவே )
No comments:
Post a Comment