Labels

About myself Name : Kumari S. Arunachalam alias Aruna S. Shanmugam Occupation : Form

Saturday, May 20, 2017

ஓ பாட்டி நல்ல பாட்டி தான் - 02


Image result for image of Tamilnadu old lady
பாட்டி: இந்த செருப்பை ஏன் மூலையிலேயே போட்டு வச்சிருக்கிறே? வெளியிலே போறச்சே யாராவது போட்டுட்டுப் போறதுதானே? நானும் தினமும் சொல்லுதேன். யாராவது அதைக் காதுல வாங்குதீங்களா ?"
மகன்: அது அறுந்து போயிட்டும்மா. தூக்கிக் குப்பையிலே போடணும். வாசலில் குப்பை லாரி வரும்போது எடுத்துப்  போடணும்.
பாட்டி : அறுந்தா என்ன? தைச்சுப் போட்டுக்கிறதுதானே?
மகன்;   செருப்பு பூரா தையல்தான் இருக்கு... இன்னும் என்னத்த தைக்கிறது.
மருமகள்: என்னங்க உங்க அம்மா அந்த செருப்பைத் தூக்கிப்போட விட மாட்டேங்கிறாங்க. யாருக்காவது உதவும்ணு பத்திரப்படுத்தி வைக்கிறாங்க.       வீட்டு வாசலில் திருஷ்டிப்புள்ளி மாதிரி அறுந்து போன செருப்பு. ச்சே..
பாட்டி: பேராண்டி, நீயாவது போய் அந்த செருப்பைத் தைச்சு எடுத்துட்டு வாயேன். யாராது அவசரத்துக்குப் போட்டுக்கலாந்தானே.
சரியென்று சொல்லி அதை பேரன் எடுத்துச் செல்ல
பாட்டி : என் பேரன்னா பேரன்தான்.  அவன் ஒருத்தனுக்குத்தான் என்னைப் போலவே காசோட அருமை தெரிஞ்சிருக்கு. நான் ஒரு வார்த்தை சொன்னதுமே செருப்பைக் கையிலே   எடுத்துட்டுப் போயிட்டானே.
சிறிது நேரம் தெருவில்  நின்று வேடிக்கை பார்த்துவிட்டு விட்டு உள்ளே வந்த 
பேரன் :: பாட்டி... இந்த செருப்பு ரொம்பப் பளபளனு இருக்குதாம். செருப்புத் தைக்கிறவனுக்குக் கண்ணே கூசுதாம். தைக்க  முடியலேனு சொல்லிட்டான்.
பாட்டி: அடப்பாவமே. அவன் கண்ணைக் கெடுத்த பாவம் நமக்கு வேணாம்டா. உடனே தூக்கித் தூர வீசு.
மகன்:   அப்பாடா.. எப்படியோ.. செருப்புக்கு விமோசனம் கிடைச்சா சரிதான். வீட்டை விட்டுப் போனால் சரிதான்.

No comments:

Post a Comment