( குறிப்பு : ஒவ்வொரு புதிரிலும் கோடிட்ட இடங்கள் இரண்டு உள்ளன. இரண்டிலும் வர வேண்டியது ஒரே ஒரு வார்த்தைதான். ஆனால் பிரித்து எழுதும்போது இரண்டு விதமான அர்த்தங்களைத் தரும்.)
புதிர் எண் 11
புதிர் எண் 11
" இதோ பாரும்மா.. எம்மாம் மாப்பிள்ளை ... ஐ மீன் .. எத்தனை மாப்பிள்ளை ஃபோட்டோ கொண்டு வந்திருக்கிறேன்னு. உனக்கு எம்மாப்பிள்ளை பிடிச்சிருக்குனு சொல்லு " என்று கல்யாண தரகர் டீப்பாய் மீது ஃபோட்டோக்களைப் பரப்ப, தள்ளி நின்றே அனைத்தையும் பார்த்த வித்யா "எனக்கு "- - - - - - -" பிடிச்சிருக்கு " என்றாள் குறும்புச் சிரிப்புடன் .
அவள் காட்டிய ஃபோட்டோவை கையில் எடுத்த அம்மா, "இந்த வரனா ? இவன் வேண்டவே வேண்டாம். என் ஃப்ரெண்ட் ஜானகியோட பொண்ணுக்கு இந்த வரன் வந்துச்சு. விசாரிச்சு பார்த்துட்டு வேண்டாம்னு சொல்லிட்டா.. நமக்கும் வேண்டாம் " என்றாள்.
"ஏன்?"
"அதான் நீ கொஞ்சம் முன்னே சொன்னியே..அதுமாதிரி இவன் " - - - - - - - ". எந்தவொரு விஷயத்திலும் சுயமா முடிவு எடுக்கத் தெரியாத பக்கி" என்றாள் அம்மா.
"ரமேஷ், நாளைக்கு டெல்லியிலிருந்து என் அக்கா பொண்ணு ரம்யா ஒரு இன்டெர்வியூ அட்டென்ட் பண்ண சென்னைக்கு வர்றா. எனக்கு ஆபீசில் வேலை அதிகம்.. சீக்கிரம் வேறு போகணும். அதனாலே அவளை ரிஸீவ் பண்றது, அவ சொல்ற இடத்துக்கு அழைச்சிட்டு போறது வருவது எல்லாமே உன்னோட பொறுப்பு " என்றார் அப்பா.
இந்த விஷயத்தை உடனேயே ராகவ் காதில் போடாவிட்டால் தலையே வெடித்து விடும் போலிருந்தது ரமேஷுக்கு .
போனில் நண்பனை தொடர்பு கொண்டு, " என்ன ..பிஸியா? ஃப்ரீயா?" என்றான்.
"இன்னியோடு மார்கழி மாசம் முடிஞ்சு நாளைக்கு தை மாசம் பிறக்கப்போகுதே. "தை" தமிழர்களின் செல்லப்பெண் அல்லவா " - - - - - - " வரவேற்க வீட்டை டெக்கரேட் பண்றதில் மும்முரமா இருக்கிறேன்... நீ ..?"
"நானும் " - - - - - - " வரவேற்க ரொம்ப பிஸியா இருக்கிறேன் " என்றான் ரமேஷ்,
இந்த விஷயத்தை உடனேயே ராகவ் காதில் போடாவிட்டால் தலையே வெடித்து விடும் போலிருந்தது ரமேஷுக்கு .
போனில் நண்பனை தொடர்பு கொண்டு, " என்ன ..பிஸியா? ஃப்ரீயா?" என்றான்.
"இன்னியோடு மார்கழி மாசம் முடிஞ்சு நாளைக்கு தை மாசம் பிறக்கப்போகுதே. "தை" தமிழர்களின் செல்லப்பெண் அல்லவா " - - - - - - " வரவேற்க வீட்டை டெக்கரேட் பண்றதில் மும்முரமா இருக்கிறேன்... நீ ..?"
"நானும் " - - - - - - " வரவேற்க ரொம்ப பிஸியா இருக்கிறேன் " என்றான் ரமேஷ்,
புதிர் எண் 13
டீ குடித்துவிட்டு கம்பெனிக்குள் வேகமாக வந்த வேன் டிரைவர், வேனில் அளவுக்கு அதிகமாக ஏற்றப்பட்டிருந்த பிளாஸ்டிக் பாத்திரங்கள் சரிந்து கீழே விழுந்துவிடுமோ என்கிற பயத்தில், வேனை சுற்றிச்சுற்றி வந்து மூட்டைகளை தட்டித் தடவிப் பார்த்துக் கொண்டிருந்தான்.
அவன் எண்ணத்தைப் புரிந்து கொண்ட சூப்பர்வைஸர், "தம்பி.. நீங்க வேலைக்கு புதுசு. அதான் பயப்படறீங்க. என் செர்வீசில் இதைப் போல எத்தனை லோட் கட்டி அனுப்பி இருக்கிறேன். கொண்டு போங்கப்பா.. இதிலே எதுவும் "- - - - - - " என்றார்.
அவரருகில் நின்று கொண்டிருந்த மற்றொருவரிடம் இவர் சொல்றது "- - - - - - " என்று டிரைவர் கேட்க, "எல்லாம் சரிதான்; நீ வண்டியை எடு " என்றார் அவர்.
புதிர் எண் 14
"என்னப்பா .. உன்னை நம்பி பணத்தைக் கொடுத்துட்டு, சரக்கை எடுத்து வைனு சொல்லிட்டுப் போயிட்டேன். இருநூறு தேங்காய்.. நீயும் மூட்டை கட்டி வச்சிட்டே. " - - - - - " சரியா இருக்குந்தானே ?".
"தலைமுறை தலைமுறையா வியாபாரம் செய்றோம். ஜனங்க வாங்கிட்டுப் போறாங்க. உங்களுக்கு சந்தேகம் இருந்தா சொல்லுங்க ஸார், தேங்காயை " - - - - -" யிலே தர்றேன். நீங்க உங்க கையாலேயே கட்டி எடுத்துட்டுப் போங்க ஸார் " என்றார் தேங்காய் வியாபாரி.
புதிர் எண் 15
"அப்பா சொன்னாரேன்னு வந்தேன். ஆனா இந்த சாமியார் பேராசை பேர்வழி போலிருக்கு" தனக்குத்தானே சாரதி சொல்லிக் கொண்டிருந்தது பக்கத்திலிருப்
"சாமியார் அந்த மாதிரி பேராசை பிடிச்ச ஆள் இல்லே" என்றார் அவர்.
"பின்னே என்ன ஸார் .. அப்பா சொன்னாரேன்னு புதுசா தொழில் தொடங்கும் முன்னே இவர்கிட்டே ஆசீர்வாதம் வாங்க வந்தேன். பழத்தட்டில் பத்தாயிரம் ரூபா வச்சிருக்கிறேன். நான் யார், என்ன தொழில் செய்யப்போறேன்னதும் அவர் இன்னும் அதிகமாக எதிர் பார்க்கிறார் போலிருக்குது . - - - - - - கொண்டு வானு சொல்றார் "
"எதை வச்சு அப்படி சொல்றீங்க .. என்ன தொழில் பண்ணப்போறீங்க ?"
"தாதுப் பொருள் விற்கிற , வாங்கிற தொழில் பண்ணப்போறேன்."
"தம்பி ... அவர் உங்க கிட்டே " - - - - - - " கொண்டு வான்னு சொல்லி இருக்கிறார். "
"அது எதுக்கு இவருக்கு?"
"அதை அவர் கையால் ஆசீர்வாதம் பண்ணித் தரத்தான் " என்று இவர் விளக்கவும்,வெட்கத்தால் தலை குனிந்தான் சாரதி.
No comments:
Post a Comment